என் காதலி

யாரும் காதலிக்கவில்லை
என்னை
நானே தேடிக்கொண்டேன்
என் காதலியை.
உலகில் எங்கும் கானாத
உற்சாகம்
உல்லாசம் அவளோடு...
சொர்க்கம்
உரசிச்சென்ற உணர்வு
அவள் ஸ்பரிசம்
தீண்டும் நிகழ்வு...
உதடுகளில் மோதி
நாக்கில் வழிந்தோடி
உயிரின் ஆழம் வரை
உரசிச்செல்கிறது
அவள் முத்தச்சுவை...
தாகமானாலும்
மோகமானாலும்
தீர்த்து வைக்கிறாள்
என் காதலி
தேநீர்....!


ரியாஸ்,

வாழ்க்கை பாடம் - ஆர்தர் ஆசே

 Arthur Ashe 1960 - 1970 களில் உலகப்புகழ்பெற்ற டென்னிஸ் விளையாட்டு வீரர். இவர் 1943 யில் அமெரிக்காவில் பிறந்தார். இவர் டென்னிஸ் போட்டிகளில் 7 முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று மூன்று முறை சம்பியன் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதலாவது ஆபிரிக்க அமெரிக்க இனத்தவர் இவரே.. இவருடைய வாழ்நாளில் இவர் ஒர் சிறந்ததொரு விளையாட்டு வீரராக மாத்திரமின்றி நல்லதொரு மனிதராகவுகம் விளங்கினார்..

உலகப்புகழ்பெற்ற இவரின் வாழ்க்கையின் இறுதிக்காலம் துயரமானதாக ஆனது காரணம் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட இருதய சத்திரசிகிச்சையின் போது இரத்தம் தேவைப்படவே. தவறுதலாக எயிட்ஸ் நோயாளி ஒருவரின் இரத்தம் ஏற்றப்பட்டது அதன் காரணமாக அந்த கொடிய எயிட்ஸ் இவருக்கும் தொற்றிக்கொண்டது. 10 வருடங்கள் இதனால் அவதிப்பட்டு தனது 50 வது வயதில் 1993 யில் உயிர்நீத்தார்..

இவருடைய இறுதிக்கால கட்டத்தில் உலகெங்கிலுமுள்ள இவருடைய ரசிகர்கள் இவருக்கு அனுதாப கடிதங்களை அனுப்பிவைத்தனர்.. அதில் ஒரு கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.. கடவுள் ஏன் உங்களை  தெரிவு செய்தான் இவ்வாறானதொரு துன்பத்துக்கு. அதற்கு அவர் இவ்வாறு பதில் எழுதியிருந்தாராம்..

உலகெங்கிலும் 50 மில்லியன் சிறுவர்கள் டென்னிஸ் விளையாட ஆரம்பிக்கிறார்கள்.
அவர்களில் 50 மில்லியன் பேர் டென்னிஸ் விளையாட கற்றுக்கொள்கிறார்கள்.
அவர்களில் 5 இலட்சம் பேர் டென்னிசை professional ஆக கற்றுக்கொள்கிறார்கள்
அவர்களில் 50,000 பேர் விளையாட்டில் தேர்வு பெறுகிறார்கள்
அவர்களில் 5000 பேர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்குபெறும் தகுதியை பெறுகிறார்கள்.
அவர்களில் 50 பேர் விம்பிள்டன் போட்டிகளில் பங்குபெறுகிறார்கள்.
அவர்களில் 4 பேர் அரையிறுதிப்போட்டிக்கும் 2 பேர் இறுதிப்போட்டிக்கும் தெரிவுசெய்யப்பட்டு இறுதியில் நான் சம்பியன் ஆகிறேன்

அப்போது நான் ஒரு போதும் கடவுளிடம் கேட்பதில்லை ஏன் என்னை தெரிவு செய்தாய் என்று இன்று ஒரு துன்பத்தால் பாதிக்கப்படும் போது மட்டும் என்னால் எப்படி கேட்க முடியும் என்னை ஏன் இதற்கு தெரிவு செய்தாய் என்று.. இப்படி பதில் எழுதியிருந்தாராம்..

                                             ஜனாதிபதி ரேகனை சந்தித்த போது

சந்தோஷங்கள் உங்களை மகிழ்ச்சியாக்கலாம்
தோல்விகள் உங்களை மனிதனாக்கலாம்..

ரியாஸ்,

எப்பூடி...!

இப்படி நடந்தால் எப்படியிருக்கும்....








இரவுக்கிறுக்கல்....!

சேலை...

தேடி அலைகிறேன்
தாயின் சேலைக்குள்
ஒளிந்து விளையாடிய
காலங்களை....!


தூக்கம்...

இறந்து போகிறேன்
மீண்டும் எழுகிறேன்
இன்னும்
உலகின் மடியில்....!

பூனை...

கண்னை மூடிக்கொள்கிறேன்
யாருமில்லை உலகில்
நான் மட்டும்
பூமியில்...!

உலகம்...

இறந்து போன நேற்று
பிறந்த இன்று
பிறக்காத நாளை...!

யுத்தம்...

உயிரிரைக்கொல்லும்
உயிரில்லா
மிருகம்...!

வறுமை...

ஏழை வீட்டு
செல்லக்குழந்தை...!

நீ ஒரு தாஜமஹால்...!


நீ ஒரு தாஜமஹால்
நித்தம் ரசிக்கிறது மனசு
தூரத்து நிலவை ரசிக்கும்
குழந்தையாய்..!
உன்னைப்பார்க்கும் பொழுதுகள்
என் விழிகளுக்கு
பண்டிகை...!
பாலைவனத்தில்
பருவபெயர்ச்சி மழையாய்
உன் புன்னகைகள்
துள்ளிக்குதிக்கிறது மனசு
நீண்ட கோடைக்குப்பின்
மழை கண்ட
விவசாயியாய்...!
பார்வைகளாலே பரிமாறுகிறாய்
புசிக்காமலே பசியாறுகிறேன்
கோடி வார்த்தைகள்
கோர்க்கிறேன் தினமும்
உன்னோடு பேச.
உன்னருகில் வந்ததும்
தவிக்கிறேன் வார்த்தைகளுக்காய்
வார்த்தை தேடும்
இந்த கவிதையாய்...!




இயக்குனர் சேரன்..!

தமிழ் திரையில் பல இயக்குனர்கள் வந்தபோதிலும் கொஞ்சபேரால் மட்டுமே நின்று நிலைக்க முடிந்துள்ளது. என்பதுகளிலிருந்து பார்த்தால் பாலச்சந்தர்,பாரதிராஜா,பாக்யராஜ்,பாலுமகேந்திரா,சுந்தர்ராஜன்,மகேந்திரன்,பாசில் நீண்டு செல்லும் அந்த வரிசையில்.. இயக்குனர் சேரன் அதிகளவு படங்களை இயக்காவிட்டாலும் தான் இயக்கிய ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விஷயத்தை அழகாக சொல்லிக்காட்டியிருப்பார்.. அன்மைக்கால இயக்குனர்களில் பெண் உடம்பையும்,ஹீரோயிசைத்தையும் மட்டும் நம்பாமல் கதையை மட்டும் நம்பி படம் எடுப்பவர்களில் இந்த சேரன் என்னை மிகவும் கவர்ந்தவர்..




அவர் இயக்கிய திரைப்படங்களை வரிசையாக நோக்கினால்..


1. பாரதிகண்ணமா.
சேரன் இயக்கிய முதல் படம் இது. 1997 யில் வெளிவந்தது. ஜாதி ஏற்றத்தாழ்வுகளுக்கிடையில் சிக்கித்தவிக்கும் காதலை மிகச்சிறப்பாக சொல்லியிருப்பார். இதில் பார்த்திபன்,மீனா,விஜயகுமார்,வடிவேலு ஆகியோர் நடித்திருந்தினர். வர்த்தகரீதியாகவும் நல்ல வெற்றியைப்பெற்றது இந்தப்படம். இசை தேவா பாடல்களும் ஹிட்.


2. பொற்காலம்.
1998 யில் வெளியான படம். ஊனமுற்றவர்களும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டியவர்கள் என்ற கருத்தை மிக அழகாக சொன்ன படம். சிறந்த சமூகநல கருத்துக்களும் இதிலிருந்தன, இப்படத்தில் முரளி,மீனா,சங்கவி,வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். இசை தேவா பாடல்கள் சூப்பர் ஹிட் ( ஊனம்


3. தேசிய கீதம்
இத்திரைப்படத்தை இன்னும் நான் பார்த்ததில்லை. இதுவும் 1998 யில் வெளிவந்தது. முரளி,ரம்பா,நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப்படம் சேரனுக்கு மிகப்பெரும் தோல்விப்படமாக அமைந்தது.


4.வெற்றி கொடி கட்டு
வெளிநாட்டு வேலைவாய்ப்பை மட்டும் நம்பி காலத்தை வீனாக்குபவர்களுக்கு உள்நாட்டிலேயே உண்மையாக உழைத்தால் முன்னேறலாம் என்ற கருத்தைக்கொண்ட அருமையான படம். நல்ல சமூக நல கருத்துகளும் இப்படத்திலிருந்தன இதற்காக சமூக பிரச்சினைகளை அலசிய படத்துக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொண்டது. இப்படத்தில் பார்த்திபன்,முரளி,மீனா,மாளவிகா,வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். வடிவேலுவின் காமெடி கலக்கலாக இருக்கும். இசை தேவா "கருப்புத்தான் எனக்குப்பிடித்த கலரு" பாடல் கருப்பர்களின் தேசிய கீதமாகவே மாறியது.


5.பாண்டவர் பூமி.
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு பாசமான குடும்பத்தில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வால் ஏற்பட்ட மாற்றங்களை சொன்ன படம். இப்படத்தின் கதை ஒரு வீட்டை மையமாக வைத்தே அமைக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் அருன்விஜய்,சமிதா,ராஜ்கிரன்,ரஞ்சித் ஆகியோர் நடித்திருந்தனர். இசை பரத்வாஜ் " அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்" என்ற பாடல் பலரின் விருப்பப்பாடல் இன்றுவரை.


6.ஒட்டோ கிராப்
நாம் கடந்துவந்த வாழ்க்கைப்பாதையினை திரும்பிபார்க்கவைத்த படம்.சேரனுக்கு அதிகளவு புகழை ஈட்டிக்கொடுத்த படம். சேரன் அவரே நாயகனாக திரையில் தோன்றி நடித்த முதல் படம். சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மானில விருது சேரனுக்கு கிடைத்தது. இசை பரத்வாஜ் பாடல்கள் சூப்பர்ஹிட்.. "ஒவ்வொரு பூக்களுமே" என்ற பாடல் நம்பிக்கையின் தேசிய கீதமாகவே மாறிப்போனது இப்பாடலை எழுதியதற்காக பா.விஜய்யிக்கும் பாடலை பாடியதற்காக சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்தது 
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்....
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்.....


7.தவமாய் தவமிருந்து
தன் குடும்பத்துக்காக கஷ்டப்பட்டு உழைத்த தந்தையின் நினைவுகளை சுமந்த படம். எனக்குத்தெரிந்தவரையில் தந்தையை பற்றி அழுத்தமாக அழகாக சொன்ன படம் இதுதான் என்பேன். சிறந்த குடும்ப நல கருத்துக்களுக்கான படமாக தேசிய விருதையும் பெற்றுக்கொண்டது இந்தப்படம். இதில் தந்தையாக ராஜ்கிரனின் நடிப்பு அபாரமாகயிருந்தது. மிக மெதுவான திரைக்கதையும் படத்தின் நீளமும் படத்தின் குறைபாடுகள் எனலாம..


8. மாயக்கண்ணாடி
அளவுக்கதிகம் பேராசை கொள்ளாமல் கிடைக்கும் வேலையை நேசித்து ஈடுபாடுடன் செய்தாலே வாழ்க்கையில் வெற்றிபெறலாம் என்ற கதையம்சத்தைக்கொண்ட படம் இது. இதில் சேரன் கொஞ்சம் வித்தியாசமான முறையில் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக நவ்யா நாயர். இசை இளையராஜா "உலகிலே அழகி நீதான் என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.


9. பொக்கிஷம்.
கடிதங்களால் இலக்கியம் கலந்த ஒரு காதல் பயணம். கதை 1970 களில் நடைபெறுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டவிதம் அருமை. இதற்காகவேண்டியே சேரனுக்கு ஒரு சபாஷ் போடலாம். ஒளிப்பதிவு பிரமாதம். சபேஷ் முரளியின் இசையில் யுகபாரதியின் பாடல் வரிகளில் பாடல்கள் எல்லாம் கவிதை கலந்த அழகு.. ஒவ்வொரு நிகழ்வுகளையும் சின்ன சின்ன பாடல்களாக அமைத்தது நல்ல ரசனை. மசாலா படவிரும்பிகளுக்கு இப்படம் பிடித்திருக்க வாய்ப்பில்லை.


இதைவிட சேரன் சொல்ல மறந்த கதை, பிரிவோம் சந்திப்போம்,ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்..
இந்தப்பதிவு எப்படியிருக்கென்று சும்மா சொல்லிட்டுப்போங்க..

காட்டு ராஜாவின் நிலை

பாகிஸ்தானின் ஒரு பின் தங்கிய நிலையிலுள்ள மிருககாட்சிசாலையில் ஒரு சிங்கம் வாழ்ந்து வந்தது.. அந்த சிங்கத்துக்கு ஒரு நாளைக்கு உணவாக 2 கிலோ இறைச்சி மாத்திரம் வழங்கப்பட்டுவந்தது. அந்த உணவு அந்த சிங்கத்தின் பசியை தீர்க்க போதுமானதாக இருக்கவில்லை.. இதிலிருந்து எப்படியாவது விடுதலை பெறவேண்டும் என்ற ஏக்கம் கலந்த எண்ணத்துடன் வாழ்ந்து வந்தது.

அவ்வாறிருக்கும் பொழுது ஒருநாள் துபாய் மிருக காட்சிசாலையின் உரிமையாளர் ஒருவர் பாகிஸ்தானுக்கு வருகைதந்த சமயம் இந்த மிருககாட்சிசாலையையும் பார்வையிட்டார். அப்போது இந்த சிங்கமும் கண்ணில்படவே அதை துபாய்க்கு கொண்டுவர ஆசைப்பட்டு அந்த நிர்வாகிகளிடம் அனுமதியும் பெற்றார்.

இதைக்கேள்விப்பட்ட சிங்கத்துக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை.. துபாய் சொகுசு வாழ்க்கையை நினைத்து கனவு கான ஆரம்பித்துவிட்டது. சொகுசு குளிரூட்டப்பட்ட அறை உணவாக ஒரு நாளைக்கு இரண்டு மூன்று ஆடுகள் கிடைக்கலாம் என பேராசை கொண்டது..

நினைத்த்து போலவே துபாய் வந்தாகிவிட்டது.. மிருககாட்சிசாலைக்கு கொண்டுவந்து ஒரு சிறிய அறையில் அடைத்துவைத்து முதல் நாள் காலை உணவாக ஒரு பை வந்தது அதை பிரித்துப்பார்த்ததும் சிங்கத்துக்கு ஒரே ஆச்சரியம் அந்த பைக்குள் ஒரு சில வாழைப்பழம் மட்டுமே இருந்தது.. சிங்கம் நினைத்துக்கொண்டது நாம் இப்போதுதானே வந்திருக்கிறோம் தவறுதலாகயிருக்கலாம் என நினைத்துக்கொண்டது.

தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் அவ்வாறாகவே நடந்தது அதையும் சிங்கம் பெரிதாக எடுக்கவில்லை மூன்றாவது நாளும் அதை உணவே சிங்கத்துக்கு வழங்கப்பட்டது.. சிங்கத்துக்கு பெரும் கோபம் ஏற்பட்டது உணவு கொண்டுவந்த பையனை இழுத்து அறைவிட்டு கேட்டது உங்களுக்கு பைத்தியமா பிடித்துவிட்டது ஏன் இவ்வாறு செய்கிறீர்கள். நான் யார் தெரியுமா காட்டுக்கே ராஜா. நான் இறைச்சிதான் உண்பேன் என்பது உங்களுக்கு தெரியாதா என்றது.

அதற்கு அந்தப்பையன் அமைதியாக சொன்னான். சார் நீங்கள் காட்டுக்கே ராஜாவாக இருக்கலாம். நீங்கள் இறைச்சி மாத்திரம்தான் உண்பீர்கள் என்பதும் எங்களுக்கு தெரியும். ஆனால் நீங்கள் பாகிஸ்தானிலிருந்து துபாய் வந்தது குரங்கு வீசாவில் அதனால வாழைப்பழம் மாத்திரமே உங்கள் உணவாக அனுமதிக்கப்படுகிறது என்றான்.. அதைக்கேட்ட சிங்கம் திகைத்துப்போய் வீசாவில் இப்படியெல்லாம் குளறுபடிகள் செய்கிறார்களா.. பாகிஸ்தானுக்கே திரும்பிச்செல்ல ஏதும் வழியுண்டா என விசாரித்தது அப்பாவியாக...

என்னைக்கவர்ந்த பத்து பதிவுகள்

நாம் ஒவ்வொரு நாளும் எத்தனையோ பதிவுகள் படிக்கிறோம் அவற்றில் சில மிக சுவாரஷ்யமானதாகயிருக்கும் அவ்வாறான பதிவுகள் எம்மனதோடு ஒட்டிவிடும்.. அவ்வாறு என் மனதைக்கவர்ந்த எத்தனையோ பதிவுகளில் பத்து பதிவுகளைப்பற்றி இங்கே சொல்லப்போகிறேன்.




# தேவாவின்  வாய்மை  என்ற பதிவு. ஏழை விவசாயி ஒருவர் அரசாங்க அலுவலகமொன்றில் பட்ட அவமானங்களை அழகாக விபரித்த பதிவு.. அங்கே நடந்த நிகழ்வுகள் அவரின் வசனங்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டவிதம் அருமை. வசனங்களுக்கு காட்சி வடிவம் கொடுப்பதென்பது ஒரு சிலரால் மட்டுமே முடிந்தது.அது தேவாவினால் இந்தப்பதிவில் சாத்தியமானது.
 
# கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ரா அக்காவின்  அவள் ஒரு "தொடர்பதிவு" என்ற பதிவு..சிரிக்கத்தெரியாதவர்களையும் சிரிக்க வைக்கும் அவரின் எழுத்துக்கள். வெட்டிப்பேச்சாத்தான் இருக்கும் என்ற மனநிலையில் படிக்க ஆரம்பித்தாலும் பதிவில் முடிவில் ஒரு Relaxation கலந்த புன்னகை தானாகவே வெளிப்படும். அதை இவரின் எல்லாப்பதிவுகளிலும் சாத்தியப்படவைப்பதே இவரின் வெற்றி.
 
# சேட்டைக்காரனின் எனக்குப்பிடித்த பத்து பெண்கள் என்ற பதிவு. பிடித்த பெண்களை வரிசைப்படுத்தும் தொடர்பதிவு ஆரம்பித்து எல்லோரும் அன்னை தெரேசாவையும் சமூகத்தில் உயர்நிலையிலுள்ள பெண்களையும் வரிசைப்படுத்திக்கொண்டிருந்த சமயம்.. சமூகத்தால் கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் நோக்கப்படும் பெண்களை (ஷகீலா,ரேஷ்மா உட்பட) வரிசைப்படுத்திய விதமும் அதற்கு அவர் கொடுத்த விளக்கங்களும் என்னை மிகவும் கவர்ந்தவை.
 
# ஹேமா அக்காவின்    ஒரு முறை ஓரே ஒரு முறை  என்ற பதிவு.இவரின் கவிதைகள் மனசின் ஆழம்வரை ஊடுருவிச்செல்லும் ஆற்றல் படைத்தது.. அவ்வாறு அப்பா அம்மா நினைவுகளளை கவிதையாக்கியிருக்கிறார் இங்கே..அவரின் வலைத்தளத்தை மேய்ந்தபோது என் கண்ணில்பட்டது என மனதிலும் ஒட்டிவிட்டது சுமார் 2 வருடங்களுக்கு முன் எழுதியது என நினைக்கிறேன்.


# லோசனின் ஆயிரத்தில் ஒருவன்  திரைப்படப்பார்வை எத்தனையோ திரைப்படவிமர்சனம் படித்தாலும் லோசனின் திரைப்பட விமர்சனம் என்னை மிகவும் கவர்ந்தது. அதுவும் இந்த திரைப்பட விமர்சனத்தில் அவரின் விரிவான பார்வைக்கோணமும், சில இடங்களில் வசன நடையும், சொல்லப்பட்ட விதமும் அருமை.


# அஷீதாவின் படிச்சு பார்த்தேன் ஏறவில்லை. என்ற பதிவு இவருடைய நிறைய பதிவுகள் நகைச்சுவைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்தப்பதிவிலும் அவருடைய பாடசாலை வாழ்க்கையை மிக சுவாரஷ்யமாக சொல்லியிருக்கிறார் அது பொய்யோ மெய்யோ நானறியேன் ஆனாலும் இந்தப்பதிவை படிக்கும்போது சிரிக்காமல் மட்டும் இருக்கமுடியவில்லை. இப்போதெல்லாம் அதிகமாக எழுதக்கானோம்.


# கருந்தேள் கண்ணாயிரத்தின்  கிஷோர் குமார்- சல்தே சல்தேஎன்ற பதிவு. ஹிந்திப்பாடகர் கிஷோர் குமார் பற்றிய ஒரு அருமையான பதிவு.கிஷோர் குமார் பாடிய சில பாடல்கள் எனக்குப்பிடிக்கும் என்பதாலும் இந்தப்பதிவுக்காக வேண்டி அவரின் தேடல்கள் அபாரம் எல்லா தரவுகளுக்கும் லிங்க் கொடுத்து வாசிப்பாளனின் தேவையை பூர்த்தி செய்கிறது இந்தப்பதிவு.




# ஜெய்லானியின்  சுடு தண்ணி வைப்பது எப்படி என்ற பதிவு.. இவருடைய பதிவெங்கிலும் கொட்டிக்கிடக்கிறது நகைச்சுவை இனிப்புகள். படிக்க படிக்க இனித்துக்கொண்டேயிருக்கும். இந்தப்பதிவை படித்துவிட்டு நிறையவே சிரித்தேன்.. இவரையும் ரொம்ப நாளா கானோம்.


# ஹுஸைனம்மாவின்  ரீ-ஸைக்கிளிங்கும் பழைய இரும்புச்சாமானும் என்ற பதிவு. அபுதாபியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பகுதி நேர வேலையாக காலி டின் கள் சேகரிப்பதில் ஈடுபடுவதை தனது கதையில் அழகாக கூறியிருப்பார் இவரின் எழுத்து நடையும் அழகு


வேலன் அவர்களின் ஈத் பெருநாள் பரிசு  என்ற பதிவு.. மதங்கள் தாண்டியும் மனிதநேயம் வளரவேண்டும் என உணர்த்தியது இந்தப்பதிவு..


இன்னும் எத்தனையோ பதிவுகள் பிடித்திருந்தாலும் எல்லாவற்றையும் இங்கே எழுதமுடியவில்லை.. இதை விரும்புபவர்கள் தொடர்பதிவாக எழுதுங்கள் அப்போது தவறவிடப்பட்ட நல்ல பதிவுகளை படிக்கும் சந்தர்ப்பம் கிடைக்குமல்லவா...

எண்ணங்கள் மாறலாம்..!


என் பாசத்திற்குரிய தமிழ் மக்களே உங்கள் பாரதிராஜா பேசுகிறேன் சாரி உங்கள் ரியாஸ் பேசுகிறேன். முன்னொரு காலத்தில் ஒரு தனித்தீவில் தனியொரு மனிதன் வாழ்ந்துவந்தான்.. அந்ததீவில் அவன்மட்டுமே தனிமனிதனாக இருந்தான். அவ்வாறு தனிமையில் வாழ்வது அவனுக்கு அலுத்துப்போய்விட்டது. நீண்ட நேர சிந்தனையின் பின் அவனுக்குள் ஒரு எண்ணம் தோன்றியது.. காட்டிலுள்ள மரக்கட்டைகளை பயன்படுத்தி ஒரு படகு செய்து அதைப்பயன்படுத்தி கடலில் பயணம் செய்து உலகில் வேறு திசைகளுக்கு பயணித்து புதிய நாடுகளை கண்டறிந்து அங்குள்ள மனிதர்களோடு சமூகமாக வாழலாம் என அவன் எண்ணவோட்டங்கள் பரந்துவிரிந்தது.. படகு செய்து அதில் பயணம்செய்வதுபோல் அவன் மனக்கண்ணிலும் தென்பட்டது.படத்தில் உள்ளதுபோன்று.


அவன் நினைத்தபடியே படகுகட்டும் வேலையை தொடங்கினான் அப்போது தூரத்தில் ஒரு பெண் தீவை நோக்கி வருவதை அவதானித்தான். படகு கரையொதுங்கியதும் அவனருகில் வந்தாள் அந்தப்பெண்.. அவள் அழகானவளாகவும் இருந்தாள். அருகில் வந்து என்ன செய்கிறாய் எனக்கேட்டாள் அப்போது அவன் நான் படகு கட்டிக்கொண்டிருக்கிறேன் என்றான் அதற்கவள் எதற்காக.. என திருப்பிக்கேட்டாள் அதற்கவன் இந்த தீவில் நான் மட்டும்தான் இருக்கிறேன் என்னால் தனிமையில் வாழமுடியவில்லை அதனால் மனிதர்கள் எங்காவது இருக்கின்றார்களா என தேடிப்போக போகிறேன் என்றான்.

அதற்கவள் நான் அவ்வாறு மனிதர்கள் உள்ள இடத்திலுருந்துதான் வருகிறேன்.. நீ நினைப்பதை போன்று மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வது அவ்வளவு சுலபமானதல்ல அவ்வாறு வாழ்ந்து அலுத்துப்போய்த்தான் தனிமையை தேடி இங்கே வந்தேன் என்றாள். அவள் பேச்சைக்கேட்டதும் சிந்திக்க தொடங்கினான் அவள் சொல்வது சரியாக இருக்குமோ.. பிறகவள் நாம் இருவரும் இந்த தனித்தீவில் சேர்ந்து வாழ்ந்தால் என்ன.. யாருடைய தொந்தரவும் இல்லை உன்னைப்பாதித்த தனிமையும் என்னால் இல்லாமல் போய்விடும்.. உன் அபிப்ராயம் என்ன எனக்கேட்டாள். அவள் சொல்வது அவனுக்கு சரியாகவே தோன்றியது யாருமறியா புதிய உலகம் தேடிச்செல்வதைவிட இங்கேயே அவளுடன் இருந்துவிடலாம் என முடிவுசெய்தான்.

பிறகு படகுசெய்ய வெட்டிய மரக்கட்டைகளை பயன்படுத்தி வீடு வாசல் கட்டில் செய்து சந்தோஷமாக குடும்பவாழ்க்கையை தொடங்கினர் இருவரும் அந்ததனித்தீவில்(படம் பார்க்க)
இதன் ஒன் லைன் ஸ்டோரி என்னன்னா.. எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆனால் ஒரு பெண்ணால் உங்கள் எண்ணங்களை மாற்றமுடியும்.. An idea can change your life, but a girl can change your idea...




கதை
திரைக்கதை
வசனம்
டைரக்சன்

ரியாஸ்..

புதிய உலகம்...!

விடியல் வந்து
விளக்கேற்றிய பொழுதொன்றில்
சாலைகளில் எங்கும் மனிதர்கள்
போவதும் வருவதுமாய்
நடையும் ஓட்டமுமாய்
நகர்ந்துகொண்டிருந்தார்கள்
நாலாபுறமும்....
குதூகலத்தை சுமந்த
குழந்தைகளும்
வாலிபத்தை தொலைத்த
வயோதிபர்களும்
வாழ்க்கையோடு போராடும்
மத்திய வர்க்கத்தினரும்
நகர்தலில் உள்ளடக்கம்...
கனவை சுமந்து சிலர்
கண்ணீர் சுமந்து சிலர்
புன்னகை சுமந்து சிலர்
புன்னகை தொலைத்து சிலர்
எதுவும் புரியாமல் சிலர்
அங்கும் இங்குமாய்....
விடிந்தும் விடியாத உணர்வுகளோடு
ஏக்கங்களுடனும்
எதிர்பார்ப்புகளுடனும்
கிராமத்து மனிதர்கள்....
இருந்தும் இல்லாத உணர்வுகளோடு
ஆசைகளுடனும்
அவஸ்தைகளுடனும்
நகரத்து மனிதர்கள்....
உலகம் மட்டும் தினம் தினம்
புதுசு புதுசாய்
அலங்கரித்துக்கொள்கிறது
மனிதன் மட்டும்
இன்னும் பழையவனாகவே
அதே பழைய மனதுடன்....

உலகிலேயே பெரிய பூ..!




இந்தப்பூ மெக்சிகோ நாட்டில் உள்ளது.. 2 மீற்றர் உயரமும் 75 கிலோ எடையும் கொண்டதாம். 40 வருடங்களுக்கு ஒரு முறைதான் இந்தப்பூ மலருமாம். அதுவும் மூன்று நாட்கள்தான் இருக்குமாம்.. ஒரு மனிதனின் வாழ்நாளில் ஒரு தடவை அல்லது இரு தடவைதான் பார்க்கமுடியும் போலிருக்கிறது.. (மெயிலில் வந்தது)


நான்..நீ...!


மழை தேடும் பூமி நான்..
மேகம் சுமக்கும் வானம் நீ..
இரவோடு வரும் இருள் நான்..
என்னைத்தழுவ வரும் நிலவு நீ..
அயர்ந்து தூங்கும் அதிகாலை நான்..
அடித்து எழுப்பும் விடியல் நீ...
எழும்ப மறுக்கும் சோம்பல் நான்..
உற்சாகம் தரும் தேனீர் நீ..
காட்சிகள் தொலைத்த கனவு நான்..
காட்சிகள் தரும் கண்கள் நீ..
எழுத நினைக்கும் கவிதை நான்..
வர மறுக்கும் வார்த்தை நீ...
அடம்பிடிக்கும் குழந்தை நான்..
ஆசைகாட்டும் திருவிழா நீ..
தினம் வரும் பகல் நான்..
எனக்குள் வர முடியா இரவு நீ..
வாசிகசாலை புத்தகங்கள் நான்..
வாசித்துமட்டும் செல்லும் வாசகி நீ..
எதுவரை நான்....
அதுவரை நீ...!

எந்திரன் மாயாஜாலம்..!

நாங்களும் பார்த்துட்டமில்ல கடந்த கொஞ்ச நாட்களாகவே பதிவுலத்தில் எந்திரனை கடித்து மென்று விழுங்கி வாந்தியும் எடுத்துவிட்டார்கள் நிறையப்பேர் நான் கொஞ்சம் லேட் எல்லாரும் எல்லாத்தயும் எழுதிட்டாங்க நான் என்னத்த எழுதி என்ன பன்ன என்று நினைத்தே காலம் ஓடிவிட்டது..  நேத்து வந்த பயலெல்லாம் எந்திரன பத்தி எழுதுறான் நீ.. ஆறு மாசமா பதிவுலகத்துல் இருக்கே நீ.. எழுதக்கூடாதா என என் மனசாட்சி என்னையே கேள்வி கேட்குது அதுதான் ஆரம்பிச்சாச்சி..ரெடி ஸ்டார்ட்.. 


எந்திரனின் கதை இதுதான் அப்பிடின்னு ஆரம்பிச்சா நீங்களெல்லாம் கடுப்பாகிருவிங்கன்னு தெரியும். அதனால டிரக்கட்டா மேட்டருக்கு போயிடுவோம்.. இது வருவதுக்கு முன்னிருந்த எதிர்பார்ப்பு வந்தபிறகு குறைந்து போனது.. காரணம் ஷங்கரிடம் இதைவிட நிறைய எதிர்பார்த்தேன் ஷங்கரின் அன்னியன் திரைப்படம் என்னில் ஏற்படுத்திய தாக்கம் எந்திரன் ஏனோ ஏற்படுத்தவில்லை.. இது இந்திய சினிமாவிற்கு புதுசு என்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழினுட்பத்திக்காகவும் பாராட்டலாம் என்றாலும் முழுமனதாக திருப்திபடமுடியவில்லை..

தமிழ் சினிமாவில் ஹீரோ எப்படிப்பட்டவராயிருந்தாலும் காதலிக்கனும் டூயட் பாடனும் என்பது எழுதப்படாத விதியாச்சே.. இதிலும் ரஜினி காதலிக்கிறார் டூயட் பாடுகிறார்.. ஆனால் எவ்வளவு பாடுபட்டும் வயதைத்தான் மறைக்கமுடியவில்லை.. வசீகரன் ரஜினியைவிட சிட்டி ரஜினிதான் கலக்கல் அதுவும் வில்லனாக மாறும் தருனங்களில் நல்ல நடிப்பு..கருப்பு ஆடு உள்ள வந்ததாக கூறிவிட்டு மே,,, மே,,, என்று சொல்வாறே சூப்பர் ஐஸ் படம் முழுக்க வருகிறார் திரைக்கதை அப்படி. 

முதலில் சிட்டியை உருவாக்கி செயற்படுத்தும் காட்சிகளில் ஒரு ஆங்கிலேய படம் பார்க்கும் உணர்வு வந்தாலும்.. பின் ஐஸின் மேல் சிட்டிக்கு காதல் வரும் காட்சிகளில் இல்ல இல்ல இது தமிழ் படம்தான் எங்கிற உணர்வைத்தருகிறது.படத்தில் கருனாஸ் சந்தானம் பாத்திரங்கள் கொஞ்சம் சிரிக்க உதவினாலும் மனதோடு ஓட்டவில்லை.. கிராபிக்ஸ் காட்சிகள் அழகு.ஆனால் அதுமட்டும் போதாது ஒரு படத்தின் தரத்தைச்சொல்ல. இது ஒரு மசாலா பொழுது போக்கு படம் என்ற வகையில் பார்த்தால் நல்லதொரு பொழுது போக்குத்தான்.. ஆனால் இதுஒரு மைல்கல் இந்திய சினிமாவையே மாற்றியபடம் என்றால் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளமுடியாது..

படத்திற்காக அதிகமாக மெனக்கெட்டிருப்பது புரிகிறது..இதுமாதிரியான திரைப்படங்களின் வருகைக்கு இது முதற்படியாக அமையும் என இதை பாராட்டலாம்.. மற்றபடி படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் ஒரு ரோபோவால் அவ்வளவு அவசரமாக ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கமுடியுமா..? இதுமாதிரியான உண்மைக்கு புறம்பான வெறும் கற்பனைக்கு மட்டுமே எட்டக்கூடிய வகையில் நிறைய  ஆங்கிலப்படங்கள் வந்திருக்கின்றன் ஆனால் அதில் கற்பனை மட்டும்தான்.. அதிலும் ஒரு உண்மைதன்மை இருக்கும் இதிலே அது மிஸ்ஸிங்..



பாடல்களை பொருத்தவரை பரவாயில்லை ரகம்.. பாடல் காட்சியமைப்புகளும் அழகு.  இரும்பிலே ஒரு இருதயம் முளக்குதே.... புதிய மனிதா பாடல்கள் என்னைக்கவர்ந்தவை ரஹ்மான் பின்னனி இசையிலும் கலக்கியிருக்கிறார்.. இறுதிக்கட்ட காட்சிகள் பாம்புபோல் உருவாக்கப்பட்ட காட்சிகள் நல்ல விருந்து குழந்தைகள் உட்பட.. (ஒரு வேளை இது குழந்தைகளுக்கான படமாயிருக்குமோ சரி விடுவோம் நாமலும் குழந்ததானே...) யாரப்பா அது எகத்தாளமா சிரிக்கிறது...

 படத்தின் எடிட்டர் ஆண்டனி.. இசைக்கலவை ரசூல் பூக்குட்டி..   படத்தின் கலை இயக்குனர்..  ஒப்பனைக்கலைஞ்சர்.. நடன இயக்குனர்கள்.. இனை இயக்குனர்கள்.. ஒரு காட்சியில் வந்துபோகும அமரர் ஹனிபா.. வில்லனாக வரும் டென் சொங்கப்பா.. எழுத்தாளர் சுஜாதா.. பாடலாசிரியர்கள் வைரமுத்து,கார்க்கி (யார் இந்த கார்க்கி அவருக்கு பிளாக் எல்லாம் இருக்காமே தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) இரானுவ பரிசோதனையில் சிட்டியால் சொல்லப்படும் கணிப்பொறிக்கும் காதல்தந்த கண்ணிப்பொறி.. என்ற கவிதைக்கு சொந்தகாரரான நா.முத்துக்குமார் ஆகியோருக்கும் பாராட்டுகள்.. ஒரு கலைஞ்சனை வெறுமனே குற்றம் மட்டும் சொல்லாமல்.. அவனின் திறமையை ஊக்குவிக்கும்போதுதானே அவனிடமிருந்து புதியவை ஊற்றெடுக்கும்..

ஷங்கரின் வித்தியாசமான பார்வைக்கும் உழைப்புக்கும் கண்டிப்பாக பாராட்டலாம்.. ஆனால் இந்தபடத்த வெற்றிபெற செய்ய வேண்டும் என்ற நோக்கில் சன் டீவியின் ஓவர் பில்டப்பும் ரஜினி ரசிகர்களின் முட்டாள்தனமான செய்கைகளும் தாங்கமுடியல்ல நான் சொல்ல வந்தத சொல்லியாச்சி இனி நீங்க சொல்றத சொல்லுங்க..

தொலைகிறது வாழ்க்கை...!

கணினியோடு
கடந்துசெல்கிறது
காலங்கள்
இதுதான் இயந்திரவுலகமோ
இதுதான் நவீனமோ
உலகமே காலடியில்
உருண்டோடி வருகிறது
பணச்சக்கரம் பூட்டி....
விடிகிறது காலை
கணிப்பொறியோடு வேலை
மீண்டும் மாலைப் பொழுதுபோக்கு
அதுவும் தேடவேண்டியிருக்கு
கணினிக்குள்..
பரந்தவுலகம்
கைகளுக்குள் அடங்கி
கைத்தொலைபேசியாயும்
கணினியாயும்
மனிதனுக்கு
தேவையில்லை மூளை
மென்பொருளே
செய்கிறது வேளை...
சுறுங்கிவிட்டது உலகம்
மாறிவிட்டான் மனிதன்
ஓடிக்கொண்டேயிருக்கிறான்
எப்பொழுது தொலையும்
வாழ்க்கை
என்றறியாமல்...
இருள் தொலைதத தேசமிது
எல்லா இரவுகளும்
பகலாகவே
ரசிக்க முடியவில்லை
இருளைக்கூட
மறைந்து போகிறது
இங்கே
செயற்கை ஒளியால்
பௌனர்மி கூட....
சுவாசித்த
கிராமத்துக்காற்றும்
அலைந்து திரிந்த
வயல் வெளிகளும்
நீராடிய குளங்களும்
இன்றும் குளிரச்செய்கிறது
மனதை
இவையனைத்தும்
கிடைக்கவேயில்லை
எவ்வளவு தேடியும்
இன்றைய
இனையத்தளங்களில்...
மீண்டும் தொலைகிறது
வாழ்க்கை
கணிப்பொறிக்குள்....

பெண்ணே...!

உன் கொலுசுகளும்
வளையல்களும்
சிரிக்கின்றன அழகாய்
உன்னைப்போலவே....!

நாணங்களால்
குடைபிடிக்கிறாய்
என் பார்வை மழையினை
தடுக்கிறாய்...!

உலக இலக்கியங்கள்
கற்றவன் நான்
புரியவேயில்லை என்னவென்று
உன் கண்கள் பேசுவது மட்டும்...!

ஊரே உன்னை
வாய்காரி என்கிறது
என்னிடம் மட்டும் ஊமையாய்
மெளனங்களாலே பேசுகிறாய்...!

எங்கு பார்த்தாலும்
நீயாகவே
இருள்கூட அழகாகவே
உன் ஞாபகங்களோடு...!

HOW TO IMPROVE YOUR LIFE...!

Personality:


1. Don't compare your life to others'. You have no idea what their journey is all about.
2. Don't have negative thoughts of things you cannot control. Instead invest your energy in the positive present moment.
3. Don't over do; keep your limits.
4. Don't take yourself so seriously; no one else does.
5. Don't waste your precious energy on gossip.
6. Dream more while you are awake.
7. Envy is a waste of time. You already have all you need..
8. Forget issues of the past. Don't remind your partner of his/her mistakes of the past. That will ruin your present happiness.
9. Life is too short to waste time hating anyone. Don't hate others.
10. Make peace with your past so it won't spoil the present.
11. No one is in charge of your happiness except you.
12. Realize that life is a school and you are here to learn.
Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
13. Smile and laugh more.
14. You don't have to win every argument. Agree to disagree.


Community:




15. Call your family often.
16. Each day give something good to others.
17. Forgive everyone for everything.
18. Spend time with people over the age of 70 & under the age of 6.
19. Try to make at least three people smile each day.
20. What other people think of you is none of your business.
21. Your job will not take care of you when you are sick. Your family and friends will. Stay in touch.


Life:


22. Put GOD first in anything and everything that you think, say and do.
23. GOD heals everything.
24. Do the right things.
25. However good or bad a situation is, it will change.
26. No matter how you feel, get up, dress up and show up.
27. The best is yet to come.
28. Get rid of anything that isn't useful, beautiful or joyful.
29. When you awake alive in the morning, thank GOD for it.
30. If you know GOD you will always be happy. So, be happy.
While you practice all of the above, share this knowledge with the people you love, people you school with,
people you play with, people you work with and people you live with.
Not only will it enrich YOUR life, but also that of those around you.


ஒரு ஆங்கிலேயே எழுத்தாளனின் புத்தகத்திலிருந்து.. அப்படியே இங்கே...!

அழகிகள் ஜாக்கிரதை...!

சாலைகளில்

ஆங்காங்கே சில விபத்துகள்
ஆனாலும் இல்லை
உயிச்சேதமோ
பொருட்சேதமோ
விழுந்து எழுந்தது
கண்களும்
மனசுகளும்தான்
அழகிகள் தேசத்தில்
அழகிகள் ஜாக்கிரதை....!

கண் போன போக்கிலே கால் போகலாமா...!

நல்லதொரு பதிவு போட்டு ரொம்ப நாளாகிவிட்டது அதிக வேலை மட்டும் காரணமல்ல என் மனதும்தான்.. எழுதுவதற்குரிய நல்ல சூழலோ நல்ல தெளிவான மனதோ அமைவதென்பது கடினமாகவேயுள்ளது.. 'எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்' அந்த பாடல் வரிகள் போல மனதும் ஓடிக்கொண்டேயிருக்கிறது ஓரிடம் நில்லாமல்.

சரி அப்படி அலையும் மனதை  ஓரிடம் நிறுத்தி எதையாவது எழுதுவோம் என்றால் என்னத்த சொல்வது எப்படி சொல்வது கட்டுரையா சொல்வதா கவிதையா சொல்வதா.. கட்டுரை அதில் ஏதாவது விஷயம் இருக்க வேண்டும். கவிதை என்றால் அதில் கொஞ்சமாவது கவிதைத்தனம் இருக்கவேண்டும் இலக்கியத்தரம் இல்லாவிட்டாலும்.. இப்படி யோசித்துக்கொண்டே பகலும் போகிறது இரவும் போகிறது என்னையறியாமலேயே..இதற்கிடையே  எங்கோ ஓர் பாடல் ஓசை...

கண்போன போக்கிலே கால போகலாமா..
கால் போன போக்கிலே மனம் போகலாமா..
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா..
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..

அடடா நாலு வரிக்குள் எத்தனை எத்தனை அர்த்தங்கள் பல இலக்கியங்களில் பக்கம் பக்கமாக சொன்ன விடயங்களை.. பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் சொல்வதற்கு அந்த கவியரசனால் மட்டுமே முடியும்.. என்று மனதில் தோன்றி மறைவதற்குள் அடுத்த வரிகள்

நீ.. பார்த்த பார்வைகள் கனவோடு போகும்..
நீ.. சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்..
ஊர்பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்...
உணராமல் போவோருக்கு உதவாமல் போகும்..

அடடா உண்மையாக வாழவேண்டும் என்பதை எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார்.. அதையும் உணரமுடியவில்லையாயின் உதவாமல்தான் போகும்.. அடுத்த வரிகள் ஆரம்பம்..

புரியாத சில பேருக்கு புது நாகரீகம்..
புரியாத பல பேருக்கு இது நாகரீகம்..
முறையாக வாழ்வோருக்கு எது நாகரீகம்..
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்..

அடடா எது நாகரீகம் என்பதை நாலு வரியில் உணர்த்த இதைவிட்டால் வேறு வழியில்லை...  அதற்குள் அடுத்த வரிகள்

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்..
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்..
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..
இவர் போல யாரெண்டு ஊர் சொல்ல வேண்டும்..

அட்டா என்னத்த சொல்ல என்னத்த சொல்ல.. பாடல் முடிந்தது ஆமா நான் பதிவே போடல்லயே.. வேறொரு நாளைக்கு பார்ப்போம்..

...!

கண்களை மூடிக்கொள்கிறேன்
இறந்து போகிறேன்
மீண்டும் எழுகிறேன்
இறந்து மீண்டும்
பிறக்கும்
பிறசவத்தாயாய்...!



முடிந்தால் எனது இந்த கவிதைக்கு உங்கள் மனதில் தோன்றும்  தலைப்பைச்சொல்லுங்கள் பின்னூட்டத்தில்..!

சும்மா..!

தொலைதூரம் நோக்கிய ஓர் பயணம்....
பல கோடி பயணிகள்...
பல்லாயிரம் பாதைகள்...
எல்லாம் ஓரிடம் நோக்கியே...
வந்தவர்கள் வாழ்ந்தார்கள் சென்றார்கள்...
வருகிறார்கள் வாழ்கிறார்கள் செல்கிறார்கள்...
வருவார்கள் வாழ்வார்கள் செல்வார்கள்..
வருவதும் வாழ்வதும் போவதும்...
இயல்புதானே வாழ்க்கையின்...
பேரூந்து பயணத்தில் ஜன்னல் வழியே...
காட்சிகள் ரசிக்கும் குழுந்தையாய் நாம்...
வாழ்க்கைப்பயணத்தில்...
எத்தனை மனிதர்கள்...
எததனை நிறங்கள்...
எத்தனை மாற்றங்கள்...
எத்தனை தோற்றங்கள்...
கடந்து போகிறோம் காலகாலமாய்...
எங்கே போனான் என்னவானான்..
ஆடையின்றி வாழ்ந்த ஆதிமனிதன்..
எங்கே போவான் என்னவாவான்..
நவயுக நாகரீக் மனிதன்...
பாதைகள் மாறலாம்...
பயணங்கள் தொடரும்..
ஓரிடம் நோக்கியே.....
என்ன் குழப்பிட்டேனா ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி குடிச்சிட்டு
போங்க... மக்கள்ஸ்

கொஞ்சம்...!

பூவில் கொஞ்சம்
தீயில் கொஞ்சம்
அழகில் கொஞ்சம்
அன்பில் கொஞ்சம்
ஆனதோ பெண்னென்று...!

மயக்கம் கொஞ்சம்
தயக்கம் கொஞ்சம்
காமம் கொஞ்சம்
காதல் கொஞ்சம்
ஆனதோ அவள் விழியென்று...!

நாணம் கொஞ்சம்
நளினம் கொஞ்சம்
பழமை கொஞ்சம்
புதுமை கொஞ்சம்
ஆனதோ அவள் உடலென்று...!

ராகம் கொஞ்சம்
தாளம் கொஞ்சம்
தாகம் கொஞ்சம்
மோகம் கொஞ்சம்
ஆனதோ அவள் மொழியென்று...!

கொஞ்சம்
கொஞ்சம்
கொஞ்சம்
ஆனதோ அவள் எனதென்று....!

,,,,,,,,,,,,,,,,

வாழலாம் வாருங்கள்..!

மனிதனாக பிறந்துவிட்டோம்
வாழ வேண்டும்
முடியும் வரை
வாழ்க்கைப்பயணம்...
கொட்டிக்கிடக்கிறது இன்பங்கள்
ஆங்காங்கே
அள்ளிக்கொள்வது
நம் கையில்
நம் மனதில்...
திறந்தே கிடக்கிறது உலகம்
திறக்க மறுப்பதென்னவோ
நம் மனதுகள்தான்
திறந்தே கிடக்கட்டும் அது...
துன்பங்கள் துயரங்கள்
கூடவே வரலாம்
நம் நிழல் போல
கடந்துசெல்லுங்கள்
காத்திருக்கலாம்
ஓர் வசந்த காலம்....
நேசியுங்கள் மனிதர்களை
பறிமாறுங்கள் புன்னகைகளை
பூக்கள் பூக்கலாம்
உங்கள் தோட்டத்திலும்...
உலகத்தை ரசியுங்கள்
குழந்தை மனதோடு
வேண்டாம்
கொள்ளை ஆசைகள்...
வாழ்ந்து பார்ப்போம்
வாருங்கள்...!

அனைத்து நண்பர்களுக்கும் ஈத் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்.. ரியாஸ்

நகரம் நோக்கி நகரும் எறும்புகள்...!

எங்கு பார்த்தாலும் வறுமை,பஞ்சம்,பசி,பட்டினி முன்பு போல் மக்களால் நினைத்தவாறு செலவழிக்கவோ உண்டு மகிழவோ முடிவதில்லை. எல்லாவற்றையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள்ளேயே செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் ஆடம்பரத்தை கைவிட்டு சிக்கனத்தை மேற்கொள்ளவேண்டிய நிலை.இதனால் தேவைகளை குறைத்துக்கொண்டு வாழப்பழகிக்கொண்டனர்.. இந்த நடைமுறையினால தனது அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்த ஒரு பின் தங்கிய கிராமத்து எறும்பு சமுதாயத்தின் கதை.

"முன்பெல்லாம் வீடுகளில் உணவுப்பண்டங்கள் எல்லா இடங்களிலும் கொட்டிக்கிடக்கும் நாங்களும் கூட்டம் கூட்டமாக சென்று எங்கள் உணவுத்தேவையை தீர்த்து எங்கள் இருப்பிடங்களுக்கும் எடுத்து வந்து வைத்துக்கொள்வோம் இப்ப எல்லாம் உணவு தேடுவதே பெரிய வேலையாகிப்போய்விட்டது" என்றவாறு பல எறும்புகள் பேசிக்கொண்டன. மக்கள் விவசாயத்தை மட்டும் நம்பி வாழவேண்டியிருப்பதால்.. மழையோடும் வெயிலோடும் போட்டி போட்டுக்கொண்டே வாழவேண்டிய நிலை. அதுவும் விலைவாசி உயர்வும் வறுமையும் மிகவுமே பாதித்தது அக்கிராமத்தை.. உணவுக்கே மிகவும் கஷ்டமாகி போய்விட்டது.

இவ்வாறு நாட்கள் செல்ல செல்ல மக்கள் கிராமத்தை விட்டு நகர்புறங்கள் நோக்கி நகர ஆரம்பித்தனர் வேலை தேடும் நோக்கில். இவ்வாறிருக்கும் போது அந்த எறும்புக்கூட்டத்தில் உள்ள அனைத்து எறும்புகளும் ஒன்று கூடி முக்கிய தீர்மானம் ஒன்றை மேற்கொண்டது அப்போது ஒரு முதிய எறும்பு பேச ஆரம்பித்தது|"நாம் எல்லோரும இக்கிராமத்தில் பல வருடங்களாக வாழ்ந்து வருகிறோம் இது போன்றதொரு பஞ்சமான உணவில்லாத சூழ்நிலை ஒரு போதும் இங்கு ஏற்பட்டதில்லை.. மேலும் நாம் வீடுகளில் உணவு தேடி அங்கும் இங்கும் அலையும் போது மனிதர்கள் விஷம் வைத்து கொல்கிறார்கள்.. கடந்த மாதம் மாத்திரம் ஏராளமான நம் உறவினர்கள் நண்பர்களின் உயிர்களை இழக்கவேண்டி ஏற்பட்டது...

இதற்கெல்லாம் ஓரே தீர்வு இங்குள்ள மனிதர்களைப்போல் நாமும் ஏதாவது நகர்ப்புறம் நோக்கி நகரவேண்டியதுதான்.. அங்கு நமக்கான உணவுகள் கிடைக்கலாம் நாம் அங்கு எமது இருப்பிடத்தை அமைத்து சந்தோஷமாக வாழலாம்" என்று அந்த முதிய எறும்பு பேசியது இதற்கெல்லாம் மற்ற எறும்புகளும் தனது சம்மதத்தை தெரிவித்தது.. அதன்படி எப்போது எவ்வாறு ஊரைவிட்டு வெளியேறுவது போன்ற திட்டங்களும் முன்வைக்கப்பட்டன.. அதில் முக்கியமாக சில சட்டதிட்டங்களும் கண்டிப்பாக்கப்பட்டன இது மனிதர்களுக்கும் பொருந்தும்.

ஊரைவிட்டு வெளியேறும் முன்பு அந்த எறும்பு சமுதாயத்தின் தலைவனால சொல்லப்பட்ட கட்டளைகள்.

#கூட்டம் கூட்டமாக வரிசையாக ஒழுங்காக ஒற்றுமையாக செல்ல வேண்டும். ஒற்றுமைக்கே உதாரணமாக விளங்கும் நாம் அதை எந்த நேரமும் பின்பற்ற வேண்டும்..
#போகும் வழிகளில் உணவுப்பொருள்கள் இருந்தால் அவற்றை தூக்கிச்செல்லவேண்டும்
#நாங்கள் சிறிதாக இருப்பதால் மனிதர்கள் கண்ணுக்கு புலப்படுவது கடினம் ஆகவே அவர்கள் கால்களுக்கு மிதிபடக்கூடும். அதனால் அவர்கள் வரும் திசையை தவிர்த்து வேறு திசையில் செல்லவேண்டும்.
#மனிதர்களுக்கு தொந்தரவு கொடுக்கவோ அவர்களை தாக்கவோ கூடாது. சில வேளை அவர்கள் உங்களை தொந்தரவு செய்தாலோ கொல்ல முயன்றாலோ உங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள அவர்களை தாக்கலாம்.
#போகும் வழிகளில் மனிதர்களின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைபவர்களை தூக்கிச்செல்ல வேண்டும். எங்கள் எடையைவிடவும் கூடுதலான எடையை எங்களால் தூக்க முடியும் என்பதை ஞாபகத்தில் கொள்ளவேண்டும்.
#செல்வது நகரம் ஆகையால் அங்கே சனநெரிசல்  அதிகம் இருக்கலாம் ஆகவே அவர்களின் கண்களுக்கு தெரியாமலோ கால்களுக்கு மிதிபடாமலோ செல்ல வேண்டும்.
#அங்கே உள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு கூட்டமாக பிரிந்து செல்ல  வேண்டும். எந்த வீட்டில் அதிக உணவுப்பொருள்கல் கொட்டிக்கிடக்கிறதோ அதை மற்ற கூட்டங்களுக்கு அறியத்தர வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேகரித்துக்கொள்ள வேண்டும் எதிர்கால தேவைக்கு.

என்றவாறு அமைந்திருந்தது அந்த எறும்பு தலைவனின் கட்டளைகள்,
தொடரும் பயணம் நகரம் நோக்கி....



.

மனசு...!

கனவுகள்
வருவதில்லை எனக்கு
வந்தாலும்
வாசல் தாண்டுவதில்லை...
வந்தவைகளும்
நினைவிலில்லை
கண் விழித்ததும்....
கண்கள் மட்டும்
என் பேச்சு கேட்க
மனசு மட்டும்
அலைகிறது
ஊர் உலகமெங்கும்
அளவு கடந்த
ஆசைகளோடு...
பசியினால்
பதறும் வயிறு
ஒரு புறம்.
தங்கத்தட்டில்
உணவுன்னும் மனசு
மறு புறம்....
மேக மெத்தைவிரித்து
வானவெளியில்
உறங்கிட ஆசையாம்
டைட்டானிக் பட
நாயகி மீது
காதலாம்
யாரிடம் போய் சொல்ல
இந்த மனசின்
அராஜகத்தை....
நினைப்பவை
கிடைப்பதில்லை
கிடைப்பவை
நினைப்பவையாக
இருப்பதுமில்லை....!
இருந்தும்
இன்னும் திருந்தவில்லை
இந்த மனசு...!

தத்துவபித்துவங்கள்...!

பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,
கழித்தல் கணக்கு போடும்போது ,
கடன் வாங்கித்தான் ஆகனும்

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் .
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் .
ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??

டிசம்பர் 31 க்கும் ஜனவரி 1 க்கும்
ஒரு நாள்தான் வித்தியாசம் .
ஆனால்,
ஜனவரி 1 க்கும் டிசம்பர் 31 க்கும்
ஒரு வருசம் வித்தியாசம் .

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்
ஹீரோ ஹோன்டா , ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!

போலீஸ் ஸ்டேசனுக்கு ஃபோன் போட்டால் போலீஸ் வரும்
ஆனா,
ரயில்வே ஸ்டேசனுக்கு ஃபோன் போட்டா ரயில் வருமா

குளவி கொட்டினா வலிக்கும் .
தேள் கொட்டினா கூட வலிக்கும் .
ஆனா
முடி கொட்டினா வலிக்குமா

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது

இட்லி மாவை வச்சு இட்லி போடலாம் .
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம் .
ஆனா,
கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா ?

என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு , கரைன்னு எல்லாம் இருந்தாலும் ,
ரயிலேறனும்னா,
ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும் . இதுதான் வாழ்க்கை .

T Nagar போனா டீ வாங்கலாம் .
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா ?

பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும் ,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .

கொலுசு போட்டா சத்தம் வரும் .
ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா ?

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் .

ஆனா,
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?
நல்லா யோசிங்க ! குவாட்டர் கூட வராது !!!

பாகிஸ்தானிய வெள்ளபெருக்கு..!


பாகிஸ்தானில் பல மில்லியன் கனக்கான மக்களின் வதிவிடங்களும் சொத்துக்களும் வெள்ளநீரால் அடித்துச்செல்லப்பட்ட பரிதாபம் நிகழ்ந்துள்ளது.. பல்லாயிரக்கனக்கான மக்கள் உண்ண உணவின்றியும் தங்குவதற்கு வீடுகளின்றியும் தவிப்பதை அன்றாட செய்திகளில் கானக்கிடைக்கிறது...

ஐக்கிய நாடுகளின் அறிக்கையின்படி 2000 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகவும் 17 மில்லியனுக்கு அதிகமான மக்கள் வீடு வாசல்களை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது ஆனால் சேதவிபரங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பதையே கானக்கிடைக்கிறது.. பல நாடுகளில் இருந்தும் உதவிகள் சென்றவண்ணம் உள்ளன.. எங்களால் முடிந்தது அவர்களுக்கான ஆழ்ந்த அனுதாபங்களே.. இயற்கையின் சீற்றத்திலிருந்து
யார்தான் தப்பமுடியும்..





நிகழ்காலம்...!

திறந்தே கிடக்கிறது
மனசின் கதவு
வருவதும்
போவதுமாய்
எதிர்கால கனவுகளும்
இறந்தகால நிஜங்களும்
தவியாய் தவிக்கிறது
இவையிரண்டுக்கிடையில்
சிக்கிக்கொண்ட
நிகழ்காலம்....
தேவைகளும்
ஆசைகளும்
கனவுகளும்
பிறந்துவிட்டது கூடவே
கருவறையிலிருந்து
கால்வைத்தவுடன்...

இறந்தகால இழப்புகளும்
எதிர்கால எதிர்பார்ப்புகளும்
நினைவிலில்லாமல் செய்கிறது
நிகழ்காலத்தை...
சிலர்
நிகழ்காலத்தில்
வாழ்வதேயில்லை
என்கிறது ஒரு ரஷயகவிதை...
"நாளைய வாழ்வு இல்லை என்று
இன்றே வாழ்வது ஞாயமடா"
என்கிறார் 'வைரமுத்து'....
நிலையில்லை
இவ்வையகம்
நினைவில் கொண்டு
நிகழ்காலத்திலும்
வாழ்பபழகுவோம்....

இன்றாவது வருமா...!

காற்றும் வீசியது
மேகங்களும் அலைந்தது
அங்கும் இங்குமாய்..
இன்றாவது
வருமா மழை..
ஏழை விவசாயியின்
ஏக்கங்கள்
வானத்தை அண்ணாந்து
பார்த்தபடி...
மழை வந்தால்
செழிக்கும்
பயிர்கள் மட்டுமல்ல
இவர்கள்
வாழ்வும்தான்...
வறண்ட பூமி
மேகம் தரும் மழை
கொஞ்சம் நம்பிக்கை
கடும் உழைப்பு
இதுதான் சொத்து
இவர்களின்....
உலகிற்கே
உணவு தருபவர்கள்
உண்பதோ
அரை வயிறு சோறுதான்...
இயற்கை கொஞ்சம்
இறங்கவில்லையானால்
ஒட்டிய வயிறுதான்.
தினமும் மனிதன்
புதியவனாகிறான்
புதுப்புது நுட்பங்களுடன்
இவர்கள் இன்னும்
ஆதிவாசிகளாய்
அதே வறுமையுடன்
இன்றாவது வருமா
மழை....!

மௌனங்கள் மொழியாக...!

நாகரீகம்

வெள்ளையனை
வெளியேற்றிய பின்னும்
வெளியேறாமல்
ஒட்டிக்கொண்டது
அவன் நாகரீகம்
மட்டும்...!

விவசாயி

வற்றிய குளம்
வற்றாத வறுமை
ஒட்டிய வயிறு
புதிய உலகின்
பழைய மனிதன்...!

இயற்கை

இறைவனின் கைவண்ணம்
மாற்றம்கானும் உலகில்
மாறாதது..
குழந்தை மனசு
குதூகலிக்கும் போதெல்லாம்
சீற்றம்கொண்டால்
ராட்சசன்...

மழை

பூமிக்காதலியின்
காதலன்
தாகம் தீர்க்கும்
தாய்
பச்சைத்தாவரங்களின்
உணவு
ஏழை விவசாயியின்
உயிர்...!

மௌனம்

கருத்தரித்து
பிறக்காத
வார்த்தை குழந்தை...!

உனக்காக...!

வார்த்தைகள்
சண்டையிட்டுக்கொள்கின்றன
உன்னைப்பற்றி எழுதும்
கவிதைகளில்
இடம்பிடித்துக்கொள்ள.
நகரப்பேரூந்தில்
இடம்பிடிக்கும்
பயணிகள் போல...!
வார்த்தைகள்
ஓடி ஒளிந்துகொள்கின்றன
உன்னோடு
பேசும் நேரங்களில்
பூச்சாண்டி பயத்தில்
ஓடி ஒளியும்
குழந்தைகள் போல....!

உலகம்
எவ்வளவு அழகானது
உன்னை கானும் பொழுதுகளில்
உலகம்
எவ்வளவு கொடுமையானது
உன்னை கானாத பொழுதுகளில்...!

இரவுகளில்
கனவாய் வருகிறாய்
பகல்களில்
நினைவாய் வருகிறாய்
எப்போதுதான் வருவாய்
நேரில்...!

பாலைவனத்திலும்
பனித்துளிகளாய்
உன் ஞாபகங்கள்
குளிரச்செய்கிறது
மனதை...!

பதிவுலகமும் நானும்..! தொடர் பதிவு

இந்த தொடர்பதிவிற்கு அழைத்த(மாட்டிவிட்ட) அன்பின் நண்பர் ஜில்தண்ணி யோகேஸிற்கு எனது நன்றிகள்..
பதிவுலகம் முழுக்க இந்தமாதிரி பதிவாத்தான் இருக்கு.. நாம மெதுவா எஸ் ஆகிடலாம்னு பார்த்தா முடியல்ல.. என்னப்பத்தி பெருசா என்னங்க சொல்ல இருக்கா அதனால சிரிசா சொல்றன்..

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

மொஹமட் ரியாஸ்.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயர்தான்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..

அது ஒரு மறக்கமுடியா அழகிய விபத்து - குழந்தை எழுந்து நடக்கத்தொடங்கிய முதல் நாள் அனுபவம்.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் முயற்சித்தேன் முடிந்தது - பிரபலம் என்று சொல்லுமளவுக்கு இன்னுமில்லைங்க..

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஆம்.. எனது முதல் பதிவே அவ்வாறானதுதான்..
 ( இங்கு)

விளைவு.. நிறைய நண்பர்களின் அறிமுகமும் கருத்துக்களும்

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுதுபோக்கு என்று சொல்வதைவிட ஒரு ஆத்மதிருப்தி கிடைக்கிறது.. மற்றபடி நேரம் விரயம்தான்.

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்றுதான்.

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
நல்லா எழுதும் எல்லா பதிவர்களையும் பார்த்து... சிறுகதை,கதை எழுத ஆர்வமில்லாத என்னை இந்த பொறாமை ஒரு பதிவைத்தந்தது..

அந்தப்பதிவு

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.
எனது முதல் பதிவிற்கு பின்னூட்டம் மூலம் பாராட்டியவர்கள்.
ஹாய் அரும்பாவூர்
ராகவன் நைஜீரியா
இருமேனி முபாரக்


நான் எழுதிய கவிதைகளை முதலில் பாராட்டியவர்கள்
மலிக்கா அக்கா
மதுரை சரவணன் சார்
10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

எனது முதல் பதிவிலேயும் 50 வது பதிவுலயும் நிறைய கூறியிருக்கிறேன்..

நன்றி...நன்றி..நன்றி...50 வது பதிவு..

விளையாட்டுத்தனமாக எதையாவது கிறுக்குவோம் என்ற எண்ணத்தில் கிறுக்க ஆரம்பித்தது 50 வரையும் வளர்ந்து நிறபது கண்டு பூரிப்படைகிறேன்.. நான் எழுதுபவற்றையும் ரசிப்பார்களா..? என்ற அவநம்பிக்கையில் ஆரம்பித்து இன்று என் எழுத்துக்களையும் ரசிக்க நீங்களெல்லாம் இருக்கிறீர்கள்.. என்னையும் 75 பேர் பின் தொடர்கிறார்கள் என்றெண்ணும் போது நம்பவேமுடியவில்லை..


நமது ஆக்கங்களை நமது பதிவுகளை படித்துவிட்டு அதற்காக பாராட்டும் போதும் வாழ்த்தும் போதும். கிடைக்கும் ஆத்ம திருப்தி சந்தோஷம் வேறெங்கு கிடைக்கப்போகிறது எவ்வளவு பணம் கொடுத்தாலும் அந்த ஆத்ம திருப்தி வேறெங்கும் கிடைக்காது.. அது இந்த வலையுலகத்தில் கிடைக்கிறது உலகெங்கிலிருந்தும் எத்தனையோ அன்புள்ளங்களின் அறிமுகமும் ஆதரவும் மூலமாக.. நமது உணர்வுகளை எண்ணங்களை நம் கருத்துக்களை உள்ளேயே வைத்திருக்காமல் இவ்வாறான முயற்சிகளின் மூலம் வெளியிடும் போது மன அழுத்தமும் குறைகிறது..

அபுதாபிக்கு வந்தபிறகே பிளாக் என்றொரு விஷயம் இருப்பதையே அறிந்தேன்.. அதன்பிறகு வெற்றி FM இனையதள முகவரியினூடாக லோசன் அண்ணாவின் வலைப்பக்கத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அவரின் பதிவுகளையும் மற்றவர்களின் பதிவுகளையும் ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தேன்.. ஒவ்வொருவரின் எழுத்துக்களும் எனக்கும் ஆசையைத்தூண்டியது எழுதுவதற்கு.. பிறகு தமிழ்மணத்தில் "பிளாக் ஆரம்பிப்பது எப்படி" என்றொரு பதிவு பார்த்தேன் அதன் மூலம் என் ஆசையை நிறைவேற்றிக்கொண்டேன்.. என் பதிவுகளை பிறருக்கு கொண்டு சேர்க்கும் தமிழிஸ்,தமிழ்மனம்,தமிழ் 10,உலவு.காம் போன்ற திரட்டிகளுக்கும் பிளாக் சேவையை வழங்கும் கூகுளிற்கும் எனது நன்றிகள்..

நான் இலங்கையர் என்றாலும் அதிகமான தமிழ்நாட்டு நண்பர்களின் அன்பையும் ஆதரவையும் பார்க்கும் போது நானும் தமிழ்நாட்டில் பிறந்திருக்ககூடாதா என்ற எண்ணம் எனக்குள்.. வலையுலகத்தில் ஒவ்வொருவரும் தனக்கேயுரியவிதத்தில் சிறப்பாக எழுதி வருகிறார்கள். எல்லோருடைய பதிவுகளையும் படிக்க வேண்டும் ஓட்டு போட வேண்டும் ஆசையிருந்தாலும்.. இருக்கும் வேலைகளுக்குமத்தியில் அது முடிவதில்லை ஒரு நாளைக்கு ஒரு சிலரின் பதிவுகளை மட்டுமே படிக்க முடிகிறது.. இதில் நம்மளை தொடர்ந்து ஆதரிக்கும் சிலரின் பதிவுகளும் சில நேரம் விடுபட்டுப்போவதுண்டு..

ஆரம்பத்தில் கவிதை என்ற பெயரில் கிறுக்கலாம் என்று தொடங்கினாலும் சில கட்டுரைகளையும் எனக்குத்தெரிந்த விதத்தில் எழுதியிருக்கிறேன்.. தொடர்ந்து கவிதை எழுதினால் பார்ப்பவர்களுக்கும் சலித்துப்போய்விடும் என்றபடியால் ஆங்காங்கே சில மொக்கைகளும் பின் சுவாரஷ்யமான படங்களை தேர்ந்தெடுத்து அவற்றுக்கு கமெண்ட்ஸ் என்ற அடிப்படையிலும் என் பதிவுகளை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.. படிக்கும் காலத்திலிருந்தே கவிதை என்ற பெயரில் கண்ட கண்ட இடத்தில் கிறுக்குவது நோயாகிவிட்டது இலங்கை தனியார் வானொலிகளான சூரியன் FM வெற்றி FM போன்றவற்றிலும் பலமுறை ஒலித்திருக்கிறது எனது பிரதிகள் ஆனாலும் உண்மையிலேயே அவை கவிதைதானா என்று எனக்குத்தெரியாது இன்றுவரையிலும்..

பயப்படாதிங்க நாந்தான்..
நீங்கதாள்தான் சொல்லவேண்டும் நான் எழுதுவது உங்களுக்கு பிடித்திருக்கிறதா.. முடிந்தால் சொல்லுங்கள் எவ்வகையான பதிவுகள் அதிகம் பிடித்திருக்கிறது..


உங்களுடைய அன்புக்கு என்னிடம் தருவதற்கு ஒன்னுமில்லை நன்றி என்ற ஒன்றைத்தவிர.. இந்த வண்ணத்துபூச்சியை எடுத்துக்கொள்ளுங்கள் என் அன்புபரிசாக..

பேசும் படங்கள்...III

என்னங்க அப்பிடி பார்க்கிறிங்க இதுவும் பேஷன் தான்..
நீங்க மட்டும் இடுப்புக்கு கீழே உடுத்துட்டு பேஷன்னு சொல்லும் போது
நாங்க நெஞ்சுக்கு மேலே உடுத்துட்டு பேஷன்னு சொல்லக்கூடாதாக்கும்..



மோட்டார் சைக்கிள் பயணத்துக்கு ஹெல்மட் அவசியம் அப்பிடின்னுதானே சட்டம் உண்டு.. அது இரும்புல போடனுமா பிளாஸ்டிக்ல போடனுமா ரப்பரில் போடனுமான்னு இருக்கா..? அதுதான் வீட்டிலிருந்த bucketta தலையில போட்டுட்டமில்ல்ல்ல் எப்பூடி....

ஐ... BMW கழுத..

ஸ்கூல் பஸ்.. சாரி ஸ்கூல் ரிக்ஷா ...

அட அவசரத்திற்கு எதுன்னாலும் என்னங்க...

பூனைக்கு மணிகட்டும் ஆவேசத்துல நாலு பேரும் பூனத்தலையில ஏறிட்டோம்... ஆனா மணிய மறந்துட்டோம் ப்ளீஸ் யாராவது மணிய எடுத்து கொடுங்களே சத்தம் வராம..


மனிசப்பயலுகளா எங்களப்பார்த்தாவது பழகுங்க எப்படி ஒற்றுமையா இருக்குறதுன்னு..
 
ஏமாத்துறதே இவங்க வேலயாப்போச்சு.. முடிஞ்சா குடு இல்லாட்டி போய்யா..

ஒன்றாய் பிறந்தோம்
ஒன்றாகவே செல்கிறோம்
நேருக்கு நேர் மோத
துணிவின்றி..
உண்வைக்காட்டி
உயிரைப்பறிப்பதுதான்
மனிதன் மூளையோ...!

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...