மழை தருமோ இந்த மேகம்,,,,,?

மழை தருமோ இந்த மேகம்.... இது சினிமா  பாடலல்ல.... வானவீதியில் ஓடும் மேகங்களை அண்னாந்து பார்த்தபடி பல ஏக்கங்கள், பல கேள்விகள், பல எதிர்பார்ப்புகளை சுமந்தபடி இந்த மேகமாவது மழை தராதா...? இந்த பூமியையும் எங்கள் வாழ்கையையும் செழிப்பாக்காதா....? பயிர்களுக்கு உனவாகாதா...?  என்ற ஒரு ஏழை விவசாயியின் சோகம் கலநத ஏக்கம் இது......

                              மழை நீரை நம்பி விவசாயம் செய்யும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன்
என்பதால் மழை நீரின் அருமை பெருமை நன்றாகவே உணர்ந்தவன் நான். வானத்து மழையை நம்பி பயிர் நட்டுவிட்டு இன்றைக்காவது மழை வராதா என்று தினம்தோறும்
வானத்தை எட்டிப்பார்த்து எதிர்பார்த்து காத்திருக்கும் மழை தேடும் சமூகம் அது... "அறுவடை காலங்களில் மழை அதிகமாகி விளைச்சல் பாதிக்கப்படுவது வேறு கதை"
ஆனாலும் மழை வேண்டிய காலத்தில் மழையில்லாமல் பயிரோடு சேர்த்து அவர்களின் வாழ்கையும் வறண்டு போவதே இன்றைய கால நிலை..

                              காலனிலை மாற்றம் வெப்பம் அதிகரிப்பு மழையின்மை இதற்கெல்லாம் காரனம் என்ன... இயற்கையை அழிக்கிறோம் மரங்களை வெட்டுகிறோம்  காலனிலையை குழப்புகிறோம் மழையை தடுக்கிறோம் இறுதியில் ஏசி அறையிலே தஞ்சமடைகிறோம்
வசதியுள்ளவர்கள... மழையை நம்பிய ஏழை விவசாயிகள் என்ன செய்வார்கள் ஒற்றிய வயிரோடும் வற்றாத நம்பிக்கையோடும் தொடர்கிறது அவர்களின் காத்திருபபு காலம் உள்ளவரை...
\

                      ஆதி மனிதன் கண்டுபிடித்த ஆதி தொழில் விவசாயம் அல்லவா..... இன்றைய கால கட்டத்தில் அதிகம் வறுமையினால் வாடுபவர்களும் அந்த விவசாயிகள்தானே, ஒரு மருத்துவன் உயிரை காப்பாற்றுகிறான் ஒரு ஆசான் அறிவை வளர்க்கிறான் ஒரு பொறியியலாளன் நாம் வசிக்க கட்டுமானங்களை கட்டுகிறான் ஒரு நிர்வாகி சமூகத்தை நிர்வகிக்கிறான் இவை எல்லாவற்றையும் தொடர உயிர் வாழ வேண்டுமல்லவா உயிர் வாழ உணவு தேவை உணவை உற்பத்தி செய்து தருபவன் யார் விவசாயி அல்லவா அவன் போற்றப்படவேண்டியவந்தானே.... சமூகத்தில் மதிக்கப்படவேண்டியவந்தானே..... அவன் வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படவேண்டும்தானே.....

                            விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் எவ்வாறு இருக்கிறது ஏனைய துறைகளில் உள்ளவர்கள் சிகரத்தை னோக்கி நடைபோடும் இவ்வேளையில் ஆதி மனிதர்கள் போலவே வாழ்ந்து வருகினறனர் அதே வேர்வை, அதே அழுக்குத்துனி, அதே வறுமை வளர்ந்த நாடுகளில் அதி நவீன தொழில்னுட்பங்களை பயன்படுத்தி அவர்களின் விவசாயத்துறையும்
விவசாயிகளும் எங்கயோ சென்றுகொண்டிருக்க நம் நாட்டின் நிலையோ நம்மில் பலர் அவர்களை காட்டுவாசிகளை போலவே பார்க்கின்றனர்...

                           எவவளவுதான் வெயில் மழை பாராமல் உழைத்தாலும் கிடைப்பதென்னவோ அன்றைய தேவையை மட்டும் நிரைவேற்ற போதுமான பெறுமதியே...இதில் பலருக்கு மூண்று உணவும் கஸ்டமே.. அவர்களின் வலியும் வேதனைகளுமே மிஞ்சும் சேமிப்பு
போஷாக்கின்மை, கல்வி கற்க வசதியின்மை போன்றவற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள் எத்தனை.... புத்தகம் தூக்க வேண்டியவர்கள் கூலித்தொழிலாளர்களாய், தாயிப்பாலைத்தவிர வேறு எந்த பாலையும் கானாத குழ்ந்தைகள் எத்தனை எத்தனை....

                           இவவாறிருக்கையில் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்காவது நியாயமான விலை கிடைக்கிறதா இல்லை. மூண்று மாதம் ஆறு மாதம் வெயில் மழை பாராது அயராது உழைத்து களைத்தவர்களை விட பத்து பதினைந்து நிமிடங்கள் வியாபாரம் பேசும் இடைத்தரகள்,வியாபாரிகள் அல்லவா அதிக லாபம் ஈட்டுகின்றனர்
ஏதாவது பேசப்போனால் உங்கள் பொருள் இல்லாவிட்டால் வெளினாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொள்வோம் என்ற பயமுறுத்தல் வேறு....

                          தொடரும் வறட்சியினால் விளைனிலங்கள் பாலைவ்னமானால் உணவுத்தேவைக்கு எங்கே போவது. இன்னும் 40 , 50 வருடங்களில் கைனிறைய காசிருக்கலாம் கணனியிருக்கலாம் மென்பொருள் இருக்கலாம் உணவில்லையென்றால் காசும் கணனியும் மென்பொருள்களும் உணவைத்தேடித்தருமா....? இல்லை மழையைத்தான் பொழிவிக்குமா....? முன்னொரு காலத்தில் இலங்கையை ஆண்ட மனனனான பராக்கிரமபாகு "வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையேனும் கடலை சென்றடைய விடமாற்றேன்" என்றான் சொன்னது மட்டுமல்லாம்ல் பல நீர்ப்பாசனத்திட்டங்களை செயற்படுத்தினான் அதன் மூலம் மக்கள் இன்னும் பயன் பெறுகின்றனர்... இப்போதுள்ள ஆட்சியாளர்க்ளோ மழை பெய்தால் அவசரமாக கடலை சென்றடையும் திட்டம் அல்லவா போடுகின்றனர்..

                            நமக்கெல்லாம் என்னவோ மழை என்பது வெறும் நீர்த்துளிகள்தான் ஆனால் ஏழை விவசாயிகளுக்கு அது வாழ்வின் ஆதாரம் அல்லவா... ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு உணவுப்பருக்கை அல்லவா.......

                                             இயற்கையை காப்போம்
                                             மழையை வரவேற்போம்
                                             ஏழைகள் வாழ்வு வளம் பெற
                                             வழி செய்வோம்......
                                             நாடு செழிக்கட்டும்
                                             நம்மக்கள் வாழட்டும்
                                             வளமுடன்.....................!


ரியாஸ்,
                          
                           

யாருமில்லை....

                    ஏன் என்று கேட்க யாருமில்லை......!

பக்கத்து வீட்டு யூதனை
கைது செய்தார்கள்
நான் ஏன் என்று கேட்கவில்லை
ஏன் என்றால்
நான் யூதனில்லை......
பக்கத்து வீட்டு கம்யூனிசவாதியை
கைது செய்தார்கள்
நான் ஏன் என்று கேட்கவில்லை
ஏன் என்றால்
நான் கம்யூனிசவாதியில்லை.....
இறுதியில்
என்னைக்கைது செய்தார்கள்
ஏன் என்று கேட்க்
யாருமில்லை......!
                          
(யரோ சொண்னது)


ரியாஸ்...

சமர்ப்பணம்



                                என் தந்தையின் நினைவுகள்.....!

அன்பானவர்களே.. நான் மொஹமட் ரியாஸ் சொந்த இடம் இலங்கை.
தற்பொழுது அபு தாபியிலிருந்து, நீண்ட காலமாகவே எழுத வேண்டுமென்ற ஆர்வமிருந்தாலும் அதற்கான வாய்ப்போ வசதியோ கிடைக்கவேயில்லை நானே எழுதி நானே படித்து நானே கிழித்து போட்டிருக்கிறேன் எத்தனையோ தடவை. அன்மையிலேயே அறிந்து கொண்டேன் வ்லைப்பூ மற்றும் பதிவுகள்/இடுகைகள் சம்பந்தமாக அதன்படி
எப்படியாவாது எழுத வேண்டுமென்ற ஆர்வத்தில் தமிழ் யுனிகோடு தெரியாமல் ஒவ்வொரு எழுத்தாக தேடி எழுதிக்கொண்டிருக்கிறேன்.

                 எழுதும் முதல் பதிவு எதைப்பற்றி எழுதினால் நல்லாயிருக்கும் என்ற சிந்தனையின் போதுதான் எங்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஒருவரை பற்றி எழுத முடிவு செய்தேன் அவர்தான் என் தந்தை அவர் பிறந்தது இலங்கையின் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள ஒரு பிந்தங்கிய கிராமத்தில். கிராமம் என்பதாலும் தனது குடும்பத்தின் வறுமை நிலை காரனமாகவும் பெரிதாக கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கவில்லை சிறிய வயது முதல்  தனது தந்தையுடன் சேர்ந்து விவசாயத்திலே ஈடுபட்டு ரொம்பவே கஸ்டப்பட்டார் அவ்வாறு சிறிது சிறிதாக வாழ்கையுடன் போராடியே முன்னுக்கு வந்த அவர், தனது 15 வது வயதில் தனக்கென்றொரு தனியான வியாபார நிலையமொன்றையும் ஆரம்பித்து தனது முழு முயற்சியினாலும் உழைப்பாலும் முன்னேறி தனக்கென்றொரு வீடொன்றையும் நிர்மானித்தார்.

                                தனது 24வது வயதில் தனது சொந்த மாமன் மகளை கைப்பிடித்தார் அவர்தான் என் அம்மா.இருவரின் சந்தோசமான அழகான அமைதியான இல்லற வாழ்கையின் அடையாளங்களாய் மூண்று பிள்ளைகள் மூண்றாவதாக பிறந்தவனே நான் எனக்கு ஒரு சகோதரன் ஒரு சகோதரி.
                                 இவ்வாறு தனது வாழ்கை பாதையில் பிள்ளைகளுடனும் வியாபாரத்துடனும் பயனித்துக்கொண்டிருந்தபோதுதான் என் தந்தையின் வாழ்கையில் பெரியதொரு சோதனை ஏற்பட்டது அதுவே வியாபாரத்தில் ஏற்பட்ட திடீர் நஸ்டம் இதனால் அதிகளவு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது தொடர்ந்து வாங்கிய கடனினால் கடன் சுமை தலைக்கு மேல் அதிகரிக்கவே என்ன செய்வதென்று தெரியாமல் உடைந்து போன நேரத்திலேதான் எல்லோருக்கும் புகலிடம் கிடைக்கும் அரேபிய தேசத்தில் என் தந்தைக்கும் கிடைத்தது வீட்டு சாரதி வேலை மூலமாக.
                                
                                தனியான வியாபாரத்தாபனம் நடத்தியவர் வீட்டு சாரதியாக் வேலைக்கு செல்வதா.... அந்த நேரத்தில் அவரது மனசு எவ்வளவு துடித்திருக்கும் அந்த இறைவனே அறிவான்.சந்தோசங்களை தொலைத்தவாரு குடும்பம் பிள்ளைகளை விட்டு முதல் முறையாக தாயகத்தை விட்டு கடல் தாண்டி புறப்பட்டார்.... அப்போது எனக்கு வயது நான்கு. ஒன்றல்ல இரன்றல்ல பத்து வருடங்கள் கடுமையான் கஸ்டத்துக்கு ம்த்தியில் பனிபுரிந்தார் தனிமைகளை மட்டும் துனையாக்கிக்கொண்டு.

                               பின் நாடு திரும்பி என் சகோதரியின் திருமணத்தை எடுத்த பின் மீண்டும் உழைக்க தொடங்கினார் எங்களின் நலனுக்காகவே.... ஓய்வெடுக்கும்படி நாங்கள் எவ்வளவுதான் வற்புறுத்தியும் கேட்க்வேயில்லை "15 வயசுலயிருந்து உழச்ச கை கால்கள வெச்சிட்டு எப்டி என்னால சும்மாயிருக்க முடியும்" என்றே சொல்வார். அவர் பட்ட கஸ்டங்கள் எங்களுக்கு வரக்கூடாது என்பதற்காக என்னையும் பிரபலமான் பாட்சாலையொன்றில் சேர்த்து செலவழித்து படிக்க வைத்தார்.

                              இவ்வாறு காலங்கள் ஓடிக்கொண்டிருக்கும் போதுதான் எனக்கும் அபு தாபியில் நல்லதொரு வேலை வாய்ப்பு கிடைத்தது.... அவரே விமான நிலையம் வரை வந்து கட்டித்தழுவி வழியனுப்பி வைத்தார் கண்னீரில் நனைந்த கண்களுடன்..... அதுவே எங்கள் கடைசி தழுவல் கடைசி சந்திப்பாயிருக்குமென நான் ஒரு போதும் நினைக்கவில்லை.

                                இங்கே வந்து 15 நாட்களிலேதான் அந்த துயரச்செய்தி காதுகளை எட்டியது திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் என் தந்தை இறந்து விட்டதாக.....  அப்போது சில நிமிடங்கள் நானும் இறந்தே பிறந்தேன் யாரிடம் சொல்லி என்ன லாபம் தனிமையிலேயே அழுதேன் என்ன செய்வது நானே அழுது நானே என்னை தேற்றிக்கொண்டேன். ஒண்றிருக்கும் போது அதன் அருமையோ பெருமையோ யாருக்கும் புரிவதில்லை அது இல்லாம்ல் போகும் போதுதான் அதன் அருமையும் வலியும் அப்போது புரிந்தது எனக்கு.

                                  சில நேரங்களில் பாசத்தை உள்ளே வைத்துக்கொண்டு வெளியே கொஞ்சம் கடுமையாகவே நடந்துகொள்வார் அவ்வாறான பொழுதுகளில் நான் அவருடன் முரண்பட்டுக்கொண்டதுமுண்டு அவ்வாறான் பொழுதுகளில் அவரின் மனதை புன் படுத்திவிட்டோமோ என்ற நினைப்பு என்னை சஞ்சலப்படுத்திக்கொண்டேயிருக்கிறது. அவர் எங்களை விட்டுப்பிரிந்து ஐந்து மாதங்கள் கழிந்தபோதும் அவரின் ஞாபகங்கள் மனதோடு இன்னும் ஈரமாகவே.... சில சமயங்களில் கண்னீரையும் வரவழைக்கிறது.....

                                  அதன் பாதிப்பாகவே இந்த பதிவும் ஆகவே எனது இந்த முதல் பதிவு என் தந்தைக்கே சம்ர்ப்பணமாகட்டும்.....


அன்புட்ன்,,

ரியாஸ்


Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...