இறைவா...!
















இறைவா...

உன்னையே வணங்குகிறோம்
உன்னிடமே
உதவியும் தேடுகிறோம்...!
பசியோடு வாழ்ந்தாலும்
பயங்கரவாதம்
வேண்டாமே...
மழை பொழியாவிட்டாலும்
மனிதனைக்கொல்லும்
குண்டு மழை
வேண்டாமே...!


















ஆயிரம்

அர்த்தங்கள் சொல்லும்
இவன் பார்வைகளே
போதும்..
வலிகள் நிறைந்த
வாழ்க்கையின்
கதைகள் சொல்ல...!














காத்திருக்கிறோம்

விடியாத
விடியல்களுக்காய்..
எப்போதாவது
விடியாதா என்று
கையில்
நம்பிக்கை ஒளி
ஏந்தியவாறு...!















தேடிக்கொண்டிருக்கிறோம்

எப்பவோ
தொலைத்த
புன்னகைகளை...!






















இப்பூமியில்

பிறந்ததுதான்
இக்குழந்தை
செய்த
குற்றமா...!


ரியாஸ்,,

26 comments:

Asiya Omar said...

மனதை உருக்கும் கவிதை,இறைவா ! இந்நிலையும் மாறுமோ!

ஹேமா said...

வணக்கம் ரியாஸ்.முதல் கவிதையே கலங்க வைக்கிறது.எங்கள் தேசத்துக்காக மனம் ஏங்குகிறது.

மற்றும் சில பதிவுகளும் நிறைவாயிருக்கிறது.
வருவேன்.தொடருங்கள்.

Chitra said...

இப்பூமியில்

பிறந்ததுதான்
இக்குழந்தை
செய்த
குற்றமா...!


..... மனதை உலுக்கும் கேள்வி இது..... பதிலும் இல்லா கேள்வி இது....!

Jay said...

பசியோடு வாழ்ந்தாலும்
பயங்கரவாதம்
வேண்டாமே...

அனைத்து வரிகளும் அருமை

சௌந்தர் said...

கலக்கல் கண்ணீர் கவிதை

elamthenral said...

மிக அருமையான கவிதை வாழ்த்துக்கள்... மனதை வருடும் நினைவுகள் இவை அனைத்தும்....

ஜெய்லானி said...

:-(

Anonymous said...

vedi marunthai kandu pidiththathu than kutram.

கவிதா said...

இந்த நிலை என்று மாறுமோ? என் இறைவா !!!!!!

உங்களில் ஒருவன் said...

nice brother

Unknown said...

its so nice

Unknown said...

its so nice

Riyas said...

நன்றி ஆசியா அக்கா வருகைக்கும் கருத்திற்கும்..

நன்றி சித்ரா அக்கா வருகைக்கும் கருத்திற்கும்

நன்றி Jay உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும்

நன்றி சௌந்தர் வருகைக்கும் கருத்திற்கும்

நன்றி ஜெய்லானி வருகைக்கும் கருத்திற்கும்

நன்றி புஷ்பா வருகைக்கும் கருத்திற்கும்

நன்றி கவிதா உங்க முதல் வருகைக்கும் கருத்திற்கும்

நன்றி ஷாபிக் உங்க முதல் வருகைக்கும் கருத்திற்கும்

நன்றி zu உங்க முதல் வருகைக்கும் கருத்திற்கும்

Riyas said...

ஹேமா said...
வணக்கம் ரியாஸ்.முதல் கவிதையே கலங்க வைக்கிறது.எங்கள் தேசத்துக்காக மனம் ஏங்குகிறது.

மற்றும் சில பதிவுகளும் நிறைவாயிருக்கிறது.
வருவேன்.தொடருங்கள்//

வணக்கம் ஹேமா அக்கா.. மிக்க நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும்.. தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்..

Riyas said...

// கவிதா said...
இந்த நிலை என்று மாறுமோ? என் இறைவா !!!!!! //

நிச்சயம் ஓர் நாள் மாறலாம்.. நன்றி உங்கள் வருகைக்கும் பின் தொடர்ந்தமைக்கும்..

கலகலப்ரியா said...

||இறைவா...

உன்னையே வணங்குகிறோம்
உன்னிடமே
உதவியும் தேடுகிறோம்...!
பசியோடு வாழ்ந்தாலும்
பயங்கரவாதம்
வேண்டாமே...
மழை பொழியாவிட்டாலும்
மனிதனைக்கொல்லும்
குண்டு மழை
வேண்டாமே...!||

ம்ம்... :)..

கவிதை எல்லாம் நன்மையை நாடியவை.. நல்லாருக்கு

Riyas said...

வாங்க கலகலப்ரியா...

உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

மங்குனி அமைச்சர் said...

மனசு கஷ்டமாயிடுச்சு சார்

ஷர்புதீன் said...

:(

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

கவிதை மனிதினை உருகச்செய்து விட்டது.//இறைவா...

உன்னையே வணங்குகிறோம்
உன்னிடமே
உதவியும் தேடுகிறோம்...!
//வரிகள் அருமை

மணிகண்டபிரபு said...

நல்ல கவிதை ரியாஸ்... கண்கள் கலங்கி விட்டன இந்த புகைப்படங்களை பார்த்து...

தூயவனின் அடிமை said...

சொந்த மண்ணில் அடிமையாக பல அவலங்களை அன்றாட வாழ்க்கையாக கொண்டு வாழும் இவர்களுக்கு நிச்சயம் இறைவன், நல் வழி காட்டுவான்.

Swengnr said...

கவிதை எழுதும் போது இரண்டு விஷயம் முக்கியம். ஒன்று நல்ல வார்த்தை ஜாலம். இரண்டு நல்ல கருத்து. இரண்டுமே பின்னி இருக்கிறீர்கள். நல்ல கவிதை - இதயத்தை தொடும். உங்களது ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. வாழ்த்துக்கள்!

செல்வா said...

அருமையான கவிதை ...!!
//மழை பொழியாவிட்டாலும்
மனிதனைக்கொல்லும்
குண்டு மழை
வேண்டாமே...!//

அருமையான வரிகள் ...!!

isahk870 said...

hi this is isahk.. unga kavithai supera iuku.....valthugal

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...