சில
இரவுகள் வேண்டுகிறேன்
இறைவனிடம்..
தாய்மடியில்
தலைவைத்து உறங்கிட...!
தவிக்கிறது மனசு
மீண்டும்
குழந்தையாகிட
தாயின் சேலைக்குள்
ஒளிந்து விளையாடும்
குழந்தையை
கானும் போதெல்லாம்...!
தாயே
நான் உன்னருகில்தான்
உன் நினைவுகள்
என்னோடு
வாழும் வரை....!
ஆகாயம் நோக்கிப்போன
பறவை
பசித்தால்
பூமிக்கு வருவது போல
நான் எங்கு சென்றாலும்
என் நினைவுகள்
உன்னை நோக்கியே
வரும்...!
பாலைவன தேசத்திலிருந்து
ரியாஸ்..
Subscribe to:
Post Comments (Atom)
Rayilin oligal Song lyrics in English and Tamil
Railin Oligal Lyrics in Blue Star Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...
-
சில பாடல்களை ரசிப்பதற்கு அதன் மொழி ஒன்றும் தடையாய் இருப்பதில்லை அதன் இசையும் மெட்டும் பாடகரின் குரலின் இனிமையும் உணர்ச்சிகளுமே அந்தப்பாடலின...
-
நான் காலி பாடல் வரிகள் பாடியவர்கள் : சீன் ரோல்டன் மற்றும் கல்யாணி நாயர் இசை : சீன் ரோல்டன் பாடல் வரிகள் : மோகன் ராஜன் Image source ...
-
வீரா ராஜ வீர பாடல் வரிகள் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து இசை A.R ரஹ்மான் பாடியவர்கள் சித்ரா, ஹரிணி ,ஷங்கர் மகா தேவன் பாடல் வரிகளை...
17 comments:
அருமை மறக்காத நினைவுகள் கசிகிறது வார்த்தைகளாக . பகிர்வுக்கு நன்றி
கவிதை அருமை ......வாழ்த்துகள்
மனம் கனக்கிறது ரியாஸ்.புலம்ப மட்டுமே முடிகிறது.இறக்கும் போதாவது என் தாய் மண்ணில் என் நானும் நிறையத் தரம் எழுதிவிட்டேன் !
சூப்பர்.
அருமையான கவிதை..
தாய் நினைவுகள் சுமக்கும் வரிகள்..
கவிதை சூப்பர்.
நினைவுகள் அருமை ரியாஸ்
கவிதை - வற்றாத நினைவுகள்
நினைவுகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா :)
கவிதை நல்லா இருக்கு ரியாஸ்
மிக அருமை,இதயத்தை தொடும் அருமையான கவிதை.
சூப்பர் ரியாஸ்! பாச உணர்வை மிக அழகாக அருமையாக வெளிப்படுத்தியிருக்கீங்க..மனம் கனத்துப்போவது உண்மை
தாயன்புக்கு ஏங்குவதை, அருமையாக வெளிப்படுத்தி இருக்கும் கவிதை. ம்ம்ம்....
ரொம்ப நல்லா இருக்குங்க..
தமிழிசிடமிருந்து..
Hi Riyas363,
Congrats!
Your story titled 'தாய மடி...!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 22nd July 2010 07:56:04 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/307669
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
உங்க அம்மாட்ட படிச்சு காமிச்சீங்களா ரியாஸ்?!
//ஆகாயம் நோக்கிப்போன
பறவை
பசித்தால்
பூமிக்கு வருவது போல
நான் எங்கு சென்றாலும்
என் நினைவுகள்
உன்னை நோக்கியே
வரும்...!///
அருமையான கவிதைங்க ..
விரைவில் உங்கள் அம்மைவைப் பார்க்க வாழ்த்துக்கள் ..
Romba arumaya iruku riyas.....innum kavithaigal irundha please balakrishnan111@gmail.com ku mail pani vidunga. thanks
Post a Comment