எண்ணங்கள் மாறலாம்..!


என் பாசத்திற்குரிய தமிழ் மக்களே உங்கள் பாரதிராஜா பேசுகிறேன் சாரி உங்கள் ரியாஸ் பேசுகிறேன். முன்னொரு காலத்தில் ஒரு தனித்தீவில் தனியொரு மனிதன் வாழ்ந்துவந்தான்.. அந்ததீவில் அவன்மட்டுமே தனிமனிதனாக இருந்தான். அவ்வாறு தனிமையில் வாழ்வது அவனுக்கு அலுத்துப்போய்விட்டது. நீண்ட நேர சிந்தனையின் பின் அவனுக்குள் ஒரு எண்ணம் தோன்றியது.. காட்டிலுள்ள மரக்கட்டைகளை பயன்படுத்தி ஒரு படகு செய்து அதைப்பயன்படுத்தி கடலில் பயணம் செய்து உலகில் வேறு திசைகளுக்கு பயணித்து புதிய நாடுகளை கண்டறிந்து அங்குள்ள மனிதர்களோடு சமூகமாக வாழலாம் என அவன் எண்ணவோட்டங்கள் பரந்துவிரிந்தது.. படகு செய்து அதில் பயணம்செய்வதுபோல் அவன் மனக்கண்ணிலும் தென்பட்டது.படத்தில் உள்ளதுபோன்று.


அவன் நினைத்தபடியே படகுகட்டும் வேலையை தொடங்கினான் அப்போது தூரத்தில் ஒரு பெண் தீவை நோக்கி வருவதை அவதானித்தான். படகு கரையொதுங்கியதும் அவனருகில் வந்தாள் அந்தப்பெண்.. அவள் அழகானவளாகவும் இருந்தாள். அருகில் வந்து என்ன செய்கிறாய் எனக்கேட்டாள் அப்போது அவன் நான் படகு கட்டிக்கொண்டிருக்கிறேன் என்றான் அதற்கவள் எதற்காக.. என திருப்பிக்கேட்டாள் அதற்கவன் இந்த தீவில் நான் மட்டும்தான் இருக்கிறேன் என்னால் தனிமையில் வாழமுடியவில்லை அதனால் மனிதர்கள் எங்காவது இருக்கின்றார்களா என தேடிப்போக போகிறேன் என்றான்.

அதற்கவள் நான் அவ்வாறு மனிதர்கள் உள்ள இடத்திலுருந்துதான் வருகிறேன்.. நீ நினைப்பதை போன்று மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வது அவ்வளவு சுலபமானதல்ல அவ்வாறு வாழ்ந்து அலுத்துப்போய்த்தான் தனிமையை தேடி இங்கே வந்தேன் என்றாள். அவள் பேச்சைக்கேட்டதும் சிந்திக்க தொடங்கினான் அவள் சொல்வது சரியாக இருக்குமோ.. பிறகவள் நாம் இருவரும் இந்த தனித்தீவில் சேர்ந்து வாழ்ந்தால் என்ன.. யாருடைய தொந்தரவும் இல்லை உன்னைப்பாதித்த தனிமையும் என்னால் இல்லாமல் போய்விடும்.. உன் அபிப்ராயம் என்ன எனக்கேட்டாள். அவள் சொல்வது அவனுக்கு சரியாகவே தோன்றியது யாருமறியா புதிய உலகம் தேடிச்செல்வதைவிட இங்கேயே அவளுடன் இருந்துவிடலாம் என முடிவுசெய்தான்.

பிறகு படகுசெய்ய வெட்டிய மரக்கட்டைகளை பயன்படுத்தி வீடு வாசல் கட்டில் செய்து சந்தோஷமாக குடும்பவாழ்க்கையை தொடங்கினர் இருவரும் அந்ததனித்தீவில்(படம் பார்க்க)
இதன் ஒன் லைன் ஸ்டோரி என்னன்னா.. எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஆனால் ஒரு பெண்ணால் உங்கள் எண்ணங்களை மாற்றமுடியும்.. An idea can change your life, but a girl can change your idea...




கதை
திரைக்கதை
வசனம்
டைரக்சன்

ரியாஸ்..

புதிய உலகம்...!

விடியல் வந்து
விளக்கேற்றிய பொழுதொன்றில்
சாலைகளில் எங்கும் மனிதர்கள்
போவதும் வருவதுமாய்
நடையும் ஓட்டமுமாய்
நகர்ந்துகொண்டிருந்தார்கள்
நாலாபுறமும்....
குதூகலத்தை சுமந்த
குழந்தைகளும்
வாலிபத்தை தொலைத்த
வயோதிபர்களும்
வாழ்க்கையோடு போராடும்
மத்திய வர்க்கத்தினரும்
நகர்தலில் உள்ளடக்கம்...
கனவை சுமந்து சிலர்
கண்ணீர் சுமந்து சிலர்
புன்னகை சுமந்து சிலர்
புன்னகை தொலைத்து சிலர்
எதுவும் புரியாமல் சிலர்
அங்கும் இங்குமாய்....
விடிந்தும் விடியாத உணர்வுகளோடு
ஏக்கங்களுடனும்
எதிர்பார்ப்புகளுடனும்
கிராமத்து மனிதர்கள்....
இருந்தும் இல்லாத உணர்வுகளோடு
ஆசைகளுடனும்
அவஸ்தைகளுடனும்
நகரத்து மனிதர்கள்....
உலகம் மட்டும் தினம் தினம்
புதுசு புதுசாய்
அலங்கரித்துக்கொள்கிறது
மனிதன் மட்டும்
இன்னும் பழையவனாகவே
அதே பழைய மனதுடன்....

உலகிலேயே பெரிய பூ..!




இந்தப்பூ மெக்சிகோ நாட்டில் உள்ளது.. 2 மீற்றர் உயரமும் 75 கிலோ எடையும் கொண்டதாம். 40 வருடங்களுக்கு ஒரு முறைதான் இந்தப்பூ மலருமாம். அதுவும் மூன்று நாட்கள்தான் இருக்குமாம்.. ஒரு மனிதனின் வாழ்நாளில் ஒரு தடவை அல்லது இரு தடவைதான் பார்க்கமுடியும் போலிருக்கிறது.. (மெயிலில் வந்தது)


நான்..நீ...!


மழை தேடும் பூமி நான்..
மேகம் சுமக்கும் வானம் நீ..
இரவோடு வரும் இருள் நான்..
என்னைத்தழுவ வரும் நிலவு நீ..
அயர்ந்து தூங்கும் அதிகாலை நான்..
அடித்து எழுப்பும் விடியல் நீ...
எழும்ப மறுக்கும் சோம்பல் நான்..
உற்சாகம் தரும் தேனீர் நீ..
காட்சிகள் தொலைத்த கனவு நான்..
காட்சிகள் தரும் கண்கள் நீ..
எழுத நினைக்கும் கவிதை நான்..
வர மறுக்கும் வார்த்தை நீ...
அடம்பிடிக்கும் குழந்தை நான்..
ஆசைகாட்டும் திருவிழா நீ..
தினம் வரும் பகல் நான்..
எனக்குள் வர முடியா இரவு நீ..
வாசிகசாலை புத்தகங்கள் நான்..
வாசித்துமட்டும் செல்லும் வாசகி நீ..
எதுவரை நான்....
அதுவரை நீ...!

எந்திரன் மாயாஜாலம்..!

நாங்களும் பார்த்துட்டமில்ல கடந்த கொஞ்ச நாட்களாகவே பதிவுலத்தில் எந்திரனை கடித்து மென்று விழுங்கி வாந்தியும் எடுத்துவிட்டார்கள் நிறையப்பேர் நான் கொஞ்சம் லேட் எல்லாரும் எல்லாத்தயும் எழுதிட்டாங்க நான் என்னத்த எழுதி என்ன பன்ன என்று நினைத்தே காலம் ஓடிவிட்டது..  நேத்து வந்த பயலெல்லாம் எந்திரன பத்தி எழுதுறான் நீ.. ஆறு மாசமா பதிவுலகத்துல் இருக்கே நீ.. எழுதக்கூடாதா என என் மனசாட்சி என்னையே கேள்வி கேட்குது அதுதான் ஆரம்பிச்சாச்சி..ரெடி ஸ்டார்ட்.. 


எந்திரனின் கதை இதுதான் அப்பிடின்னு ஆரம்பிச்சா நீங்களெல்லாம் கடுப்பாகிருவிங்கன்னு தெரியும். அதனால டிரக்கட்டா மேட்டருக்கு போயிடுவோம்.. இது வருவதுக்கு முன்னிருந்த எதிர்பார்ப்பு வந்தபிறகு குறைந்து போனது.. காரணம் ஷங்கரிடம் இதைவிட நிறைய எதிர்பார்த்தேன் ஷங்கரின் அன்னியன் திரைப்படம் என்னில் ஏற்படுத்திய தாக்கம் எந்திரன் ஏனோ ஏற்படுத்தவில்லை.. இது இந்திய சினிமாவிற்கு புதுசு என்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழினுட்பத்திக்காகவும் பாராட்டலாம் என்றாலும் முழுமனதாக திருப்திபடமுடியவில்லை..

தமிழ் சினிமாவில் ஹீரோ எப்படிப்பட்டவராயிருந்தாலும் காதலிக்கனும் டூயட் பாடனும் என்பது எழுதப்படாத விதியாச்சே.. இதிலும் ரஜினி காதலிக்கிறார் டூயட் பாடுகிறார்.. ஆனால் எவ்வளவு பாடுபட்டும் வயதைத்தான் மறைக்கமுடியவில்லை.. வசீகரன் ரஜினியைவிட சிட்டி ரஜினிதான் கலக்கல் அதுவும் வில்லனாக மாறும் தருனங்களில் நல்ல நடிப்பு..கருப்பு ஆடு உள்ள வந்ததாக கூறிவிட்டு மே,,, மே,,, என்று சொல்வாறே சூப்பர் ஐஸ் படம் முழுக்க வருகிறார் திரைக்கதை அப்படி. 

முதலில் சிட்டியை உருவாக்கி செயற்படுத்தும் காட்சிகளில் ஒரு ஆங்கிலேய படம் பார்க்கும் உணர்வு வந்தாலும்.. பின் ஐஸின் மேல் சிட்டிக்கு காதல் வரும் காட்சிகளில் இல்ல இல்ல இது தமிழ் படம்தான் எங்கிற உணர்வைத்தருகிறது.படத்தில் கருனாஸ் சந்தானம் பாத்திரங்கள் கொஞ்சம் சிரிக்க உதவினாலும் மனதோடு ஓட்டவில்லை.. கிராபிக்ஸ் காட்சிகள் அழகு.ஆனால் அதுமட்டும் போதாது ஒரு படத்தின் தரத்தைச்சொல்ல. இது ஒரு மசாலா பொழுது போக்கு படம் என்ற வகையில் பார்த்தால் நல்லதொரு பொழுது போக்குத்தான்.. ஆனால் இதுஒரு மைல்கல் இந்திய சினிமாவையே மாற்றியபடம் என்றால் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளமுடியாது..

படத்திற்காக அதிகமாக மெனக்கெட்டிருப்பது புரிகிறது..இதுமாதிரியான திரைப்படங்களின் வருகைக்கு இது முதற்படியாக அமையும் என இதை பாராட்டலாம்.. மற்றபடி படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் ஒரு ரோபோவால் அவ்வளவு அவசரமாக ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கமுடியுமா..? இதுமாதிரியான உண்மைக்கு புறம்பான வெறும் கற்பனைக்கு மட்டுமே எட்டக்கூடிய வகையில் நிறைய  ஆங்கிலப்படங்கள் வந்திருக்கின்றன் ஆனால் அதில் கற்பனை மட்டும்தான்.. அதிலும் ஒரு உண்மைதன்மை இருக்கும் இதிலே அது மிஸ்ஸிங்..



பாடல்களை பொருத்தவரை பரவாயில்லை ரகம்.. பாடல் காட்சியமைப்புகளும் அழகு.  இரும்பிலே ஒரு இருதயம் முளக்குதே.... புதிய மனிதா பாடல்கள் என்னைக்கவர்ந்தவை ரஹ்மான் பின்னனி இசையிலும் கலக்கியிருக்கிறார்.. இறுதிக்கட்ட காட்சிகள் பாம்புபோல் உருவாக்கப்பட்ட காட்சிகள் நல்ல விருந்து குழந்தைகள் உட்பட.. (ஒரு வேளை இது குழந்தைகளுக்கான படமாயிருக்குமோ சரி விடுவோம் நாமலும் குழந்ததானே...) யாரப்பா அது எகத்தாளமா சிரிக்கிறது...

 படத்தின் எடிட்டர் ஆண்டனி.. இசைக்கலவை ரசூல் பூக்குட்டி..   படத்தின் கலை இயக்குனர்..  ஒப்பனைக்கலைஞ்சர்.. நடன இயக்குனர்கள்.. இனை இயக்குனர்கள்.. ஒரு காட்சியில் வந்துபோகும அமரர் ஹனிபா.. வில்லனாக வரும் டென் சொங்கப்பா.. எழுத்தாளர் சுஜாதா.. பாடலாசிரியர்கள் வைரமுத்து,கார்க்கி (யார் இந்த கார்க்கி அவருக்கு பிளாக் எல்லாம் இருக்காமே தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) இரானுவ பரிசோதனையில் சிட்டியால் சொல்லப்படும் கணிப்பொறிக்கும் காதல்தந்த கண்ணிப்பொறி.. என்ற கவிதைக்கு சொந்தகாரரான நா.முத்துக்குமார் ஆகியோருக்கும் பாராட்டுகள்.. ஒரு கலைஞ்சனை வெறுமனே குற்றம் மட்டும் சொல்லாமல்.. அவனின் திறமையை ஊக்குவிக்கும்போதுதானே அவனிடமிருந்து புதியவை ஊற்றெடுக்கும்..

ஷங்கரின் வித்தியாசமான பார்வைக்கும் உழைப்புக்கும் கண்டிப்பாக பாராட்டலாம்.. ஆனால் இந்தபடத்த வெற்றிபெற செய்ய வேண்டும் என்ற நோக்கில் சன் டீவியின் ஓவர் பில்டப்பும் ரஜினி ரசிகர்களின் முட்டாள்தனமான செய்கைகளும் தாங்கமுடியல்ல நான் சொல்ல வந்தத சொல்லியாச்சி இனி நீங்க சொல்றத சொல்லுங்க..

தொலைகிறது வாழ்க்கை...!

கணினியோடு
கடந்துசெல்கிறது
காலங்கள்
இதுதான் இயந்திரவுலகமோ
இதுதான் நவீனமோ
உலகமே காலடியில்
உருண்டோடி வருகிறது
பணச்சக்கரம் பூட்டி....
விடிகிறது காலை
கணிப்பொறியோடு வேலை
மீண்டும் மாலைப் பொழுதுபோக்கு
அதுவும் தேடவேண்டியிருக்கு
கணினிக்குள்..
பரந்தவுலகம்
கைகளுக்குள் அடங்கி
கைத்தொலைபேசியாயும்
கணினியாயும்
மனிதனுக்கு
தேவையில்லை மூளை
மென்பொருளே
செய்கிறது வேளை...
சுறுங்கிவிட்டது உலகம்
மாறிவிட்டான் மனிதன்
ஓடிக்கொண்டேயிருக்கிறான்
எப்பொழுது தொலையும்
வாழ்க்கை
என்றறியாமல்...
இருள் தொலைதத தேசமிது
எல்லா இரவுகளும்
பகலாகவே
ரசிக்க முடியவில்லை
இருளைக்கூட
மறைந்து போகிறது
இங்கே
செயற்கை ஒளியால்
பௌனர்மி கூட....
சுவாசித்த
கிராமத்துக்காற்றும்
அலைந்து திரிந்த
வயல் வெளிகளும்
நீராடிய குளங்களும்
இன்றும் குளிரச்செய்கிறது
மனதை
இவையனைத்தும்
கிடைக்கவேயில்லை
எவ்வளவு தேடியும்
இன்றைய
இனையத்தளங்களில்...
மீண்டும் தொலைகிறது
வாழ்க்கை
கணிப்பொறிக்குள்....

பெண்ணே...!

உன் கொலுசுகளும்
வளையல்களும்
சிரிக்கின்றன அழகாய்
உன்னைப்போலவே....!

நாணங்களால்
குடைபிடிக்கிறாய்
என் பார்வை மழையினை
தடுக்கிறாய்...!

உலக இலக்கியங்கள்
கற்றவன் நான்
புரியவேயில்லை என்னவென்று
உன் கண்கள் பேசுவது மட்டும்...!

ஊரே உன்னை
வாய்காரி என்கிறது
என்னிடம் மட்டும் ஊமையாய்
மெளனங்களாலே பேசுகிறாய்...!

எங்கு பார்த்தாலும்
நீயாகவே
இருள்கூட அழகாகவே
உன் ஞாபகங்களோடு...!

HOW TO IMPROVE YOUR LIFE...!

Personality:


1. Don't compare your life to others'. You have no idea what their journey is all about.
2. Don't have negative thoughts of things you cannot control. Instead invest your energy in the positive present moment.
3. Don't over do; keep your limits.
4. Don't take yourself so seriously; no one else does.
5. Don't waste your precious energy on gossip.
6. Dream more while you are awake.
7. Envy is a waste of time. You already have all you need..
8. Forget issues of the past. Don't remind your partner of his/her mistakes of the past. That will ruin your present happiness.
9. Life is too short to waste time hating anyone. Don't hate others.
10. Make peace with your past so it won't spoil the present.
11. No one is in charge of your happiness except you.
12. Realize that life is a school and you are here to learn.
Problems are simply part of the curriculum that appear and fade away like algebra class but the lessons you learn will last a lifetime.
13. Smile and laugh more.
14. You don't have to win every argument. Agree to disagree.


Community:




15. Call your family often.
16. Each day give something good to others.
17. Forgive everyone for everything.
18. Spend time with people over the age of 70 & under the age of 6.
19. Try to make at least three people smile each day.
20. What other people think of you is none of your business.
21. Your job will not take care of you when you are sick. Your family and friends will. Stay in touch.


Life:


22. Put GOD first in anything and everything that you think, say and do.
23. GOD heals everything.
24. Do the right things.
25. However good or bad a situation is, it will change.
26. No matter how you feel, get up, dress up and show up.
27. The best is yet to come.
28. Get rid of anything that isn't useful, beautiful or joyful.
29. When you awake alive in the morning, thank GOD for it.
30. If you know GOD you will always be happy. So, be happy.
While you practice all of the above, share this knowledge with the people you love, people you school with,
people you play with, people you work with and people you live with.
Not only will it enrich YOUR life, but also that of those around you.


ஒரு ஆங்கிலேயே எழுத்தாளனின் புத்தகத்திலிருந்து.. அப்படியே இங்கே...!

அழகிகள் ஜாக்கிரதை...!

சாலைகளில்

ஆங்காங்கே சில விபத்துகள்
ஆனாலும் இல்லை
உயிச்சேதமோ
பொருட்சேதமோ
விழுந்து எழுந்தது
கண்களும்
மனசுகளும்தான்
அழகிகள் தேசத்தில்
அழகிகள் ஜாக்கிரதை....!

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...