போராடுவோம்..!

வானமே
உடைந்து விழுந்தாலும்
பூமி தாங்கும்
காலம் வரை
உயிர் தேங்கும்
காலம் வரை
போராடுவோம்...
வீழ்ந்தாலும் பூமியிலே
வாழ்ந்தாலும் பூமியிலே
பயம் எதற்கு..
துயரங்கள்
கடந்து செல்லும்
காற்றில் வீசும் தூசுகளாய்...
இமயங்கள்
வந்து செல்லும்
வாசல் அருகே...
நம்பிக்கை
நம்பிக்கை
நம்பிக்கையோடு
நகர்ந்து சென்றால்..!

மச்சான் - சிங்கள திரைப்படம்..!

2008 யில் வெளியான இந்த மச்சான் என்ற சிங்கள திரைபடத்தின் விமர்சனம் இலங்கை பத்திரிகைகளில் வெளியான போது எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று  எண்ணினேன். வித்தியாசமான திரைப்படங்களை தேடிப்பார்ப்பதில் ஓர் அலாதிப்பிரியம். அதுவும் சிங்களத்தில் அத்திபூத்தாற் போல்தான் இவ்வாறான பார்க்க முடியுமான திரைப்படங்கள் வரும்.  ஆனாலும் இதை பார்க்க தவறவிட்டிருந்தேன்.

அண்மையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பக்கத்தில் சில கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருந்த போது, இந்த படம்பற்றி அவர் எழுதிய கட்டுரை கண்ணில் சிக்கியது.  அதைப்படித்தவுடன் செய்தது அந்தப்படத்தை டவுன்லோட் செய்து பார்த்தது. அவ்வளவு அழகாக அப்படத்தைப்பற்றி சிலாகிருத்திப்பார்.

இரண்டு இளைஞர்கள் வேலைக்காகவேண்டி சட்டரீதியாக ஜேர்மன் செல்ல முயற்சிப்பதும். அது முடியாமல் போகவே திருட்டுத்தனமாக, தில்லுமுல்லு பண்ணி வெளிநாடு செல்ல முயற்சிப்பதும். பின் அங்கு செல்வதுவே திரைப்படத்தின் பிரதான கதை. அவர்கள் செய்யும் தில்லுமுல்லுகளை சுவாரசியமாக நகைச்சுவையாக கொண்டு சென்ற விதமும், படத்தின் ஆரம்பத்தில் கொழும்பு சேரிவாழ் மக்களின் வாழ்க்கையின் யதார்த்தங்களை,சோகங்களை, மகிழ்ச்சிகளை  போகிறபோக்கில் காட்டிய விதமும் இப்படத்தின் சிறப்புகள்..

கொழும்பில் வேலை செய்த காலப்பகுதியில் அந்த சேரிப்புறங்களை கடந்து செல்ல வேண்டியேற்பட்டால்.. அதை வியந்து பார்ப்பேன், அவர்களின் வாழ்க்கை முறை. சிறிய வீடுகளுக்குள் அப்பா,அம்மா,மகள்,மகன் மற்றும் ஏனைய உறவுகள் எப்படி காலத்தை கழிக்கிறார்கள்.. இது எப்படி சாத்தியமாகும் என நண்பர்களுடன் விவாதிப்பேன். இப்படத்திலும் ஒரு சேரிப்பகுதி காட்டப்படுகிறது அது கொழும்பின் மோதர மட்டக்குளி பகுதியாகும் அதாவது கொழும்பு 15

இப்படத்தைப்பற்றி எழுத்தாளா எஸ். ராமகிருஷ்ணன். இவ்வாறு சொல்கிறார். நேரமிருந்தால் படித்துப்பாருங்கள்...

மச்சான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் Death on a full Moon Day போன்ற சிறந்த சிங்களப் படங்களை இயக்கிய பிரசன்ன விதநாயகே, படத்தின் இயக்குனர் இத்தாலியை சேர்ந்த உபர்ட்டோ பசோலினி, படத்தயாரிப்பில் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு சேனல்கள் பங்குபெற்றுள்ளன, பன்னாட்டு கூட்டுத்தயாரிப்பில் வெளியான இப்படம் வெனிஸ் திரைப்படவிழா உள்ளிட்ட 11 உலகதிரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு முக்கியப் பரிசுகளை வென்றிருக்கிறது,

லகான் படம் எப்படி இந்திய சினிமாவில் புதிய அடையாளத்தை உருவாக்கியதோ அதற்கு நிகரான ஒரு முயற்சியாகவே இத்திரைப்படத்தை நினைக்கிறேன், கூடுதலாக லகானை விடவும் இது கேலியும் கிண்டலும் நிறைந்த விளையாட்டைப் பிரதான கதைக்களமாக கொண்ட படம், நீண்ட நாட்களுக்குப் பிறகு அசலான நகைச்சுவை காட்சிகளுடன் வாய்விட்டு சிரித்து மகிழக்கூடிய படம், மனம்விட்டு சிரிக்கும் அதே நேரம் பிழைப்பிற்காக தேசம்விட்டு தேசம் ஒடுதல் எவ்வளவு துயரமானது என்பதையும் உணர்ச்சிபூர்வமாகச் சொல்லியிருக்கிறது இப்படம்

ஒரு உண்மை சம்பவத்தை மையமாக்க் கொண்டு படம் உருவாக்கபட்டிருக்கிறது, படத்தின் துவக்க காட்சியிலே படம் எப்படிபட்டது என்று புரிந்துவிடுகிறது, நடுஇரவில் இரண்டு பேர் போஸ்டர் ஒட்டப் போகிறார்கள், அதில் ஒருவன் காலில் நாய் மூத்திரம் பெய்துவிடுகிறது, உடனே மற்றவன் மச்சான், நாய் உன்மேல் மூத்திரம் பெய்தால் நல்ல சகுனம் , நீ கட்டாயம் வெளிநாடு போய்விடுவாய், அதனால் நாய் மூத்திரத்தை சுத்தபடுத்திவிடாதே என்று சொல்கிறான், அது நிஜமாக இருக்குமோ என்று மற்றவன் ஒரு நிமிசம் யோசித்து மூத்திரத்தை சுத்தபடுத்தவா வேண்டாமா என்று தயங்கி யோசிக்கிறான்,

வெளிநாட்டிற்குப் போய்விட வேண்டும், அதற்கு காலில் நாய்மூத்திரம் பெய்தால் கூட பரவாயில்லை என்று நினைக்கும் மனநிலையே படத்தின் ஆதார தொனி,

மனோஜ் . ஸ்டான்லி என்ற இரண்டு இளைஞர் இலங்கையில் இருந்து எப்படியாவது ஜெர்மன் போய் சம்பாதித்துவிட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள், இருவருமே அடித்தட்டைச் சேர்ந்தவர், ஒருவன் மதுபரிசாரகனாகவும் மற்றவன் பழம்விற்பனை செய்பவனுமாக இருக்கிறான், அவர்களுக்கு முறையான எந்த தகுதியும் இல்லை என்று ஜெர்மன் விசா நிராகரிக்கபடுகிறது,

விசா வாங்குவதற்காக வீட்டில் இருந்து அவர்கள் தயாராகி ஜெர்மன் தூதகரம் செல்லும் காட்சியில் அவனது நடை மற்றும் ஜெர்மன் சொற்களை பயன்படுத்தும் விதம், குடும்பமே அவன் ஜெர்மனிக்கு செல்வதைப் பற்றி கனவு காண்பது யாவும் மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது,

விசா மறுக்கபட்ட மனோஜ் எப்படி ஜெர்மன் போவது என்று நண்பர்களுடன் குடித்தபடியே கவலைப்படுகிறான், பலவிதமாக முயற்சிசெய்து பார்க்கிறான், இதற்கிடையில் கடன்நெருக்கடி அவர்களைத் துரத்துகிறது, ஒருநாள் ஜெர்மனியில் உலக அளவிலான ஹேண்ட் பால் போட்டி ஒன்று நடக்க இருக்கிறது என்ற செய்தியை அவர்கள் அறிகிறார்கள், இதைப் பயன்படுத்தி தாங்களாகவே ஒரு கைப்பந்துக் குழுவை உருவாக்கி அதன் பெயரில் ஜெர்மனிக்குள் தப்பியோடிப் போய்விட்டால் என்னவென்று திட்டமிடுகிறார்கள்,

அது நல்ல யோசனையாகத் தெரிகிறது, ஆனால் கைப்பந்து என்றால் என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது, முதலில் அதைப்பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள், போட்டி விதிகள் மற்றும் விளையாடும் முறைகளை அறிந்து விளையாடிப் பார்க்கிறார்கள், அது எளிதாக கற்றுக் கொண்டு விளையாடும் ஒன்றில்லை என்று நன்றாகவே தெரிகிறது, ஆனாலும் கைப்பந்துக் குழுவை உருவாக்கினால் மட்டுமே ஜெர்மனிக்கு ஒடிப் போக முடியும் என்பதால் அவர்கள் ஒரு குழுவை உருவாக்குகிறார்கள்

அதுதான் படத்தின் நகைச்சுவை சூடுபிடிக்கும் இடம், விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாத ஆட்களைப் பிடித்து, வண்ண உடைகளை மாட்டி கைப்பந்து விளையாட்டின் பெயரில் எப்படி ஜெர்மனி போகப்போகிறோம் என்ற நாடகத்தை உருவாக்குகிறார்கள், இதில் ஒரு போலீஸ்காரன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்,

இலங்கை தேசியக் கைப்பந்து குழு என்று அவர்களாக தங்கள் குழுவிற்கு பெயர் சூட்டிக் கொண்டு குரூப் போட்டோ எடுத்து அனுப்புகிறார்கள், அந்தக் குழு ஜெர்மனியில் நடைபெற உள்ள விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகிறது, இப்போது அடுத்த சோதனை துவங்குகிறது

கைப்பந்து குழுவை அங்கீகரித்து இலங்கையின் ஒலிம்பிக் கமிட்டி கடிதம் தர வேண்டும், மத்திய விளையாட்டு அமைச்சகம் முறையான அனுமதி கடிதம் தர வேண்டும் என்ற புதிய சிக்கல்கள் உருவாகின்றன, இதைத் தீர்த்து வைக்க போலியான முத்திரைகளை உருவாக்கி தாங்களே ஒலிம்பிக் கமிட்டி கடிதம் போல ஒன்றை உருவாக்கிக் கொள்கிறார்கள், இந்த கடிதமும் ஜெர்மனிய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு விசா கிடைக்கிறது

பயண ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன, எப்போது மாட்டிக் கொள்வோம் என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள், இந்தக் குழப்பம் விமானம் ஏறும்வரை நீடிக்கிறது, முடிவில் ஜெர்மனி போய் இறங்குகிறார்கள், அங்கே அவர்களை வரவேற்க ஆட்கள் தயராக இருக்கிறார்கள், ஜெர்மனிய விமான நிலையத்தில் இருந்தே ஒரு குழு தப்பியோட முயற்சிக்கிறது, ஆனால் அது தடுக்கபடுகிறது

அவர்கள் விளையாட்டுப் போட்டி நடக்கும் இடத்தருகே தங்கவைக்கபடுகிறார்கள், போட்டி துவங்குகிறது, கைபந்து போட்டியின் அரிச்சுவடி கூட அறியாத இலங்கை அணியும் ஜெர்மனிய அணியும் களமிறங்குகின்றன, அந்தப் போட்டி தான் உச்சபட்ச நகைச்சுவை, இலங்கை கைப்பந்து குழுவினர்கள் படும் அவஸ்தைகள் நம்மை சிரிப்பில் உருள வைக்கின்றன,

போட்டியை காணும் பார்வையாளர்கள் கேலி செய்து சிரிக்கிறார்கள், மூன்று நான்கு போட்டி விளையாடி முடிவில் ஒரேயொரு கோல் போடுகிறார்கள், இந்த ஒரு கோலிற்காக அவர்கள் ஆடும் கொண்டாட்டமிருக்கிறதே, போதும் போதுமென இருக்கிறது, முடிவாக கைப்பந்து போட்டியில் தோற்றுப்போய் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றபடுகிறார்கள்.

அப்போது தான் இது ஒரு திருட்டுதனம் என்பதைப் போலீஸ் கண்டுபிடிக்கிறது, அவர்கள் தங்கியிருந்த அறைகளுக்கு வந்து தேடுவதற்குள் ஆளுக்கு ஒரு பக்கம் தப்பியோடுகிறார்கள், ஜெர்மனியில் இருந்து அவரவர்களுக்கு விருப்பமான ஊர்களுக்கு தப்பியோடி உலகின் கண்களில் இருந்து காணாமல் போய்விடுகிறார்கள், போலீஸ் மற்றும் நீதிமன்ற உத்தரவு எதுவும் அவர்களை ஒன்றும் செய்யமுடியவில்லை, கடைசிகாட்சியில் ஜெர்மனியில் இருந்து நான்கு பேர் லண்டன் போவது என்று முடிவு செய்து புறவழி நெடுஞ்சாலை ஒன்றில் காத்துக்கிடக்கிறார்கள், அவர்களது கனவுப்பயணம் துவங்குகிறது, போலீஸ் பல ஆண்டுகாலமாக அவர்களை தேடிக் கொண்டேயிருக்கிறது, கண்டுபிடிக்க முடியவேயில்லை என்ற செய்தியோடு படம் நிறைவுறுகிறது

இது போன்ற உண்மை சம்பவம் ஒன்று 2004 இலங்கையில் நிஜமாக நடைபெற்றிருக்கிறது, அதைப் பற்றிய பத்திரிக்கை செய்தியை வாசித்த பசோலினி அதைப்படமாக்க முயன்றிருக்கிறார், அதன் விளைவே இந்த திரைப்படம்

இப்படம் இரண்டு முக்கிய விஷயங்களை முதன்மைபடுத்துகிறது, ஒன்று நாடுவிட்டு நாடு போய் சம்பாதிக்க நினைப்பவர்கள் படும்பாடுகளையும் அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் அத்தனை குறுக்குவழிகளையும் பற்றி பேசுகிறது, இது இலங்கைக்கு மட்டுமேயான சூழல் இல்லை, தமிழ்நாட்டில் இப்படி எவ்வளவோ பேர் முறையற்ற அனுமதி பெற்று வெளிநாடுகளில் வேலைக்கு போய் மாட்டிக் கொண்டு சிறைவாசம் புரிவது நடந்து கொண்டேயிருக்கிறது

இன்னொன்று விளையாட்டு வணிகமயமாகிப்போன சூழலைப் பற்றியது, விளையாட்டு இன்று முக்கியமான வணிகப்பொருள்களில் ஒன்று, அதனால் அறிமுகமேயில்லாத விளையாட்டுகள் திடீரென பிரபலம் ஆவதும் அதற்கான புதிய குழுக்கள் உருவாகி அது ஒரு நிறுவனம் போலாகிவிடுவதையும் படம் கேலி செய்கிறது

மச்சானின் எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு மற்றும் காட்சிகளில் வெளிப்படும் யதார்த்தமான நகைச்சுவை அதற்கு மிகுந்த சிறப்பு சேர்கின்றன, ஈரானிய திரைப்படங்களில் காணப்படுவது போன்ற யதார்த்தம்மும் கவித்துவமும் இணைந்த உருவாக்கம் இப்படத்திலும் காணப்படுகிறது, நடிகர்கள் அத்தனை பேரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள், லகான் பெரும்பொருட்செலவில் உருவாக்கபட்டது, இந்த படம் அப்படியான ஒன்றில்லை, மிக குறைவான பட்ஜெட்டில் இலங்கை மற்றும் ஜெர்மனியில் படமாக்கபட்டிருக்கிறது

கைபந்துக் குழுவை உருவாக்க மனோஜ் மற்றும் ஸ்டான்லி மேற்கொள்ளும் எத்தனங்கள், அதில் சேர்ந்து கொள்ளும் ஆட்களின் இயல்பு , இந்த பிரச்சனைகளுக்கு நடுவில் உள்ள வீட்டுப்பிரச்சனைகள், பொருளாதார சிக்கல்கள், ஏமாற்றங்கள், யுத்தநெருக்கடியான புறச்சூழல் யாவும் படத்தின் ஊடாக அழகாக விவரிக்கபடுகின்றன,

துல்லியமாக ஒரு டாகுமெண்டரி படம் போல கைப்பந்து குழுவின் உருவாக்கம் படமாக்கபட்டிருக்கிறது,

வாழ்க்கை நெருக்கடி மனிதர்களை எல்லா ஏமாற்றுதனத்திற்கும் துணிச்சலுக்கும் கொண்டு போய்விடுகிறது என்பதற்குச் சாட்சியே இப்படம், விளையாட்டைக் களமாக கொண்டு இப்படியும் ஒரு படத்தை உருவாக்க முடியும் என்பதே இதன் தனிச்சிறப்பு

டிஸ்கி:-சிங்கள மொழி தெரியாதவர்கள் இப்படத்தினை ஆங்கில சப் டைட்டிலுடன் பார்க்க நேர்ந்தால், சிங்களத்தில் சாதாரானமாக திட்டும், இளைஞர்களுக்குள் பேசும் வசனங்களுக்கு மொழி பெயர்ப்பாக ஆங்கிலத்தில் F..K என்ற கெட்ட வார்த்தையை சேர்த்திருப்பது தேவையற்றது,, இது மொழி மீதும் அப்படத்தின் மீதும் புரிந்துணர்வின்மையை ஏற்படுத்தலாம்.. இதை தவிர்த்திருக்கலாம்,

தேடலே வாழ்க்கையாக..!


கொஞ்சம் பசி
கொஞ்சம் ருசி
உணவைத்தேட...
கொஞ்சம் ஆசை
கொஞ்சம் கனவு
உழைப்பைத்தேட...
கொஞ்சம் வலி
கொஞ்சம் சோர்வு
ஓய்வைத்தேட...
கொஞ்சம் காதல்
கொஞ்சம் காமம்
துனையைத்தேட...
கொஞ்சம் கண்ணீர்
கொஞ்சம் கவலை
நிம்மதி தேட...
கொஞ்சம் முதுமை
கொஞ்சம் இயலாமை
மரணம் தேட...
தேடலில் தொடங்கி
தேடலிலே
முடிகிறது வாழ்க்கை..!

பயணங்கள் முடிவதில்லை, பாதைகள் முடிந்தாலும்!

                                   பயணங்கள் முடிவதில்லை, பாதைகள் முடிந்தாலும்..

 எடக்கு மடக்கா கேள்வி எல்லாம் கேட்கப்படாது ஒவ்வொருத்தரா அமைதியா கேட்கனும்..

 திருட்டுப்பயலுகள் அதிகமாயிட்டாங்க அதுதான் அலார்ட்டாயிட்டமில்ல..

 நீங்க எங்க போனாலும் அங்கெல்லாம் நான் வியாபாரம் பன்னுவேன்..

என்ன கொடும சரவணா..

                                               வறுமை கொடுமை கொடுமையே

அப்பாடா ரொம்ப நாளாயிற்று ஐஸ் ருசி பார்த்து

இலவசமா,, ஒரு குளியல்.

                                                நாங்களும் குடிப்போமில்ல..

நனையும் மனசு..!



மழை வரும்
பொழுதுகளிலெல்லாம்
மனசும்
சேர்ந்தே நனைகிறது..

பூமியைத்தொடும் வரைக்கும்தான்
மழைத்துளிகள்
பூமியை தொட்டுவிட்டால்
நீர்த்துளிகள்..

பூமிக்காதலியை முத்தமிடும்
பூரிப்போடு
வானிலிருந்து விழுகிறான்
மழைக்காதலன்..

தாகம் தீர்த்து
மோகம் தீர்க்க வரும் காதலனுக்காய்
காத்திருக்கிறாள், வானம்
பார்த்தவளாய் பூமிக்காதலி..

உடல் நனையாமல்
குடைபிடித்துச்சென்றாலும்
மனசு மட்டும் நனைந்தே விடுகிறது
பரவசங்களால்..



வாழ்தல் இனிது,சாதல் இனிது..!

வாழ்தல் இனிது, மனிதர்களும் இனிமையானவர்கள், உலகமும் இனிமையானது அதிலுள்ள ஜீவராசிகளும் இனியது, இயற்கையும் இனிது, இளமையும் இனிது.. முதுமையும் நல்லது இறுதியில் இறந்து போவதும் இனிதுதான். போராட்டம் நிறைந்த இந்த வாழ்க்கையை இவ்வாறு இனியதாகவே சிந்தித்தால் வாழ்ந்தால், வாழ்க்கை ஒன்றும் கசப்பானதாக தோன்றவில்லை. இவ்வாறு சொல்வது நானல்ல! இந்த முண்டாசு தாத்தா..


இவ்வுலகம் இனியது;
இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது;
தீ இனிது;
நீர் இனிது;
நிலம் இனிது;
ஞாயிறு நன்று;
திங்களும் நன்று;
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன;
மழை இனிது;
மலை இனிது;
காடு இனிது;
ஆறுகள் இனியன;
உலோகமும், மரமும், செடியும், கொடியும்,
மலரும், காயும், கனியும் இனியன;
பறவைகள் இனியன;
ஊர்வனவும் நல்லன;
விலங்குகளெல்லாம் இனியவை;
நீர் வாழ்வனவும் நல்லன;
மனிதர் மிகவும் இனியர்;
ஆண் நன்று;
பெண் இனிது;
குழந்தை இன்பம்;
இளமை இனிது;
முதுமை நன்று;
உயிர் நன்று;
சாதல் இனிது.

இன்று இந்த தாத்தாவுக்கு பிறந்த நாளாம்...

இங்கே கணவர்கள் விற்கப்படும்..!



ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

அது என்னன்னா...!

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும்
இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.

ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..

அப்டியே வெளிய தான் போக முடியும்.

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா......கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது

முதல் தளத்துல அறிக்கை பலகைல "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா


இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.

மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

நாலாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.

இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?

கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.

அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல

"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .

எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...

பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது .

Author- Unknown
இது பேஸ்புக்கில் படித்தது..  பிறகு HUSBANDS FOR SALE என டைப் செய்து கூகுளில் தேடினால்.. இதன் அசல் ஆங்கில வடிவம் (2008) தெரியவந்தது அது கீழே,,


A store that sells husbands has just opened in New York City , where a
woman may go to choose a husband. Among the instructions at the entrance
is a description of how the store operates.

You may visit the store ONLY ONCE!

There are six floors and the attributes of the men increase as the shopper
ascends the flights. There is, however, a catch .... You may choose any
man from a particular floor, or you may choose to go up a floor, but you
cannot go back down except to exit the building!

So, a woman goes to the Husband Store to find a husband.

On the first floor the sign on the door reads:

Floor 1 - These men have jobs and love the Lord.

The second floor sign reads:

Floor 2 - These men have jobs, love the Lord, and love kids.

The third floor sign reads:

Floor 3 - These men have jobs, love the Lord, love kids, and are extremely
good looking.

'Wow,' she thinks, but feels compelled to keep going. She goes to the
fourth floor and sign reads:

Floor 4 - These men have jobs, love the Lord, love kids, are drop- dead
good looking and help with the housework.

'Oh, mercy me!' she exclaims, 'I can hardly stand it!' Still, she goes to
the fifth floor and sign reads:

Floor 5 - These men have jobs, love the Lord, love kids, are drop- dead
gorgeous, help with the housework, and have a strong romantic streak.

She is so tempted to stay, but she goes to the sixth floor and the sign
reads:

Floor 6 - You are visitor 4,363,012 to this floor. There are no men on
this floor. This floor exists solely as proof that women are impossible to
please. Thank you for shopping at the Husband Store. Watch your step as
you exit the building, and have a nice day!



உழைத்து வாழ்வோம்..!


உலக வரலாற்றின்
உள்ளடக்கம்
வியப்புகளாலும்
விசித்திரங்களாலும் மட்டும்
ஆனதல்ல
வியர்வை துளிகளாலும்
ஆனதே!

ஆதிமனிதனுக்கும்
அதனைத்தொடர்ந்தவனுக்கும்
உயிர் நிலைக்க
உணவு
உணவு கிடைக்க
உழைப்பு
உலகின் நியதி
இதுவே!

எதுவுமேயில்லை
என்றால்
எதுவும் உனதில்லை
எல்லாமே
எனதென்றால்
உலகமும் உனதே!

பூமி
வளங்கள் நிறைந்தது
வாங்கிக்கொள்வோம்
வியர்வைத்துளிகளை
விற்று!
அனைவருக்கும்
அனுமதி இலவசம்!

உலகம்
செழித்துக்கொண்டேயிருக்கும்
உழைக்கும் வர்க்கம்
உயிர் வாழும் வரை!
மழைத்துளிகள்
பொழிந்துகொண்டேயிருக்கும்
வியர்வைத்துளிகள்
காயும் வரை!

வயிறு..!

வயிற்றில் 99 டிகிரி சூடு இருக்கும்
இயற்கையாக ஹைட்ரோ குளோரிக் அசிட் சுரக்கும்.
எது உள்ளே சென்றாலும் அசிடும் சூடும் சேர்ந்து ஒரு நொதி நிலையை உண்டாகும்.பின் அவற்றில் இருந்து கனிமங்கள் சத்துக்கள் எல்லாம் பிரிக்க பட்டு அவை தனியாகவும் கழிவு தனியாகவும் பிரிந்து அது அது எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று விடும்.கழிவு சரியாக பிரிக்க பட முடியாமல் போகிறதென்றால், கழிவு சரியாக வெளியேற முடியாமல் போகிறதென்றால் உங்களுக்கு சுகமில்லை என்று அர்த்தம். எதோ ரிப்பேர் ஆகிவிட்டது.

நீர் ஆகாரம் 40 நிமிடத்தில் ஜீரணித்து விடும்
திட ஆகாரம் 4 மணி நேரத்தில் ஜீரணித்து விடும்.
கொழுப்பு சத்து மட்டும் பிரிக்க படாத பாடு படும் வயிறு. நீரும் எண்ணையும் சேராது. மிதக்கும். எண்ணையை சிறிது சிறிதாக சரி செய்வதற்கு நிறைய சிரம படும்.

ஏற்கனவே வயிற்றில் இயற்கையாய் அசிட் இருக்கிறது. இதில் காரம் அதிகம் சேர்க்க சேர்க்க வயிற்றில் புண் வரும். எதுவும் சாப்பிடவில்லை என்றாலும் புண் வரும். பல் விலக்கியும் வாயில் இருந்து வாடை வந்தால் அல்சர் என்று அர்த்தம்.அந்த புண் வாடை குடல் வழியாக வாயில் வெளியே தெரிகிறது.
மனசை பத்திரமாக பாதுகாப்பது போல
வயிற்றையும் பத்திரமாக பாதுகாத்து கொள்ளுங்கள்.
வாயை கட்டு படுத்தினால் உடம்பை கட்டு படுத்தலாம். நோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம..

வீட்டில் ஒரு முரட்டு பிளாஸ்டிக் கவரை எடுத்து கொள்ளுங்கள்.காலை எழுந்தது முதல் இரவு வரை நீங்கள் சாப்பிடும் அனைத்திலும் ஒரு பங்கு அதில் கொட்டி வையுங்கள். மறுநாள் எழுந்து கவரை திறந்து பாருங்கள். நினைத்தாலே வாடை குமட்டுகிறதா, அப்போ வயிறு என்ன பாவம் செய்தது. அவ்வப்போது பிளாஸ்டிக் கவரை கழுவுவதாக நினைத்து மிதமான சூட்டில் வெந்நீர் குடியுங்கள். 3 லிட்டர் நீர் தேவை ஒரு நாளைக்கு. 1லிட்டர் வெந்நீராக இருக்கட்டும் உங்கள் வாழ்வில் அதுவும் இரவு சிறந்தது...

நீயே வேண்டும்...!


தினமும்
கடந்து செல்கிறாய்
எம் தேசத்தை
வெறுமைகளை வீசியவாறு
கனவுகளை கொன்றவாறு...
உனக்குத்தெரியுமா
உன் முகம் பார்த்தே
வாழப்பழகியவர்கள்
எம்மக்கள்..
வந்தால் செழிப்பாவோம்
இல்லையென்றால்
வறண்டு போவோம்..
குளங்களோடு சேர்த்து
உள்ளங்களும் நிறையும்
உன் வருகையால்..
எம் மனசுகள்
பூ மாலைகள் கேட்டதில்லை
எம் உதடுகள்
என்றைக்காவது பூக்க
புன்னகைகள் கேட்கிறோம்...
இன்றாவது
பொழிந்துவிட்டுப்போ
மழை மேகமே..!


விரல்கள்
உன்னைத்தீண்டும்
போதெல்லாம்
கண்கள்
நனைகிறது..
கண்ணீர் தந்தாலும்
கண்கள் நனைத்தாலும்
நீயே வேண்டும்..
என் பசி தீர்க்க
என் சமையல்
ருசி பார்க்க..
என் இனிய
வெங்காயமே..!

சிரிப்பூக்கள்...2



மனைவி : நேத்து ஆ‌பி‌ஸ் போ‌னீ‌ங்களே, ஆனா இன்னிக்குத்தான் வீட்டுக்கு வர்றீங்க?
கணவன் : நான் பாட்டுக்கு தூங்கிட்டே இருந்துட்டேன், என்னை யாருமே எழுப்பல அதான்.


என்ன உன் கணவர் ஆபிஸ்லேயிருந்து வந்து, பக்கத்து
வீட்டு கதவைத் தட்டறாரு?
தூக்கம் சரியா கலையலை போல..!

நர்ஸ்: ஏன் டாக்டர் சோகமா இருக்கீங்க?
டாக்டர்: இன்னிக்கு மதியம் நான் ஆபரேஷன் பண்ண நோயாளி இறந்திட்டாரு.
நர்ஸ்: டாக்டர், இன்னைக்கு மதியம் நீங்க பண்ணது ஆபரேஷன் இல்ல அது போஸ்ட்மார்டம்.
டாக்டர்: அப்போ காலைல நான் யாருக்கு போஸ்ட்மார்டம் பண்ணேன்?
நர்ஸ்: ???


என் மனைவி நான் சொல்றதுக்கெல்லாம் சரின்னு தலையாட்டுவா.
ரொம்ப கொடுத்து வைச்சவர் நீங்க, விவரமா சொல்லுங்க.
உதாரணமா நான்தான் சமைப்பேனு சொல்லுவேன். சரின்னுடுவா. நான் தான் துவைப்பேன்னு சொல்லுவேன் சரின்னுடுவா

‎"நான் போலீசிலே சேர்ந்த பிறகு பிறந்த பையன் இவன்." "அப்படியா! என்ன பேரு வச்சிருக்கீங்க?"
"மாமூலன்!"

காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!

காட்டுவாசி: மாசாலாவைக் கொஞ்சம் தூக்கலா போடணுமா…ஏன்..?
அண்டாவில் மனிதனை வேக வைக்கும் காட்டுவாசி:-
இவன் மண்டையிலே மசாலாவே இல்லையாம்

பேரன்:- அம்மம்மா... பள்ளி விளையாட்டுப்போட்டியில நான் 200 m ஓடபோறன் என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க!
அம்மம்மா:- கவனம் மெதுவா ஓடுப்பா!!
பேரன்:- உங்கிட்ட போய்.

எதுக்கு போலீஸ்காரர்
தபால்காரர் கூட சண்டை போடறாரு?"
"தந்தி வந்துருக்குனு சொல்ரதுக்கு பதில்,
தொந்தி வந்துருக்குனு சொல்லிட்டாராம்!

மாப்பிள்ளைக்கு என்ன போடுவீங்க…?
வரதட்சணைக் கேட்டா கேஸ் போடுவோம்..!


டாக்டர்! எனக்கு பல் ஆடுது!" "எந்த பாட்டுக்கு?"

"இருள் இருள்" என்று சொல்லிக் கொண்டு சும்மாயிருப்பதைவிட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்ற முயற்சிசெய்.. (நாங்களும் தத்துவம் சொல்லுவம்ல)

ஜாக்கிரதை..!


கவிதை எழுத
எழுத வைத்திருந்த
பேனாவை
திருடிவிட்டார்கள்!
கண் மூடி யோசித்து
கண் திறந்தால்..
"திருடர்கள் ஜாக்கிரதை"
தலைப்பில்


சாலைகளில்
நடக்கும் போதெல்லாம்
ஆங்காங்கே தடுக்கி விழுந்து
விபத்துக்குள்ளாகிறது
மனசு.
பாதையோரங்களில்
தொங்கவிட்டால் என்ன..
"அழகிகள் ஜாக்கிரதை"
பதாகைகள்


வீட்டுக்கு வராதீர்கள்
வந்தால் தாக்கப்படலாம்
நல்லெண்ண
எச்சரிக்கையுடன்
வீட்டுக்கு முன்னால்
தொங்குகிறது..
"நாய்கள் ஜாக்கிரதை"
பதாகைகள்..!

சிரிப்பூக்கள்...1

இயந்திர மயமான வாழ்கையில் ஓடிக்கொண்டேயிருக்கிறோம்.. இவ்வோட்டத்தின் நடுவே சில சின்ன விடயங்கள் நம்மையறியாமலேயே புன்னகைக்க வைக்கிறது. இவற்றுள் நகைச்சுவைத்துனுக்குகள் முக்கியமானவை.. பத்திரிகைகளில், இணையத்தில் ஆங்காங்கே கொட்டிக்கிடக்கிறது இவ்வாறான சிரிப்பு பூக்கள் அவற்றில் நான் படித்து சிரித்தவற்றை கோர்த்து தர எண்ணுகிறேன். நீங்களும் சிரிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்.. சில நிமிட சிரிப்பு சில மணிநேர உடற்பயிற்சியை விட சிறந்ததாமே.. யாரு சொனனாங்க என்று ஆதாரம் எல்லாம் கேட்கப்படாது.. யாரு சொல்றாங்க என்பதை விட, என்ன சொல்றாங்க என்பதுதான் முக்கியம். சரி வாங்க சிரிக்கலாம்..

25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்........
என் மனைவியை அந்தமானின் தீவிற்கு அழைத்துப் போனேன்.........
வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்..........
அவளைத் திரும்ப அழைத்து வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.........

மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்?
கணவன்: அது ஒரு இறந்த காலம்....

டீச்சர்: "நான் ஒரு கொலை செய்துவிட்டேன்" இதன் 'எதிர்காலம்' என்ன.?
மாணவன்: நீங்கள் ஜெயிலுக்குப்போவீர்கள்

படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்.., அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக்கிட்டு இருக்கு..
அவனுக்கு ஆச்சரியமா இருக்கு பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்…
படிச்சவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?
விவசாயி : அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்..,
படிச்சவன் : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம் வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..
படிச்சவன் : அது சுத்தறதை நிறுத்திட்டு., ஒரே இடத்துல நின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?
விவசாயி : இதுக்குத் தான் தம்பி., நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..!
படிச்சவன்: ? ? ? ? ?

தளபதி ; மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா அரசே?....
அரசன் : வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொள்வோம்..

என்ன இது..ஃபேஷன் ஷோவுல மாடல்கள் எல்லாம் தலையிலே
ஒரு மூட்டையோட, மண்ணெண்ணை கேனைத் தூக்கிக்கிட்டு
நடந்து வர்றாங்களே…?
இது 'ரேஷன் ஷோ'வாம்..!

உடம்புல எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லுறீங்க..அப்புறம்
எதுக்கு ஆஸ்பத்திரிக்கு வந்தீங்க..?
-
வெயிலுக்கு குளிர்ச்சியா நாலு நர்ஸூங்களைப் பார்த்துட்டுப் போகலாம்னுதான்..!

நீங்க கொடுத்த செக், பேங்க்ல பணம் இல்லைனு சொல்லி
திரும்ப வந்துடுச்சி…!
பொய் சொல்றாங்க! கேஷியர்கிட்டே நிறைய பணம் இருக்கு,
நானே பார்த்தேன்..!

சில உண்மைகள்..
முதல் உண்மை  : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது !
,
,
,
,
,
,
இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் !..
மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால !
நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க !
ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க !
ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் !

பூனை மற்றொரு பூனையிடம், 'அதோ போகுதே அதுதான் என்
'மாமியாவ்'..!

பிரபாகரன் Sir..!

நாம் பிறந்தது முதல் வாழ்க்கை பாதையில். எத்தனையோ நிகழ்வுகளையும் எத்தனையோ மனிதர்களையும் கடந்து வந்திருப்போம். அவ்வாறு நாம் பழகி வந்த கடந்து வந்த மனிதர்களில் சிலர் அந்த தருணங்களிலே மறந்து போவார்கள்.. சிலர் கொஞ்ச காலத்திற்கு மனதில் இருப்பார்கள், சிலர் நாம் வாழும் காலத்திற்கும் நம் மனதோடு வாழ்வார்கள் அவர்களின் நடவடிக்கைகள், மற்றும் அவர்களின் உருவம் நம் கண் முன்னே நிழலாக ஆடும்.. அப்படி மறக்க முடியாத ஒருவர்தான் எங்களுக்கு பாடம் சொல்லித்தந்த பிரபாகரன் சார்..

கல்விக்கும் கல்வி கற்றுக்கொடுப்போருக்கும் புகழ்பெற்ற யாழ்ப்பாணம்தான் இவரின் ஊர். நான் உயர்தரம் படித்த மதீனா தேசிய பாடசாலை, சியம்பலாகஸ்கொட்டுவ யில் வர்த்தக பிரிவில். அப்போது அங்கே ஆசிரியராக இருந்தார் இவர்.. எங்கள் வகுப்பிற்கு முதலாம் ஆண்டில் கணக்கியல் (Accounting) இரண்டாம் ஆண்டில் பொருளியல் (Economics) பாடம் எடுத்தவர்.. கல்வி என்றாலே அது கசப்பானது என்று என் மனதில் இருந்த மனநிலையை மாற்ற வைத்து, அது இனிமையானது அதை விரும்பி படித்தால் என புரிய வைத்தவர். அதற்கு அவர் சொல்லும் உதாரணம் ஒரு பாடலை ஒரு முறை இரு முறை கேட்கும் கேட்கும் போது அது நம் மனதோடு ஒட்டிவிடுகிறது. அதன் வரிகளை நம்மையறியாமலே முனுமுனுக்குறோம். காரணம் அதை நாம் ரசிக்கிறோம் விரும்புகிறோம். இதைப்போன்று கல்வியையும் விரும்பி ரசித்துப்படித்தால் நம் மனதில் இலகுவாக ஒட்டிவிடும் அதன் பிறகு அது இலகுவில் மறக்காது என்பதாகும்.. இது போன்று அழகான உதாரணங்கள்,உவமைகள் மூலமாக கற்கும் பாடங்களை மனதில் பதிய வைத்த அருமையான ஆசிரியர்தான் இவர்.

ஆனாலும் இவர் மிக கண்டிப்பானவர்.. இவரின் வகுப்பிலே ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். சரியான நேரத்துக்கு சமூகமளிக்க வேண்டும்.. இல்லையென்றால் வெளியில்தான். இந்தக்கட்டுப்பாடுகளால் நிறைய மாணவர்களுக்கு இவரை பிடிப்பதில்லை.. ஆனாலும் நான் இவரின் பாடங்களை மிகவும் விரும்பினேன்.. இன்றைக்கு எனது இந்த நிலைமைக்கு அவரிடம் கற்ற பாடங்களும் அறிவுரைகளும் முக்கியமானவை. அவர் நல்லதொரு ஆசிரியர் மற்றுமின்றி நல்லதொரு அறிவுரையாளர்.. எல்லா ஆசிரியர்களும் அப்பிடியில்லை. அவர் எப்போவும் சொல்லும் ஒரு வசனம் "ஸ்கூலுக்கு வந்தா படிக்கனும் கிரவுண்டுக்கு போனா விளையாடனும்"

சனி,ஞாயிறு தினங்களில் மேலதிக வகுப்புகள் மூலம் பாடம் நடத்தும் இவர் அதற்காக சிறு கட்டணத்தை அறவிடுவார். அதற்கு இப்பிடி சொல்வார்.. உங்களுக்கு இலவசமாக படித்து தர ஆசைதான், ஆனாலும் அப்படி இலவசமாக தந்தால் அதில் ஒரு அருமைத்தன்மை இருக்காது. காசு கொடுத்தால்தான் காசு கொடுக்கிறோமே கொடுத்த காசுக்கு படிக்க வேணுமே என்ற ஆர்வம் வரும். எனக்கூறுவார், உண்மைதான்! எதுவும் இலவசமாக கிடைத்தால் அதில் ஒரு அருமை இல்லைதான். ஆனாலும் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் தன்னை தனியாக சந்தித்து பேசினால் அவர்களுக்கு இலவசமாக கற்றுத்தருவேன் என்பார்.. இப்படி சொல்ல எத்தனை ஆசிரியர்களுக்கு மனசு வரும்..

நாங்கள் உயர்தரம் படித்து முடித்து கொஞ்ச காலத்தில் அந்த பாடசாலையிலிருந்து விலகிவிட்டதாக அறிய கிடைத்தது.. இப்போது எங்கேயிருக்கிறார். என்ன செய்கிறார் என எதுவும் தெரியாது. போராட்டம் நிறைந்த இந்த உலகில் சவால்களுக்கு எப்படி முகம் கொடுப்பது என கற்றுக்கொடுத்தவர்கள் உங்களை போன்ற ஆசிரியர்கள். நீங்கள் எங்கிருந்தாலும் நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் நன்றியுடன் உங்கள் மாணவன்..

அட உள்ள வாங்க செம மேட்டர்..!



என்னலே அப்டி பார்க்கிறிங்க.. பெட்றோல் விலை எகிரிடிச்சில்ல..


நாங்களும் டான்ஸ் ஆடுவம்ல்ல

ரொம்பநாளா இதுல வழுக்கி விளயாடனும்னு ஆசை இப்பதான் நிறைவேறிருக்கு..

பயபுள்ளக்கி மப்பு இன்னும் குறையல்ல...

ஏலே நாங்களல்லாம் ரொம்ப மோசம்ல்ல..

அப்பாடா ஆபிஸுக்கு போக ரெடியாகியாச்சி..

என்னா லுக்கு..

நாமலாவது ஆபீஸ் வேலய சரியா செய்வோம்...

போட்டோவுல என்னையும் சேர்துக்கங்கலே

மியாவ்...

தலைப்ப பார்த்துட்டு உள்ள ஏதாவது மேட்டர் இருக்கும்னு நம்பி யாராவது இளசுகள் பெருசுகள் வந்திருந்தா கீழே கணனித்திரையில் உள்ள படத்த பார்த்துட்டு ஓடுங்க..ஓடுங்க..
பயபுள்ளங்க இதுமாதிரி படமெல்லாம் நம்மளுக்கு காட்றதேயில்ல இப்ப பார்த்துறவேண்டியதான்..

இது ஒரு மீள்பதிவு.. இப்பவெல்லாம் பதிவு போடவே விருப்பமேயில்ல.. என்னுடைய பதிவுகள் உங்களை கவர்கிறதா..?

பொய் சொல்லும் கனவுகள்..!



முத்தத்துளிகள் 
உதட்டில் நுழைந்து
தொண்டையில் மிதந்து 
உணர்வை தடவி 
உயிரைத்தொடுகிறது. 
என் காதலி 
தேநீர்..



உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரை
படர்ந்து 
தொடர்ந்து
தவழ்ந்து
உருண்டோடி
விளையாடுகிறதே
அதிர்ஷ்டக்கார
மழைத்துளிகள்..!



வருகிறாள்...
சிரிக்கிறாள்...
ரசிக்கிறாள்....
குழந்தை மகிழ
பொய் கதை சொல்லும்
தாய் போல
பொய் சொல்கிறது
கனவுகள்..


நினைவுகளை 
சுமந்து செல்கிறது மனசு
புத்தகங்கள்
சுமந்து செல்லும்
பள்ளி குழந்தைகளாய்..!

உள்ளம் கொள்ளை போகுதே..!

படிக்கும் காலத்தில் பாடல்கள் கேட்பதும், அதை எழுதி மனனம் செய்து முனுமுனுப்பதிலும் அலாதிப்பிரியம். அவ்வாறு சில பாடல்கள் மனதோடு ஒட்டிவிடுவதுமுண்டு. நான் பாடல்களை அதிகம் ரசிப்பது அதன் வரிகளுக்காகவும் அதில் சொல்லப்படும் விடயங்களுக்காகவும். சில பாடல்களின் வரிகள் புரியாவிட்டாலும் இசைக்காக மட்டுமே கேட்பதுமுண்டு.

அந்த வகையில் பாடசாலை நாட்களில் என்னை வசீகரித்த பாடல்களில் ஒன்று. உள்ளம் கொள்ளை போகுதே திரைப்படத்தில் இடம்பெற்ற "கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா"  என்ற பாடல்தான். இதில் இரண்டு பாடல்கள் இருக்கும். முதலாவது SPB,சுஜாதா பாடிய டூயட் பாடல் மற்றையது ஹரிஹரன் பாடிய சோகப்பாடல் இரண்டுமே பிடித்திருந்தாலும் அந்த சோகப்பாடல்தான் என்னை மிகவும் கவர்ந்தது. பாடலை எழுதியது பா.விஜய். இவரின் ஆரம்பகால பாடல்கள் ஒவ்வொன்றும் மிக அழகானவை. அவர் நடிகரானதிலிருந்து நல்லதொரு பாடலாசிரியரை இழந்துவிட்டது தமிழ்சினிமா.

அந்த பாடலின் எல்லா வரிகளுமே அருமையாக எழுதியிருப்பார்..

உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல்
சுற்றுதம்மா இங்கு என் வாழ்வும்..



உண்மையில் நான் ஒரு மெழுகாகும்
சிலர் இருட்டுக்குத்தான் அது ஒளி வீசும்
கடைசி வரை தனியாய் உருகும்..



பிறரின் முகம் காட்டும் கண்ணாடி
அதற்கு முகம் ஒன்றும இல்லை
அந்த கணணாடி நான் தானே 

முகமே இல்லை என்னிடம்தான்..


பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்
என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ
இரண்டுமே வெளிவர முடியாதோ...


செடியை பூ பூக்க வைத்தாலும்
வேர்கள் மண்னுக்குள் மறையும்
உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்
உள்ளே சறுகாய் கிடக்குதே....


காதிதத்தில் செய்த பூவுக்கும்
என் மனசுக்கும் ஒற்றுமை இருக்கிறதோ.

இந்த "காகிதத்தில் செய்த பூ" இந்த வரியை வைத்துக்கொண்டு நான் அப்போது கிறுக்கியது.

கண்ணீருமில்லை
கலங்கவுமில்லை.
வாடவுமில்லை
வாசம் வீசவுமில்லை.
நான்
காகிதத்தில் செய்த பூ..


இப்பாடலை ஹரிஹரன் அனுபவித்து பாடியிருப்பார் ஏற்ற இறக்கங்களுடன், கேட்டுப்பாருங்கள்..


ஏனோ அப்போது பிடித்த பிரபுதேவாவை இப்போது பிடிப்பதில்லை..

குறும்படம் - asl plz - இணைய உலகில் இளசுகளின் நிலை.

இன்றைய இணைய உலகில், நம் இளைஞர்களின் நிலையைப்பற்றி ஓர் அழகான குறும்படம் இயக்கியிருக்கிறார்கள். இதை நீங்களும் பார்த்திருக்கலாம். பார்க்காதவர்களுக்காக இங்கே. இதில் ஒரேயொரு வசணத்தை தவிர வேறெதுவும் வசணம் இல்லை, காட்சிகளால் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய ஓர் அழகான படைப்பு. இறுதி வரையும் பாருங்கள் அப்போதுதான் புரியும்.. இதை இயக்கிய இயக்குனருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் பாராட்டுக்கள்..


சிங்கள தொலைக்காட்சி நாடகங்களும் நானும்..!

இலங்கையில் தொலைக்காட்சி என்ற பொழுதுபோக்கு ஊடகமும்,தொலைக்காட்சி பெட்டிகளும் அதிகளவாக அறிமுகமான காலகட்டம் அது. அதாவது 90களின் நடுப்பகுதி. அப்பொழுதே எங்கள் வீட்டிற்கும் தொலைக்காட்சி பெட்டி அறிமுகமாகியது.. அப்பொழுது இரண்டு அலைவரிசைகள்தான். ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை, இரண்டும் அரசுக்கு சொந்தமானவை. இன்றைய காலகட்டத்தில் கண்ட பக்கமெல்லாம் படங்களும் பாடல்களும் ஆனால் அன்று படங்களோ பாடல்களோ அவ்வளவு சுலபமாக பார்த்துவிடமுடியாது. இரண்டு சானல்களிலும் சிங்கள நிகழ்ச்சிகளே அதிகம் ஒலிபரப்பபடும். தமிழில் செய்திகள் மட்டும் தினம் ஒரு தடவை ஒளிபரப்பாகும்.

தமிழ்நிகழ்ச்சிகளை பொறுத்தவரை ரூபவாஹினியில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 2 மணி முதல் 3 மணி வரை இடம்பெறும் இதில் அரைநேரம் நாடகமும் மற்ற அரைநேரம் பாடல்களும் ஒளிபரப்பாகும். இந்த ஒரு மணிநேரத்தில் அனைவரும் தொலைக்காட்சி பெட்டி முன் தான். இதிலே பார்த்த நாடகங்களான. பாலச்சந்தரின் கையளவு மனசு,மனோரமா ஆச்சியின் அன்புள்ள அம்மா மறக்கமுடியாதவை. மற்ற அரை மணிநேரத்தில் 5 அல்லது 6 பாடல்கள் இடம்பெறும் இதைப்பார்க்க ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். இதிலும் ஒளிபரப்பிய பாடல்களையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவார்கள். தமிழ்த்திரைப்படங்களை பொறுத்தவரை ரூபவாஹினியில் மாதம் ஒரு முறையும் சுயாதீன தொலைக்காட்சியில் வாரம் ஒரு முறையும் ஒளிபரப்பாகும். இலங்கையில் படைக்கப்பட்ட தமிழ்நாடகங்கள்,பாடல்கள் வானொலியில் அதிக இடம் பிடித்திருந்தாலும். தொலைக்காட்சியில் அவ்வப்போது பொங்கள்,தீபாவளி தினங்களில் மாத்திரம் ஒளிபரப்புவார்கள்..

இவ்வாறான காலகட்டங்களிலேயே சிங்கள தொலைக்காட்சி நாடகங்கள் எனக்கு அறிமுகமாகியது. ஆரம்ப காலங்களில் சிங்கள மொழி அவ்வளவாக பரிச்சயமில்லையென்றாலும் அதன் நகரும் காட்சியமைப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் போன்றவை மிகவும் ஈர்ப்பை ஏற்படுத்தியதுடன். மொழியை தாண்டி அவை புரியும்படியாகவும் இருந்தது. பின்னாட்களில் பாடசாலையில் சிங்கள பாடமும் இருந்ததால் அவை இலகுவில் புரிய ஆரம்பித்ததுடன். சிங்கள மொழியை கற்க இவ்வாறான தொலைக்காட்சி நாடகங்கள் பெரிதும் உதவியது.

இப்போதெல்லாம் தொலைக்காட்சி நாடகங்கள் என்றாலே அது பெண்கள் சார்ந்த விடயமாகவே பார்க்கப்படுகிறது. ஆண்களுக்கு அங்கே அனுமதியில்லை என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது.. இதற்கு தற்காலத்து நாடகங்களும் சான்றுதான். காரணம் அங்கே முழுதும் பெண்கள் ராச்சியம்தான். பெண்களே அதிகம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதால் அவர்களை கவர்வதற்கான உத்தியாகலாம் இது. இதனால் தொலைந்து போனது நாடகங்களின் தனித்தண்மை மட்டுமே, இதற்கான முழுப்பொறுப்பும் இந்திய தொலைக்காட்சிகளின் பக்கமே. (ஒரு சில நாடகங்களை தவிர்த்து உ+ம் மர்ம தேசம்) ஆனால் இலங்கையின் அப்போதைய நாடகங்கள் அவ்வாறில்லை. அது மனிதர்களின் சமகால வாழ்க்கையின் யதார்த்தங்களை நன்றாக பேசியது. அவர்களின் கலை,கலாச்சாரம்,வாழ்வியல் அதன் உண்மைகள் பொய்கள் மற்றும் மனிதர்களின் உண்மை முகங்களை ஒப்பனைகள் இல்லாமல் அவ்வாறே காட்டியது.

இரவு நேரம் பொதுவாக பிள்ளைகள் படிக்கும் நேரமாகையால், அப்பொழுது டீவி பார்ப்பதற்கு அனுமதியில்லை. ஆனால் நாடகங்கள் ஒலிபரப்பபடும் நேரமான இரவு 8.30 - 9.00 மட்டும் எங்கள் வீட்டில் அனுமதி உண்டு. காரணம் அந்த நாடகங்களின் தரம், அவற்றில் சொல்லப்படும் விடயங்கள். ஒரு நாடகம் வாரத்துக்கு ஒரு அங்கம்(எபிசோட்)  மட்டுமே ஒளிபரப்பாகும் அடுத்த எபிசோட்டை பார்க்க அடுத்த வாரம் வரை காத்திருக்கனும் அந்த காத்திருப்பும் ஒருவித இன்பம்தான். இவ்வாறு ஏழு நாட்களும் ஏழு நாடகங்கள் ஒளிபரப்பாகும். ஒரு சுவாரசியமான நாவலை படிக்க படிக்க எவ்வளவு சுவையாக இருக்குமோ அவ்வாறான உணர்வு இந்த நாடகங்களை பார்க்கும் பொழுது. காரணம் அதிகமான நாடகங்கள் பிரபலமான நாவல்களை தழுவியே எடுக்கப்பட்டது.

ஒரு நகரத்தில் வாழும் மனிதனுக்கு, கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமென்றால் கிராமத்துக்கு சென்றுதான் பார்க்கவேண்டும் என்ற அவசியம் ஏற்படாதவாறு. கிராமத்தை அப்படியே கண்முன் கொண்டுவந்தது அவ்வாறான நாடகங்கள். அந்த கால கட்டத்தில் கிராமத்தை அடிப்படையாக வைத்தே அதிக நாடகங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அங்கே கிராமத்து மனிதர்களின் வாழ்க்கைமுறை,கல்வி முறை,நடை உடை பாவனை அத்தனையும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டது எந்தவித மிகைப்படுத்தலோ இல்லாமல்.
அப்போது பார்த்தவற்றில் இப்போது பல நாடகங்களின் பெயர்கள் நினைவிலில்லை. நினைவில் நிற்கின்ற சில தூதருவோ(பிள்ளைகள்), நேதேயோ(உறவினர்கள்), அம்மய் தாத்தய் (அம்மா அப்பா), எககெய குருள்ளோ(ஒரு வீட்டுப்பறவைகள்), இட்டிபஹன்(மெழுகுவர்த்தி),மடொல்துவ, அம்ப யாலுவோ(சிறுபராய நண்பர்கள்), பளிங்கு மெனிக்கே,தடுபஸ்னாமனய இதில் தமிழ்/சிங்கள கலவையில் உருவான யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட "இவ்வழியால் வாருங்கள்" என்ற நாடகத்தையும் குறிப்பிடலாம். சுயாதீன தொலைக்காட்சி(ITN) யில் இரண்டு தசாப்தம் கடந்தும் "கோப்பி கடே" (டீக்கடை) என்றொரு நாடகம் இன்னும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இதிலே வாராவாரம் ஒவ்வொரு தலைப்பில் சமகாலத்தில் நடைபெறும் ஏதாவதொரு விடயத்தை பற்றி பேசுவார்கள் கொஞ்சம் நகைச்சுவையாக கொஞ்ச்ம சிந்திக்க கூடிய வகையில். அதில் நடிக்கதுவங்கிய பலரில் சிலர் இறந்தும்விட்டார்கள். ஆனால் முன்புபோலில்லாமல் அதன் தரம் குறைந்து கொண்டு வருகிறது.

தற்போதைய சிங்கள தொலைக்காட்சி தொடர்களை நோக்கினால அவை முன்பு போல் இல்லை. இன்றைய மேல்தட்டு மக்களின் வாழ்க்கையையும்,காதலையும்,இன்றைய நவ நாகரீக வாழ்க்கை முறையையும்தான் அதிகம் பேசுகிறது. ஒரு சில நாடகங்களை தவிர.காலங்கள் செல்ல செல்ல இன்றைய நடைமுறைக்கேற்றவாரு ரசனைகளையும் மாற்றிக்கொள்ளவேண்டியிருக்கிறது. விரும்பியோ விரும்பாமலோ.. இன்றைய வணிக உலகில் எது அதிகம் விரும்பபடுகிறதோ அதுவே அங்கே உருவாக்கவும்படுகிறது அது அபத்தமாகயிருந்தாலும்..!

டிஸ்கி- பதிவெழுத தொடங்கிய காலத்தில் எழுத நினைத்தது ஒன்றரை வருடம் கழிந்து இன்று நிறைவேறியுள்ளது.

சின்ன சின்ன சந்தோஷங்கள்..!!


அன்றொரு இரவு நேரம்
அபுதாபியில்
மல்லிகை சாமான வாங்குவதற்காய்
நண்பனொருவனுடன் சென்றிருந்தேன்
சுப்பர் மார்க்கட் ஒன்றிக்கு..
பொருட்கள் கொஞ்சம்தான் வாங்கி
பில் போட்டுவிட்டு
தள்ளு வண்டியை தள்ள முற்பட்டோம்.
அதற்குள் அங்கு வேலை செய்யும்
பையநொருவன் அதை தள்ளிக்கொண்டு
எங்கள் முன்னால் சென்றான்..
அவனிடம்
டாக்ஸி பக்கித்தில்தான் நாங்களே
கொண்டு போய்க்கிறோம்
என்றோம்..
அவன் கேட்பதாய் இல்லை
பரவாயில்லை நான் கொண்டு வந்து
தருகிறேன் என்கிறான்..
அவன் நோக்கம்
வருபவர்களுகு உதவி செய்து
பொருட்களை ஏற்றிக்கொடுத்தால்
எவ்வளவாவது தருவார்கள் என்பது..
மிகக்குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும்
அவர்களின் நம்பிக்கையே
இந்த "டிப்ஸ்" எனப்படும்
சின்னத்தொகையில்தான்..
இவன் ஏன இதை தள்ளிட்டு வரனும்
நம்ம ரெண்டு பேரு இருக்கம் தானே
இப்ப இவனுக்கு ஏதாவது குடுக்கனும்
நண்பன் பக்கத்தில்
முணங்கிக்கொண்டு வருகிறான்..
பொருடகளை ஏற்றிவிட்டு
எங்கள் முகத்தை பார்த்தான்
நான் ஐந்து திர்ஹம் அவன் கைகளில்
பொத்திவிட்டு
வண்டியில் ஏறிக்கொண்டோம்..
அந்த ஐந்து திர்ஹம் கொடுத்த வேளை
அவன் முகத்தில் கண்ட புன்னகை
இவ்வாறான
சின்ன சின்ன விடயங்களால்கூட
மனிதர்களை சந்தோஷப்படுத்த முடியும்
என உணர்ந்து கொண்டேன்..

இரவுக்காதலன்..!!


இரவு அழகானது
நிலவோடு
உன் நினைவுகளையும்
சுமந்து வருவதால்..!

வார்த்தைகள் சேகரிக்கிறேன்
உன்னுடன் பேச
பரிட்சைக்காய் பயிலும்
பள்ளி சிறுவன் போல..!

விலைகொடுத்து வாங்கிவிட்டாயா
வெட்கங்களை
உன் நிழலும் நாணுகிறதே
உன்னைப்போலவே..!

ஒப்பந்தம் செய்துகொண்டேன்
கனவுகளோடு
ஒளிப்பதிவு செய்யக்கோரி
உன் முகத்தை மட்டும்..!

புன்னகைகள்
சுமந்து செல்கிறால்
புத்தகங்கள் சுமந்து செல்லும்
பள்ளிச்சிறுமி போல்..!

தக்காளித்திருவிழா 2011..!!


உலகில் பல்வேறு பிரதேசங்களிலும் விதவிதமான திருவிழாக்கள் நடைபெறுவது வழமை.. இது கொஞ்சம் வித்தியாசமான திருவிழா, ஒவ்வொரு வருடமும் ஸ்பெயின் நாட்டில் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி புதங்கிழமை இந்த தக்காளி திருவிழா நடைபெறுவது வழமை. அதாவது தக்காளியை ஒருவருக்கொருவர் எறிந்து சந்தோஷங்களை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.
இம்முறை ஸ்பெயினின் Bunol நகரில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது,

இதில் 20000-40000 பேர் கலந்துகொண்டுள்ளார்கள். 100 metric ton க்கும் அதிகமான தக்காளியை இதற்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். தக்காளியை உணவுக்கே மட்டும் பயன்படுத்தும் நமக்கு ஆச்சர்யமான திருவிழாதான். இது 'World's Biggest Food Fight' எனவும் அழைக்கப்படுகிறது.. வாங்க நாமளும் இதில் கலந்துக்கலாம்.. 




































முடிந்தால் இண்ட்லியில் ஒரு ஓட்டுப்போடவும்..

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...