இந்திய சிறுவனுக்கு.......!100வது பதிவு..


இந்த சிறுவனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது பூரண சுகத்துடன் இருக்கிறான் என்ற செய்தி பின்னர் தெரிய வரவே எனது பழைய பதிவு நீக்கப்பட்டுள்ளது..

33 comments:

Jana said...

பாவம் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு போகமுடியாது. அப்பகுதிகளில் உள்ள தொண்டு நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், என்பவ்றின் பார்வை இந்த சிறுவன்மேல் படவைக்கப்பட்டு, சிறுவனின் சிகிற்சைகள் திறமையாக இடம்பெற்று அவன் சுகமாக வாழ பிரார்த்தனைகள்.

Riyas said...

@ jana..

அண்ணா... ரொம்ப வேகமா பதிவிட்டவுடன் வந்திட்டிங்க நன்றி,

நிச்சயமாக நீங்கள் கூறியது சரியான விடயமே மனித நேயம் படைத்தவர்கள் இவ்வுலகில் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்கள் பார்வைக்கு இச்சிறுவனின் நிலையை எடுத்துச்சென்றால் நிச்சயம் அச்சிறுவனுக்கு நல்லது நடக்கலாம்..

THivya said...

இன்று என்னால் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட்ட ஒரு செய்தி உலகம் முழுதும் உள்ள தமிழ் இணையங்களில் வெளிவந்துள்ளமை எனக்கு சந்தோசமாகத்தான் இருக்கிறது. எனினும் ஒரு நன்றி கூட சொல்லாமல் எனது தள முகவரியை அப்படியே நுட்பமாக அழித்துவிட்டு பிரசுரித்திருக்கிறார்கள். இணையங்கள்- ப்ளாக்கர்கள்- சஞ்சிகைகள்- பத்திரிகைகள் அனைத்தும் என் ஒருவனால் ஒரு செய்தி மக்கள் மத்தியில் சென்றடைவதால் திருப்திப்பட்டுக்கொள்கிறேன். எனினும் எனக்கும் எனது தளவளர்ச்சிக்கும் உதவினால் இன்னும் சந்தோசப்படுவேன். நன்றியுடன் புதியவன்.

வாழ்த்துக்கள் 100வது பதிவுக்கு
http://puthiyaulakam.com

FARHAN said...

முதலில் நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் ..

ஒரு மனித நேய நெஞ்சம் கொண்ட ஒருவரின் உதவியோடு இந்த சிறுவனின் நெஞ்சில் உள்ள கால சத்திர சிகிச்சையின் மூலம் அகற்ற பட்டதாக செய்தி கண்ணா கிடைத்தாது அந்த செய்து கிடைத்தால் அதன் லிங்க் இங்கே தருகிறேன்

THivya said...

This is Original News...
http://puthiyaulakam.com/2011/02/11/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8/

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

முதலில் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ரியாஸ்! மிகவும் அதிசயமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளீர்கள்! ஆச்சரியமாக இருக்கிறது!



நீங்கள் பல்லாயிரம் பதிவுகளைத் தொட வாழ்த்துக்கள்!

Chitra said...

அந்த சிறுவனுக்கு, இது குறையாக அமையாமல் எல்லா நலனும் பெற்று வாழ பிராத்தித்துக் கொள்வோம்.

நூறாவது பதிவுக்கு, வாழ்த்துக்கள்!

தமிழ் உதயம் said...

சதத்துக்கு வாழ்த்துகள். அரசாவது, அந்த சிறுவனுக்கு உதவ வேண்டும்.

நிரூபன் said...

Jana said...
பாவம் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு போகமுடியாது. அப்பகுதிகளில் உள்ள தொண்டு நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், என்பவ்றின் பார்வை இந்த சிறுவன்மேல் படவைக்கப்பட்டு, சிறுவனின் சிகிற்சைகள் திறமையாக இடம்பெற்று அவன் சுகமாக வாழ பிரார்த்தனைகள்//


ஜனாவின் கருத்துக்களை நானும் வழி மொழிகிறேன்.

அப்புறம் உங்களின் நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள். இன்னும் இன்னும் நிறையப் பதிவுகளை நீங்கள் படைக்க வாழ்த்துகிறேன்.

Riyas said...

@ puthiyaulakam.

இது நீங்கள் வெளியிட்ட செய்தி என்று தெரியாது. எனக்கு மின்னஞ்சலில் வந்தது அதையே நான் குறிப்பிட்டுள்ளேன். இதன் மூலம் யாருடையது என்பது அதில் குறிப்பிடப்படவில்லை,

வருகைக்கு நன்றி.

Riyas said...

@ பர்ஹான்
@ மாத்தியோசி றஜீவன்
@ சித்ரா மேடம்
@ தமிழ் உதயம்
@ நிரூபன்

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..

செல்வா said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் .. உண்மைலேயே அந்தப் பையன நினைச்சா கஷ்டமாதான் இருக்கு .. அவனுக்கு நல்லது நடக்க இறைவனை வேண்டுவோம் ..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஆச்சர்ய படவைக்கும் தவகல்..
பகிர்வுக்கு நன்றி..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கவிதை வீதி தங்களை அன்போடு அழைக்கிறது..

ஹேமா said...

ம்...கலியுகம் !

உங்களின் எழுத்துலகம் இன்னும் வளர
வாழ்த்துகள் ரியாஸ் !

சி.பி.செந்தில்குமார் said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

சிறுவனின் நிலைக்கு அனுதாபங்கள். நல்லது நடக்க பிரார்த்திப்போம்

அன்புடன் நான் said...

தொழிநுட்பம் வளர்ந்த வேகத்தில் மனித நேயம் வளரவில்லையே.. மனித நேயம் படைத்த வசதியுள்ளவர்கள் முன் வந்தால் இச்சிறுவன் வாழ்க்கையிலும் நல்லது நடக்கலாம்.. நடக்கும்..//

மிக சரியா சொன்னிங்க.... இறைவன் அருளால் அல்லது இறவனைப்போன்றோரின் அருளால் நிச்சயம் நல்லது நடக்கு அந்த சிறுவனுக்கு.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்


//தொழிநுட்பம் வளர்ந்த வேகத்தில் மனித நேயம் வளரவில்லையே.. மனித நேயம் படைத்த வசதியுள்ளவர்கள் முன் வந்தால் இச்சிறுவன் வாழ்க்கையிலும் நல்லது நடக்கலாம்.. நடக்கும்.//


சிறுவன் வாழ்கையில் நல்லது நடக்க
நாம் அனைவரும் இறைவனிடம் துஆ செய்வோம்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக, சகோ.ரியாஸ்.
நூறாவது பதிவு மிகுந்த பொதுனலநோக்குடன் கூடிய அர்த்தமுள்ள பதிவு.

//சிறுவன் நடக்கும் போதெல்லாம் இந்த மேலதிகமான உடல் பாகங்கள் அவனுக்கு பெரும் சுமையாக இருப்பதாக கூறுகிறான். இன்றைய நவீன மருத்துவ உலகில் இதை அகற்றுவதற்கான வசதியிருந்தும். நாளாந்தம் இருநூறு ரூபாய்க்கு கூலி வேலை செய்து மிகவும் வறுமையில் வாழும் அவன் குடும்பத்துக்கு இது முடியாத காரியமாகவே உள்ளதாம். தொழிநுட்பம் வளர்ந்த வேகத்தில் மனித நேயம் வளரவில்லையே.. மனித நேயம் படைத்த வசதியுள்ளவர்கள் முன் வந்தால் இச்சிறுவன் வாழ்க்கையிலும் நல்லது நடக்கலாம்.. நடக்கும்... ///---பொன் எழுத்துக்கள்...

நம்மை விட கல்வியிலும் செல்வத்திலும் ஏழை நாடுகளாயினும் பல மனிதநேயமுள்ள நாடுகளின் அரசுகள் என்ன செய்கிறதென்றால்... இப்படி பிறவிக்குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளை அந்த ஏழை அரசின் செலவிலேயே... அறிவிலும் தொழில்நுட்பத்திலும் முன்னேறிய (நம் நாடு போன்ற)நாடுகளுக்கு அழைத்துச்சென்று பணம் செலவழித்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். அதனை சாதனையாக பலமுறை நம் நாட்டின் பிரபல தனியார் மருத்துவமனைகள் புகழ்ந்து செய்தி வெளியிட்டுக்கொள்கின்றனர். ஆனால், அவர்கள் பணம் கொடுத்தால்தான் எந்த சாதனைகளையும் செய்வார்கள்.

மூன்றாந்தர நாடுகளின் மனிதநேயம் கூட நம் நாட்டில் இல்லை என்று நினைக்கும்போது மனது கனக்கிறது.

விபச்சாரிகளுக்கும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் எல்லாம் நலவாரியம் அமைக்கும் அரசுகள் இதனையும் கண்டுகொள்ள வேண்டும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

முதலமைச்சர் ஏதாவது செய்யமாட்டாரா?
இந்த அரசியல் வியாதிகள் அடிக்கும் கொள்ளைக்கு பாவ விமோசனமாகவாவது இக்குடும்பத்துக்கு உதவி செய்யக் கூடாதா?
இப்படத்தை சாயிபாபா, நித்தி, சிறி சிறி சிறி, வாசுதேவுக்கு அனுப்பிப் பாருங்கள். அவர்களுக்குப் பாவவிமோசனம் கிட்டும்.

ஷர்புதீன் said...

wishes for your 100

ஜீவன்சிவம் said...

என்ன ஒரு கொடுமை..? ஏதாவது நல்ல உள்ளங்கள் அறுவை சிகிச்சைக்கு வழி செய்தால் பரவாயில்லை.

அந்நியன் 2 said...

இதன் செய்தி நானும் எனது மெயிலில் பார்த்தேன் ரொம்பக் கொடுமையான விஷயம் என்னிடம் அந்த சிறியவனின் புகைப் படம் நான்கு இருக்கின்றது,அதை வெளியிட்டால் குழந்தை மனம் உள்ளவர்கள் அழுவார்கள் என்ற எண்ணத்தில் நான் தளத்தில் இணைக்க வில்லை.

கண்டிப்பாக அந்த சிறுவன் குணம் அடைய பிரார்த்திப்போம்.

தூயவனின் அடிமை said...

அவனின் எதிர் காலம் நலமாக அமைய அந்த இறைவனிடம் பிரார்த்திகின்றேன்.

Riyas said...

@ கோமாளி செல்வா
@ கவிதை வீதி சௌந்தர்
@ ஹேமா
@ சி.பி.செந்தில்குமார்
@ சி,கருணாகரசு
@ ஆயிஷா அபுல்
@ முஹம்மத் ஆசிக்
@ யோகன் பாரிஸ்
@ ஷர்புதீன்
@ ஜீவன் சிங்கம்
@ அந்நியன் 2

உங்க அனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,,

Philosophy Prabhakaran said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்... அப்படின்னு சொல்ல மனசு வரலை... வேற ஏதாவது எழுதியிருக்கலாமே...

Unknown said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

அடிக்கிற நூற சந்தோசமா அடிக்காம அடுத்தவர் துயரத்த காட்டிய உங்க பெருந்தன்மை உயர்ந்தது நண்பரே

ஜெய்லானி said...

//விபச்சாரிகளுக்கும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் எல்லாம் நலவாரியம் அமைக்கும் அரசுகள் இதனையும் கண்டுகொள்ள வேண்டும். //

சரியான , அவசியமான கேள்வி இது ...!!உலக்கையை எடுத்து தலையில் போட்டது மாதிரி இருக்கு

ஜெய்லானி said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ரியாஸ் :-))

கவின் said...

இப்படி மற்றவர்களை வைத்தே பிழைப்புகளை கொண்டு போகும் நீங்கள் சொல்லுகிற செய்தியையாவது முழுமையாக சொல்லாமே , அந்த பையனுக்கு அறுவைசிகிச்சை செய்து அவன் பூரண் நலத்தோடு நன்றாக இருக்கிறான். இதபாருங்க புரியும். http://healthylifecarenews.com/boy-men-
with-8-limbs-normal-life-now/

Riyas said...

@ கவின்.

தகவலுக்கு நன்றி கவின்..

// இப்படி மற்றவர்களை வைத்தே பிழைப்புகளை கொண்டு போகும் நீங்கள்//
இதுக்கென்ன அர்த்தம் நண்பரே.. நாங்கள் யாரை நம்பியும் பிழைப்பு நடத்துவதில்லை இந்த பிளாக் எழுதுவதெல்லாம் சும்மா ஒரு பொழுதுபோக்குத்தான்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அப்பாடா!மகிழ்வான செய்தி
இன்னும் நம் நாடுகளில் மழை பெய்வதே இதனால் தான்!

கவின் said...

ம்..ரியாஸ் , உங்கள் பதிவில் முழுமையில்லாத செய்தியை பார்த்ததும் ஏற்பட்ட கோபம் , கீழே எழுதப்பட்ட கருத்துக்களை பார்த்து அதிகரித்தது , ஏதாவது ஒரு விடயத்தை ஒருவர் சொன்னால் கொஞ்சமாவது அதனை ஆராயாமல் ,அறியாமல் மந்தைகள் மாதிரி அப்படியே ஏற்றுகொள்வதா , நாம் மட்டும் ஏன் இப்படி ? இதனால்தான் கருணாநிதிகள் எங்களில் ஏறி நின்றி சவாரி விடுகுதுகள் , இது மாறவேணும் , யார் என்ன சொன்னாலும் ஒருதடவை அதை ஆராய வேணும்.

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...