மீண்டுமொரு கிரிக்கெட் யுத்தம்...!


பத்தாவது உலகக்கிண்ணப்போட்டிகள் ஆரம்பித்து அரையிறுதி போட்டிகள் வரை வந்துவிட்டது. அரையிறுதி போட்டிகளுக்குள் மூன்று ஆசிய அணிகள் தெரிவாகியிருப்பது சந்தோஷமே.இந்தியா,இலங்கை,பாகிஸ்தான் ஆகிய இந்த அணிகள் ஏற்கனவே ஒவ்வொரு முறை உலகக்கோப்பையை வென்று இரண்டாவது முறை கைப்பற்றும் முனைப்போடு களமிறங்குகின்றன. மற்றைய அணியான நியுசிலாந்து தென்னாபிரிக்காவிற்கு அதிர்ச்சி கொடுத்து அரையிறுதி போட்டிக்குள் நுழைந்திருக்கிறது.
அரையிறுதிப்போட்டிகளுக்கு வரமுடியாமல் தோற்ற அணிகளை பொறுத்தவரையில் தொடர்ச்சியாக மூன்று தடவை சம்பியனாகிய அவுஸ்திரேலியா அணி இம்முறை இந்தியாவால் வெளியேற்றப்பட்டது. எப்படியாவது வெற்றிபெறவேண்டும் என பொண்டிங்க சதமடித்து போராடினாலும் ஏனையவர்களின் போராட்டக்குணம் தளர்ந்து போனதால். முக்கியமாக சேன் வொட்சன்,கெமரன் வைட்,மைக் ஹசி போன்ற அவுஸ்திரேலியாவை சரிவிலிருந்து தூக்கி நிறுத்துபவர்கள் ஆசிய ஆடுகளங்களில் சாதிக்கமுடியாமல் போனமை,சுழல் பந்துவீச்சு பலமின்மை சேன் வோனுக்குப்பிறகு நல்லதொரு சுழல்பந்துவீச்சு இல்லாதகுறை இதில் நன்றாகவே தெரிந்தது.பிரட் லீ,சோன் டைட்,மிச்சல் ஜோன்சன ஆகியோரால் எதிரனி துடுப்பாட்ட வீரர்களை பயமுறுத்த முடியாமல் போனமையே ஆஸியின் தோல்விக்கு முக்கிய காரணம்.
இவ்வளவு நாளும் துரதிஷ்டங்களால் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டிருந்த தெண்ணாபிரிக்கா அணி. இம்முறை யாருமே எதிர்பார்க்காத வகையில் நியுசிலாந்தினால் வெளியேற்றப்பட்டது பரிதாபமே. இவர்கள் திறமையானவர்கள்தான் ஆனால் முக்கியமான போட்டிகளில் அல்ல என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துவிட்டார்கள்.இந்த தோல்விக்கு அவ்வணியின் துடுப்பாட்ட வீரர்களே மிக முக்கிய காரணம். ஆபிரிக்காவின் உலகக்கோப்பை கனவுக்கு இன்னும் நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும். அடுத்து இலங்கையால் அடித்து துரத்தப்பட்ட இங்கிலாந்து அணி. தோற்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும். போராடும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இவ்வளவு மோசமாக ஒரு விக்கெட்டைக்கூட கைப்பற்ற முடியாமல் அவமானகரமாக தோற்கும் என எதிர்பார்க்கவேயில்லை.இங்கிலாந்தின் தோல்விக்கு முக்கிய வீரர்களின் காயமும் பந்துவீச்சு பலமின்மையுமே முக்கிய காரணம்.ஆனாலும் ஜொனதன் ரொட்டின் தொடர்ச்சியான பெறுபேறு அபாரம். ஒரு நாள் டெஸ்ட் போட்டிகள் இரண்டிலுமே சிறப்பான நேர்மையான துடுப்பாட்டம். மீண்டுமொரு மைக்கல் பெவன் என்றே சொல்லலாம்.
அடுத்தது மேற்கிந்திய தீவுகள். கிரிக்கெட்டின் ஜாம்பவான் களான கிளைவ் லொயிட்,விவ் ரிச்சட்ஸ்,கெரி சோபர்ஸ்,கொட்னி வோல்ஸ்,அம்ரூஸ்,லாரா இன்னும் பலர் விளையாடிய கிரிக்கெட் நாட்டிலிருந்து வந்தவர்களா இவர்கள் எனும் நிலையில் எரிச்சலடைய வைக்கிறது அந்த அணியின் விளையாட்டு. நமக்கே இப்படி என்றால் அநநாட்டு மக்களுக்கு எப்படியிருக்கும். அரையிறுதி போட்டிகளிள் மோதும் அணிகளைப்பற்றி பார்தோமானால் நியுசிலாந்து அணியினால் இலங்கையின் பந்துவீச்சை சமாளிப்பது கடினம் என்றே தோன்றுகிறது. இலங்கை துடுப்பாட்ட வீரர்களும் முழுத்திறமையுடனிருப்பதால். இலங்கை இறுதிப்போட்டிக்கு பிரவேசிக்கும் என்றே நம்பலாம். நியுசிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் கைகொடுத்தால் அவர்களாலும் முடியும் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு பிரவேசிக்க.

கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்திருக்கும் போட்டி புதங்கிழமை நடைபெறவுள்ள இந்தியா பாகிஸ்தான் மோதல். உள்நாட்டு குழப்பங்களால் சொந்த நாட்டில் விளையாடமுடியாத நிலை, ஆட்ட நிர்ணய சதியினால் மூன்று முக்கிய வீரர்கள் நீக்கப்படடமை, அணியிற்குள் பிளவு, ஸ்திரமில்லாத துடுப்பாட்டம் போன்ற பல பிரச்சினைகளை சந்தித்த பாகிஸ்தான். இவ்வளவு தூரம் வந்ததே பாராட்டக்கூடியதே.இதற்கெல்லாம் முக்கிய காரணம் ஒரேயொருவரின் அயராத முயற்சி,உத்வேகம் அவர்தான் தலைவர் சஹீட் அப்ரிடி. போட்டித்தொடரில் கூடுதல் விக்கெட்டுக்களான 21 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருக்கிறார்.அதைவிட அவரின் தலைமைத்துவம் மிகச்சிறப்பு ஒவ்வொரு வீரரையும் உற்சாகப்படுத்துவதும், ஆக்ரோசப்படுத்துவதும் புதிய யுக்திகளை கையாள்வதும் வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளது. உமர் குல் வேகப்பந்துவீச்சும் அச்சுறுத்தலாகவே இறுக்கும்.துடுப்பாட்ட வரிசை ஹபீஸ்,அக்மல்.சபீக்,மிஸ்பா,யூனுஸ்,உமர்.ரஸ்ஸாக் என பலமானவையே.. வென்றேதீரவேண்டும் என வெறியோடிருக்கும் பாகிஸ்தான் அணி இந்திய மிகச்சவாலாகவே இருக்கும் என நம்பலாம்.
அடுத்த இந்திய அணியை பொருத்தமட்டில் மிகப்பலமான துடுப்பாட்ட வரிசையுடன் இருக்கிறார்கள். எல்லோரும் போமில் இருப்பது மிகப்பெரும் பலமே. முக்கியமாக சச்சின்,சேவாக்,கம்பீர்.யுவராஜ் அசுரர்களாக இருக்கிறார்கள். இப்போட்டி சச்சினுக்கும் மிக முக்கிய போட்டியாக அமையலாம். காரணம் எவ்வளவுதான் சாதனைக்கு மேல் சாதனை படைத்தாலும் அவர் விளையாடிய காலத்தில் ஒரு உலகக்கோப்பையேனும் நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க இது அவருக்கான இறுதி சந்தர்ப்பம்.பந்துவீச்சில் சஹீர்கான் மிகச்சிறப்பாக வீசிக்கொண்டிருக்கிறார். ஹர்பஜன்,முனாப் படேல்,யுவராஜ் ஆகியோரும் ஓரளவு பங்களிப்பை வழ்ங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.சொந்த நாட்டில் விளையாடுவதால் இந்தியாவுக்கு அதிகளவு அழுத்தம் பிரயோக்கிக்கப்படலாம். உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை பல முறை தோற்கடித்திருந்தாலும் இந்திய மைதானங்களில் மிகச்சிறப்பாக விளையாடக்கூடியது பாகிஸ்தான் அணி. 23 வருடங்களின் பின் மீண்டுமொரு உலக்க்கோப்பையை எதிர்பார்த்தவண்ணம் அதுவும் சொந்த நாட்டில் வைத்து. இது மிகப்பெரும் வாய்ப்பு இந்திய அணிக்கு. இரண்டு நாடுகளின் அரசியல் குரோதவிரோதங்களை மறந்து ஜஸ்ட் விளையாட்டாக ரசித்தால் நல்லதொரு போட்டியை கண்டுகளிக்கலாம்..

படங்கள்.Cricinfo.com

போராளிகள்...!


விடியலுக்கு முன்னால்
விழித்தெழுந்து
கடவுளை வணங்கி
உள்ளதை உண்டுவிட்டு
கையில் மண்வெட்டியுடன்
மனதில் நம்பிக்கையுடன்
நகர்கிறார்கள்
இவர்கள்தான்
பூமியின் பழைய மனிதர்கள்
விவசாயிகள்...!

வெயில் மழையிரண்டும்
இவர்கள் தோழர்கள்.
சிலவேளை
பகைத்துக்கொள்வதுண்டு
தாயின் மீது வரும்
பிள்ளையின் கோபம் போல...!

ஒவ்வொரு விவசாயியும்
ஒவ்வொரு போராளியே
மழையோடும்
வெயிலோடும்
போராடிக்கொண்டுதானிருக்கிறான்
இறக்கும் வரையில்...!

வெயில் சுடும்
வெயிலுக்கு பயந்தவர்களுக்கு
வெயிலையே புசிப்பவர்கள் இவர்கள்
எங்கே சுடப்போகிறது
சூரியனே கீழிறங்கி
வந்தாலும் உருகிவிடும்
இவர்களின்
வறண்ட மேனியில் மோதி...!

தூக்கத்திலும்
விழித்துக்கொண்டிருக்கும்
குடில் காவலாளர்கள் இவர்கள்.
காட்டு மிருகங்களோடும்
போராடி ஏன்
யானையோடும் போராடவேண்டி
வரலாம்...!

உலகுக்கு உணவு தருபவர்கள்
அவர்கள் உண்பதென்னவோ
அரைவயிறுதான்
என்று தனியும் இந்த வறுமை
என்று செழிக்கும்
இவர்கள் வாழ்க்கை...!

நான் ஒரு கொலை பண்ணிட்டேன்...!


மனிதனாக பிறந்ததே மேல் என்கிறார்கள்.. உண்மைதான் அந்த ஒரு விடயம் மட்டும்தான் எனக்குள்ள சாதனை. 'நான் மனிதன்' என்ற கர்வம், இருந்தும் பயன்படுத்த மறக்கும் மறுக்கும் ஆறாம் அறிவு. வேகமாக வீசும் நாகரீக காற்றில் அடித்துச்செல்லப்படும் தூசு நான். விரும்பியோ விரும்பாமலோ காற்று செல்லும் திசையில் நகரத்தானே வேண்டும்..

சந்தோஷம்,துக்கம்,கோபம்,காதல்,காமம்,சோம்பல் எல்லாவிதமான குணங்களும் என்னிலும் உண்டு.. என்னைப்பார்த்து யாராவது நீ நல்லவன் என்றால் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் போகலாம்.. யாராவது நீ நல்லவனில்லை என்றால் இருக்கலாம் என்பேன். நல்லவன் என்பதற்கு எதுதான் அளவீடு இதுவரை எனக்கு புரியவில்லை.

நானும் கொலை செய்திருக்கிறேன்.. பயப்படாதீர்கள் மனிதனை அல்ல, ஏன் மனிதனை கொன்றால் மட்டும்தான் கொலையா ஏனைய உயிர்களைக்கொன்றால் அதற்கென்ன பெயர். ஆனால் இப்பொழுதெல்லாம் நிலைமை தலைகீழ் மிருகங்களுக்கு அன்பு காட்டுகிறார்கள் மனிதனை கொல்கிறார்கள். என்ன உலகமடா.. சின்ன வயதில் நடந்த கொலை சம்பவமொண்றை சொல்கிறேன். எங்கள் வீட்டுத்தோட்டத்தில் காய்கறி நடப்பட்டிருந்தது முக்கியமாக பயற்றங்காய்.இதன் மரம் சிறியதாக இருப்பதனால் அதன் காய்கள் கீழே தொங்கும் பூமி மட்டத்துக்கு. அவ்வாறனவற்றை இந்த ஆமைகள் வந்து தின்றுவிடும் எதையும் மிச்சம் வைக்காது தொடர்ந்து இவ்வாறு நடப்பதால் காய்கறி பயிர்செய்கையில் பெரும் நஷ்டம். பூச்சி புழுக்களுக்கு மருந்தடிக்கலாம், ஆடு மாடுகளுக்கு வேலி கட்டலாம் ஆமைக்கு என்ன செயவது..?
எங்கள் ஊர்ப்பகுதியில் முன்பிருந்த ஓர் பழக்கம் சிறு பிள்ளைகளை ஒரு விடயத்திற்காக திட்டும்போது இன்னுமொரு பிள்ளையோடு ஒப்பிட்டு (அவனின் திறமையோடு அவனின் செய்கையோடு) திட்டுவது.. இது உண்மையில் களையப்படவேண்டிய விஷயம்.. குறித்த பிள்ளையின் மனதை பாதிக்கக்கூடியது. எல்லோருக்கும் ஒரே மாதிரியான திறமை இருப்பதில்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆற்றல். இவ்வாறான செய்கைகளால் நிறையவே பாதிக்கப்பட்டவன் நான் அவ்வாறான வலிகள் இன்னும் என் மனதோடு ஓர் ஓரமாக

எனக்கு சிறிய வயதில் படிப்பில் ஆர்வமேயில்லை. பாடசாலை செல்வதென்றாலே தூக்குமேடைக்கு போவது போல் இழுத்துக்கொண்டுதான் செல்வார்கள் ஆனால் படிப்பைத்தவிர மற்ற எல்லாவற்றிலும் ஆர்வம் முக்கியமாக விளையாட்டுகளில். இப்போதைய சிறிசுகளின் விளையாட்டிக்கும் அப்போதைய எங்களின் கிராமப்புற விளையாட்டுக்கும் நிறையவே வித்தியாசம்.

இப்போது பொழுதுபோக்கு எவ்வாறு கணினிக்குள் முடக்கப்பட்டிருக்கிறதோ.. அதேபோல்தான் சிறுவர்களின் விளையாட்டுக்களும் கண்னி கேம், டீவி கேம் என முடக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு வரும் என அறிந்துதான் பாரதி அன்றே "ஓடி விளையாடு பாப்பா" என பாடினானோ.. ஆனால் நான் எல்லாவற்றிலும் கொஞ்சம் வித்தியாசமானவன். மனலினால் வீடுகள்.கட்டடங்கள்,பாலங்கள், ஊர்கள், அமைக்க ஆசை அதுபோலவே அமைத்தும் விடுவேன். இன்னும் இலங்கையில் சுரங்கப்பாதைகள் இல்லை ஆனால் நான் ஐந்து வயதிலேயே மனலைத்தோன்றி சுரங்கப்பாதைகள் அமைத்து காட்டியிருக்கிறேன்.. ஊரில் இதைப்பார்ப்பவர்கள் என்னை ஒரு பொறியியலாளர் என்றே கூறுவதுண்டு. பின்னாட்களில் அத்துறையில் படிக்க ஆசையிருந்தும் தகுதியிருந்தும் தற்செயலாக வர்த்தகதுறைக்கு மாறியது வேறு கதை. சிறிய வயதில் படிப்பில் ஆர்வமில்லையென்றாலும் போகப்போக நானாகவே என்னை வளர்த்துக்கொண்டேன் எட்டாம் ஒன்பதாம் வகுப்பு பரிட்சைகளில் முதலாமிடம் எனக்குத்தான் என்றால் பாருங்களேன்.. அந்த வகையில் சிறிய வயதில் படிப்பில் ஆர்வமில்லாமல் வேறு திசைகளில் கவனம் செலுத்தும் ஒரு சிறுவனின் வாழ்க்கையை நம் கண் முன் கச்சிதமக கொண்டு வந்த அமீர்கானின் தாரே சமீன் பர் என்ற ஹிந்தி திரைப்படம் என் மனதோடு ரொம்பவே ஒட்டிக்கொண்டது. படத்தில் வரும் அந்தச்சிறுவனை நானாகவே உணர்ந்தேன், ரசித்தேன், அழுதேன் அதன் விளைவாகவே இந்தப்பதிவும்..

காமம் போலவே என் கதையும் எங்கோ தொடங்கி எங்கோ செல்கிறது முடிவில்லாமல். ஆம் ஆமை பயற்றங்காயை தின்பதில் விட்டேன்.. மீண்டும் தொடர்கிறேன்.. இவ்வாறு போய்கொண்டிருக்கும் போது ஒரு நாள் உம்மா என்னைப்பார்த்து.. "பாருடா பக்கத்து வீட்டு அவன் எவ்வளவு உஷாரா உறுசுறுப்பா இருக்கான் உனக்கென்னண்டா தோட்டத்துக்கு வர்ற ஒரு ஆமையைக்கூட துரத்த உஷாரில்லையே.." என்று சொன்னதும். தூங்கிக்கிட்டிருந்த கோபம்,ரோஷம் எல்லாம் துள்ளி எழுந்தது.. எல்லாம் அந்த ஆமையால் வந்தது என்றென்னிக்கொண்டு உடனே தோட்டத்துக்கு சென்றேன். அந்த நேரம் பார்த்து பெரிய ஆமையொன்று காய்களை தின்றுகொண்டிருந்தது. என்னைப்பார்த்ததும் கால்களையும் தலையையும் உள்ளிழுத்துக்கொண்டது. என்னை கோர்த்துவிட்டு நீ இன்றைக்கும் திங்கிறதுக்கு வந்துட்டியா என்று மனசுக்குள் சொல்லிவிட்டு. உம்மாவிடம் திட்டுவாங்கிய ரோஷமும் ஆமையைக்கண்ட கோபமும் ஒன்று சேர்ந்து வர இதை ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் பக்கத்திலிருந்த பெரிய கல்லைத்தூக்கி அதன் ஓட்டில்மேல் போட்டுவிட்டேன்.. ஓடுடைந்து இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது.அப்படியே இரத்தம் வழிய வழிய நகர்ந்து சென்றுவிட்டது.

அடுத்தநாள் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது வேலி அருகே அந்த ஆமை இறந்துகிடந்தது.. அநியாயமாக ஒரு உயிரை கொன்றுவிட்டோமே என்று அப்போது மனசை உறுத்தியது. நம்முடைய கெட்ட கோபம் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்றுவிட்டதே என்று நானே என்னைத்திட்டிக்கொண்டேன். பின்னாட்களில் ஆமை பல ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை என்ற செய்தியை படித்தவுடன் மிகவும் வருந்தினேன்... இவ்வாறாக என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பதிவாக எழுதலாம் என நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றிங்க.. மிக நீண்ட நாளைக்குப்பிறகு பதிவிடுகிறேன் வரும் நண்பர்கள் ஓட்டு போட்டுட்டு எப்பிடியிருக்குன்னு சொல்லிட்டுப்போங்க..நன்றி.ரியாஸ்

உள்ள வந்து பாருங்க...18+

என்னலே அப்டி பார்க்கிறிங்க.. பெட்றோல் விலை எகிரிடிச்சில்ல..


நாங்களும் டான்ஸ் ஆடுவம்ல்ல

ரொம்பநாளா இதுல வழுக்கி விளயாடனும்னு ஆசை இப்பதான் நிறைவேறிருக்கு..

பயபுள்ளக்கி மப்பு இன்னும் குறையல்ல...

ஏலே நாங்களல்லாம் ரொம்ப மோசம்ல்ல..

அப்பாடா ஆபிஸுக்கு போக ரெடியாகியாச்சி..

என்னா லுக்கு..

நாமலாவது ஆபீஸ் வேலய சரியா செய்வோம்...

போட்டோவுல என்னையும் சேர்துக்கங்கலே

மியாவ்...

என்னடா 18+ போட்டிருக்கே அந்தமாதிரி ஒன்றையும் கானோமே அப்பிடின்னு பார்க்கிறிங்களா, எல்லாரும் போட்றாங்களே நாமளும் போடலாம்னு ஒரு நப்பாஸையில போட்டதுங்கோ. தலைப்ப பார்த்துட்டு உள்ள ஏதாவது மேட்டர் இருக்கும்னு நம்பி யாராவது இளசுகள் பெருசுகள் வந்திருந்த கீழே கணனித்திரையில் உள்ள படத்த பார்த்துட்டு ஓடுங்க..ஓடுங்க..
பயபுள்ளங்க இதுமாதிரி படமெல்லாம் நம்மளுக்கு காட்றதேயில்ல இப்ப பார்த்துறவேண்டியதான்..

தண்ணீர் தேசமும் நானும்...!


முன்பெல்லாம் நிறைய வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமிருந்தாலும். அப்போதைய நிலையில் எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கிப்படிக்கும் அளவிற்கு வசதியிருந்ததில்லை. இப்போது பொழுதைக்கழிக்க இனையம் என்ற பொழுது போக்கு சாதணம் இருப்பதனால் அவ்வப்போது மின்னூலாக கிடைக்கும் புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைப்பதுண்டு. அவ்வாறு அண்மையில் வாசித்து வியந்த புத்தகமே கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர் தேசம். இது நான் வாசித்த இரண்டாவது புத்தகம் வைரமுத்துவின். முன்பு வாசித்தது "கொஞ்சம் தேநீர் நிறைய வானம்" என்ற புத்தகம் அதிலிருந்தே அவரின் எழுத்துக்களை தேடிப்படிக்கும் ஆர்வம் அதிகமானது.

வாசிக்க வாசிக்க இனிக்கும் தண்மை கொண்டது வைரமுத்துவின் படைப்புகள். அதிலும் அவரின் இந்த படைப்பு முற்றிலும் வித்தியாசமான முயற்சி இதற்காக அதிகமாகவே மெனக்கெட்டிருப்பது வாசித்தவர்களுக்கு புரிந்திருக்கும்.இது 1996ம் ஆண்டு ஆனந்தவிகடன் வார சஞ்சிகையில் 24 தொடர்களாக வெளிவந்திருந்தது. வசனக்கவிதை,உரை நடை வடிவிலேயே எழுதப்பட்டிருந்ததால் படிப்பதற்கோ புரிந்துகொள்வதற்கோ எந்தவித இடைஞலும் இல்லை. யாரும் புரிந்து கொள்ளும்விதம் எளிய நடையில் அழகு தமிழில் இலக்கியச்சுவை கலந்த ஓர் அருமையான படைப்பு.

ஆரம்பத்தில் படிக்க தொடங்கும் போது ஏதோ காதலைப்பற்றி மட்டும்தான் சொல்லப்போகிறார் என்ற எண்ணத்துடன் படிக்க ஆரம்பித்தால் காதல், கடல், அறிவியல், மீனவன் வாழ்க்கை என தொடர்கிறது சுவாரஷ்ய பயணம். ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தை பார்க்கும் அணுபவம் இதை வாசிக்கும் போது.. வார்த்தைகள் வசனங்களினூடே காட்சிகளை கண்முன்னே கொண்டு வருகிறார் வைரமுத்து. இறுதி பகுதியில் ஒவ்வொரு பக்கத்தை தொடரும் போதும் அடுத்ததாக என்ன நடக்கும் என்ற விறுவிறுப்பு படபடப்பு அந்த கதாபாத்திரங்கள் போலவே எனக்கும் உண்டானது. அதுதான் ஒரு சிறந்த படைப்பின் வெற்றி.

கடலைப்பற்றி பூகோளத்தைப்பற்றி ஏராளமான அறிவியல் கருத்துக்களை இதில் கானலாம். எனது பார்வையில் பட்ட அவ்வாறான சில தகவல்கள்.

கடல்நீர் இடம்மாறி நிலப்பரப்பில் நின்றால் எல்லா இடங்களிலும் மூன்று கிலோமீற்றர் உயரம் தண்ணீர் நிற்கும்.

ஒரு டன் கடல் தண்ணீர் 0.000004 கிராம் தங்கம் வைத்திருக்கிறது.

பூமியின் தண்ணீரில் 97 வீதம் கடல்கொண்ட உப்புநீர், மீதமுள்ள 3 வீதத்தில் 1 வீதம் பனிமலைகளில் உறைந்து கிடக்கும் நீர், 1 வீதம் பூமிக்கடியில் உள்ள நீர் மீதமுள்ள 1 வீதம்தான் மனித தேவைக்கான நீர்.

ஒவ்வொரு மனிதனும் பருகுவது பயன்படுத்தப்பட்ட பழைய தண்ணீரைத்தான் என்கிறார்.

தெங்கடலில் தோன்றும் பேரலைகள் 24 மணி 50 நிமிடத்தில் உலகைச்சுற்றி வருகின்றனவாம்.


தண்ணீர் தேசத்திலிருந்து சில துளிகள்.

இந்தப்பிரபஞ்சமே
எனது பெட்டி
என்கிறேன் நான். இல்லை
உங்கள் வீட்டுப்பெட்டிக்குள்தான்
பிரபஞ்சம் எங்கிறீர்கள்
நீங்கள்.
உங்களைப் பிரபஞ்சமாய்
விரியவிடுங்கள்.பிரபஞ்சத்தை
உங்களாய்ச் சுருக்கி
விடாதீர்கள்.

பயன்படுத்தாத வானம்
பயன்படுத்தாத சூரியன்
பயன்படுத்தாத நட்சத்திரம்
பயன்படுத்தாத பூமி
பயன்படுத்தாத மூளை
மனித குலத்துக்குப்
பாக்கியிருக்கிறது.
ஒவ்வொரு மனிதனும் தனது
சொந்த
மூளையைக்கூட அடுத்தவன்
மனைவிமாதிரி
பாவிப்பதற்குப்
பயப்படுகிறான்.
சாதிக்கும் மூளையிருந்தும்
சோதிக்கும் முயற்சியில்லை.

வாழ்நாளில் 66000 லீட்டர்

தண்ணீர் குடித்தான்.
ஆயுளில் மூன்றில் ஒரு பங்கு
தூங்கினான்.
நான்கு கோடி முறை
இமைத்தான்.
நாலரை லட்சம் டன்
ரத்தத்தை இதயத்தால்
இறைக்கவைத்தான்
35 ஆயிரம் கிலோ உணவு
அதாவது எடையில் இந்திய
யானைகள் ஏழு தின்றான்.
மறித்துப்போனான்
இதற்குத்தானா மனிதப்பிறவி..?


தண்ணீர் தேசத்தை டவுன்லோட் செய்ய
இங்கே..கிளிக்

மகா ஜனங்களே ஓட்டுப்போட மட்டும் மறந்துடாதிங்க..



என் பிரபஞ்ச அழகி...!




அழகாகவே சிணுங்குகின்றன
உன் கொலுசுகளும்
வளையல்களும்
உன்னைப்போலவே...


இன்றிரவு
இரட்டையிருள்
நீயுமில்லை
நிலவுமில்லை...


உன் பார்வை மழை
பொழியட்டும்
போகும் வழியெங்கும்
செழிக்கும்
என் விவசாய தேசம்...


ஆண்டுக்கொரு அழகி
அணிவகுத்தாலும்
என்றைக்கும் நீதான் அழகி
என் பிரபஞ்சத்தில்....



Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...