தினமும் சாகிறார்கள்...!
வழிந்தோடுகிறது
நேற்று பெய்த மழை நீர்
வயல் வரப்புகளிலும்
ஏழை விவசாயிகள் முகங்களிலும்
பசுமையாக...
வாழ்க்கையே
வானத்து மழையோடுதான்
வந்து பொழிந்தால்
வளம்பெறும் அவர்களுலகம்...
வறண்டு போகிறது
வயல்களும்
வயிறுகளும்
வர மறுக்கும் மழையினால்...
இயற்கையோடுதான் பிறப்பும்
இயற்கையோடுதான் வாழ்வும்
இயற்கையோடுதான் சாவும்
தினமும் சாகிறார்கள்
தினமும் வாழ்வதற்காய்....
இது வெறும் கற்பனை அல்ல.. எங்கள் ஊர் பகுதிகளில் வானத்து மழையை மாத்திரம் நம்பி விவசாயம் செய்யும் மக்களின் வாழ்க்கை....
சும்மா இதையும் கிளிக் பன்னிட்டுப்போங்க,,,, நண்பனின் வலைத்தளம்..
பழம் சாப்பிட ஆசையா
vote pls...
Subscribe to:
Post Comments (Atom)
Rayilin oligal Song lyrics in English and Tamil
Railin Oligal Lyrics in Blue Star Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...
-
சில பாடல்களை ரசிப்பதற்கு அதன் மொழி ஒன்றும் தடையாய் இருப்பதில்லை அதன் இசையும் மெட்டும் பாடகரின் குரலின் இனிமையும் உணர்ச்சிகளுமே அந்தப்பாடலின...
-
நான் காலி பாடல் வரிகள் பாடியவர்கள் : சீன் ரோல்டன் மற்றும் கல்யாணி நாயர் இசை : சீன் ரோல்டன் பாடல் வரிகள் : மோகன் ராஜன் Image source ...
-
வீரா ராஜ வீர பாடல் வரிகள் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து இசை A.R ரஹ்மான் பாடியவர்கள் சித்ரா, ஹரிணி ,ஷங்கர் மகா தேவன் பாடல் வரிகளை...
13 comments:
//இயற்கையோடுதான் பிறப்பும்
இயற்கையோடுதான் வாழ்வும்
இயற்கையோடுதான் சாவும்
தினமும் சாகிறார்கள்
தினமும் வாழ்வதற்காய்....///
மனதை பாதித்த வரிகள்
அருமை
சிறந்த பதிவு
அழகிய கவிதை...
அவ்வ்வ்வ் கவிதை!!!
சூப்பர் கவிதை கடைசி வரிகள் தூள்..
மனதை கொஞ்சம் உலுக்குகிறது...
நல்ல கவிதை...
உண்மைதான் நண்பா...
நானும் வானம் பார்த்த பூமியில் இருந்து வந்தவந்தான்.
நல்ல கவிதை.
சொன்னது, அருமை
மண்மணம் வீசும் கவிதை
அருமை
புலவர் சா இராமாநுசம்
விவசாயிகளின் வாழ்க்கை எப்போதுமே இப்படித்தான். எங்கள் ஊரும் வானம் பார்த்த பூமிதான்.
நல்ல கவிதை!
மக்கள் கஷ்ட்டங்களை கவிதை மூலமாக வெளியாக்கியமைக்கு நன்றி சகோ.
இளைஞர்கள் மத்தியிலும் படிக்கும் மாண்வர்கள் மத்தியிலும் இக்கவிதையினை எத்தி வைத்தால் பலன் கிடைக்கும்.
மிக அருமை
Post a Comment