படிக்கும் காலத்தில் பாடல்கள் கேட்பதும், அதை எழுதி மனனம் செய்து முனுமுனுப்பதிலும் அலாதிப்பிரியம். அவ்வாறு சில பாடல்கள் மனதோடு ஒட்டிவிடுவதுமுண்டு. நான் பாடல்களை அதிகம் ரசிப்பது அதன் வரிகளுக்காகவும் அதில் சொல்லப்படும் விடயங்களுக்காகவும். சில பாடல்களின் வரிகள் புரியாவிட்டாலும் இசைக்காக மட்டுமே கேட்பதுமுண்டு.
அந்த வகையில் பாடசாலை நாட்களில் என்னை வசீகரித்த பாடல்களில் ஒன்று. உள்ளம் கொள்ளை போகுதே திரைப்படத்தில் இடம்பெற்ற "கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா" என்ற பாடல்தான். இதில் இரண்டு பாடல்கள் இருக்கும். முதலாவது SPB,சுஜாதா பாடிய டூயட் பாடல் மற்றையது ஹரிஹரன் பாடிய சோகப்பாடல் இரண்டுமே பிடித்திருந்தாலும் அந்த சோகப்பாடல்தான் என்னை மிகவும் கவர்ந்தது. பாடலை எழுதியது பா.விஜய். இவரின் ஆரம்பகால பாடல்கள் ஒவ்வொன்றும் மிக அழகானவை. அவர் நடிகரானதிலிருந்து நல்லதொரு பாடலாசிரியரை இழந்துவிட்டது தமிழ்சினிமா.
அந்த பாடலின் எல்லா வரிகளுமே அருமையாக எழுதியிருப்பார்..
உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல்
சுற்றுதம்மா இங்கு என் வாழ்வும்..
உண்மையில் நான் ஒரு மெழுகாகும்
சிலர் இருட்டுக்குத்தான் அது ஒளி வீசும்
கடைசி வரை தனியாய் உருகும்..
பிறரின் முகம் காட்டும் கண்ணாடி
அதற்கு முகம் ஒன்றும இல்லை
அந்த கணணாடி நான் தானே
முகமே இல்லை என்னிடம்தான்..
பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்
என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ
இரண்டுமே வெளிவர முடியாதோ...
செடியை பூ பூக்க வைத்தாலும்
வேர்கள் மண்னுக்குள் மறையும்
உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்
உள்ளே சறுகாய் கிடக்குதே....
காதிதத்தில் செய்த பூவுக்கும்
என் மனசுக்கும் ஒற்றுமை இருக்கிறதோ.
இந்த "காகிதத்தில் செய்த பூ" இந்த வரியை வைத்துக்கொண்டு நான் அப்போது கிறுக்கியது.
கண்ணீருமில்லை
கலங்கவுமில்லை.
வாடவுமில்லை
வாசம் வீசவுமில்லை.
நான்
காகிதத்தில் செய்த பூ..
இப்பாடலை ஹரிஹரன் அனுபவித்து பாடியிருப்பார் ஏற்ற இறக்கங்களுடன், கேட்டுப்பாருங்கள்..
அந்த வகையில் பாடசாலை நாட்களில் என்னை வசீகரித்த பாடல்களில் ஒன்று. உள்ளம் கொள்ளை போகுதே திரைப்படத்தில் இடம்பெற்ற "கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா" என்ற பாடல்தான். இதில் இரண்டு பாடல்கள் இருக்கும். முதலாவது SPB,சுஜாதா பாடிய டூயட் பாடல் மற்றையது ஹரிஹரன் பாடிய சோகப்பாடல் இரண்டுமே பிடித்திருந்தாலும் அந்த சோகப்பாடல்தான் என்னை மிகவும் கவர்ந்தது. பாடலை எழுதியது பா.விஜய். இவரின் ஆரம்பகால பாடல்கள் ஒவ்வொன்றும் மிக அழகானவை. அவர் நடிகரானதிலிருந்து நல்லதொரு பாடலாசிரியரை இழந்துவிட்டது தமிழ்சினிமா.
அந்த பாடலின் எல்லா வரிகளுமே அருமையாக எழுதியிருப்பார்..
உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல்
சுற்றுதம்மா இங்கு என் வாழ்வும்..
உண்மையில் நான் ஒரு மெழுகாகும்
சிலர் இருட்டுக்குத்தான் அது ஒளி வீசும்
கடைசி வரை தனியாய் உருகும்..
பிறரின் முகம் காட்டும் கண்ணாடி
அதற்கு முகம் ஒன்றும இல்லை
அந்த கணணாடி நான் தானே
முகமே இல்லை என்னிடம்தான்..
பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்
என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ
இரண்டுமே வெளிவர முடியாதோ...
செடியை பூ பூக்க வைத்தாலும்
வேர்கள் மண்னுக்குள் மறையும்
உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்
உள்ளே சறுகாய் கிடக்குதே....
காதிதத்தில் செய்த பூவுக்கும்
என் மனசுக்கும் ஒற்றுமை இருக்கிறதோ.
இந்த "காகிதத்தில் செய்த பூ" இந்த வரியை வைத்துக்கொண்டு நான் அப்போது கிறுக்கியது.
கண்ணீருமில்லை
கலங்கவுமில்லை.
வாடவுமில்லை
வாசம் வீசவுமில்லை.
நான்
காகிதத்தில் செய்த பூ..
இப்பாடலை ஹரிஹரன் அனுபவித்து பாடியிருப்பார் ஏற்ற இறக்கங்களுடன், கேட்டுப்பாருங்கள்..
ஏனோ அப்போது பிடித்த பிரபுதேவாவை இப்போது பிடிப்பதில்லை..