ஏதாவது மொக்கைய போட்டு நாங்களும் பதிவு போடுவம்ல என்று சமாளிச்சிக்கிட்டிருந்தா.. ஊரைப்பத்தி தொடர்பதிவு எழுதனும்னு கோர்த்துவிட்டுட்டாங்க
சகோ ஆமினா.. ரொம்ப நன்றி ஆமினா என்னையும் ஒரு பதிவரா மதித்து அழைத்ததற்கு சரி விஷயத்துக்கு போவோம்.. எங்க ஊருபபத்தி சொல்லனும்னா பெரிசா ஒன்னுமில்லங்க இருந்தாலும் சிறிசா சொல்றன்,, இப்போது வெளிநாட்டில் இருப்பதால் ஊரின் புகைப்படங்கள் இனைக்க முடியவில்லை..
இஹல புளியன் குளம்..
இதுதாங்க என் கிராமத்தின் பெயர் 100% இது ஒரு கிராமம்தான். இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அநுராதபுர மாவட்டத்தில் கொழும்பு-அநுராதபுரம்/யாழ்ப்பாணம் பிரதான வீதியில் மரதங்கடவள டவுன் இருக்கிறது.
அதிலிருந்து 2 கிலோமீற்றர் சென்றால் இந்த ஊரை அடையலாம்.. இயற்கை காடுகளால் சூழப்பட்டிருக்கும் ஊரின் ஆரம்பத்திலும் இறுதியிலும் இரண்டு குளங்கள் இருக்கின்றன. இங்கே படத்தில் உள்ளது போன்றே இருக்கும் குளத்தோடு ஒற்றி ஒரு மலைத்தொடர்..
எனது உம்மா
வாப்பா இருவரும் பிறந்தது இந்த கிராமத்தில்தான்.. எங்கள் ஊரில் 350 குடும்பங்கள் வசிக்கின்றன்ர் யாவரும் தமிழ் பேசுபவர்கள்தான்.. ஆனாலும்
சுற்றிலும் சிங்கள கிராமங்கள்தான். தொழிலாக விவசாயம், வியாபாரம் போன்றவை பிரதானம். அரச தொழில்கள், அலுவலக வேலைகளில் ஈடுபடுவோர் மிகக்குறைவு. ஆரம்பக்கல்வியை அனைவரும் ஆர்வத்துடன் தொடர்ந்தாலும் உயர்கல்வி கற்பதற்கு வசதி வாய்ப்புகளோ கல்வி நிலையங்களோ இல்லாததால்.. கல்வியில் கொஞ்சம் பின் தங்கியே கானப்படுகின்றது. தற்போது இளைஞர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு அதிகம் இடம்பெயர்கின்றனர்.. அதில் நானும் ஒருவன்.
எங்கள் வீட்டு முற்றத்து பூ மரம் ஒன்று,,,
எங்கள் ஊரைப்பற்றி மேலதிகமாக சொல்லப்போனால்,, வரலாற்று சிறப்புமிக்க
சீகிரிய குண்று 30 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது இலங்கையின் சிங்கள் மண்ணனான காசியப்பன் இந்த மலையிலேயே வாழ்ந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.. ஒரு சிங்கம் படுத்திருப்பது போன்ற வடிவில் அமைந்துள்ள இம்மலையின் உச்சியில் மண்ணன் குளிக்க நீர்த்தடாகம் அமைத்திருக்கிறார்கள் அந்தக்காலத்திலேயே, பெரிய ஆச்சர்யம் இது. கீழே படத்தில் கானலாம்..
மலையின் சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்களும் புகழ்பெற்றவை இது இந்தியாவின் அஜெந்தா ஓவியங்களை ஒத்ததாக கருதப்படுகின்றது....................
இலங்கையில் புகழ்பெற்ற கலாவெவ குளம்.. எங்கள் ஊரிலிருந்து 10 KM தொலைவில் தாதுசேன என்ற சிங்கள மன்னனால் கட்டப்பட்டது 5ம் நூற்றாண்டு காலப்பகுதியில். இதன் குளக்கட்டு அனையின் நீளம் மட்டும் 7 கிலோமீற்றர்கள். சிங்கள மனனர்கள் நாட்டுக்கு என்ன செய்யாவிட்டாலும் எல்லா பகுதிகளிலும் குளங்களை கட்டிச்சென்றுள்ளனர். அதனால் இப்போது ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர்..
கலாவெவ குளத்து வான்.
இவர்களும் எங்கள் சொந்தக்காரர்கள்தான் அவ்வப்போது ஊருக்குள் வந்து நலம் விசாரித்து செல்வார்கள்,,
இதுவே போதுமென்று நினைக்கிறேன் எனது கிராமத்தை பற்றிய அநுபவம். இத்தொடர் பதிவை தொடர அழைப்பது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, கவிப்பேரரசு வைரமுத்து , இசைப்புயல் ரஹ்மான், இவங்களல்லாம் அழைக்கலாம்னு பார்த்தா இவங்களுக்கு பிளாக இல்லையாமே.. அதனாலே அந்த ஐடியாவ கைவிட்டு இவங்கள அழைக்கிறேன்..
அப்பாடா கோர்த்துவிட்டாச்சு,,