கண்களால் அல்லாத கனவுகளே நிஜக்கனவுகள்...

கனவுகள் கண்களின் மாயாஜால விளையாட்டு.. நிறைவேற்றத்துடிக்கும்,நிறைவேற்றமுடியாத மனதின் ஆசைகளின் வெளிப்பாடு.. சில கடந்தகால நிகழ்வுகளின்,உருவங்களின் மனதோடு எஞ்சியிருக்கும் சிறு குறிப்புகளின்,சில குறிப்புகள்! நிகழ்கால விருப்பங்களின்,எண்ணங்களின் சில உதாரணங்கள்... அதுதான் கனவுகளாக காட்சி தருகிறது.

கண்கள் கானும் கனவுகள் எனக்குப்பிடிப்பதேயில்லை.. என் சுதந்திரத்தின் மீது அத்துமீறத்துடிக்கும் உரிமை மீறல் அது.. கனவுகள் இல்லா உறக்கம் வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்! உறங்கச்செல்லும் வேளைகளில்.. என் இறைவன் கருனையாளன், தேவைகளை நிறைவேற்றுபவன், கேட்பவற்றை கொடுப்பவன்.. என் கோரிக்கையும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டிருக்கலாம..உணர்கிறேன்! நான்.. அவ்வப்போது கனவுகள் வந்தாலும், வந்த தடயங்கள் இன்றி மறந்தே போய்விடுகிறது, விழித்தெழும்பும் போது.. எதைக்கண்டேன் என எனக்கே சொல்ல தெரியவில்லை..

முன்னொரு காலத்தில் தூங்காமல் கனவு கண்டவன் நான்.. அதனால் அவஸ்தைகள்தான் அதிகம். கனவுகள் பேராசையின் துன்பியலுக்கு அழைத்துச்செல்லும் பாதை.. இலட்சியம் வேறு,கனவு வேறு.. இலட்சியம் முயற்சியால் முடியும் என நம்புவது.. கனவு முயற்சிக்காமலே முடியும் என நம்புவது.. முயற்சித்தே தோற்றுப்போன பல செயல்கள் இருக்கும் போது, முயற்சிக்காமல் கனவின் பின் அலைவதை நான் விரும்பவில்லை.. முயற்சித்து தோற்றுப்போகிறவன் வீரன்,முயற்சிக்காமலே தோற்றுப்போகிறவன் கோழை.. கடந்த காலங்களில் பல தடவை கோழையாகவே தோற்றுப்போயிருக்கிறேன்.. இனியும் வீரனாகவே வாழவிரும்புகிறேன், தோற்றாலும் வீரனாகத்தோற்றுப்போகிறேன்.. அதில் எந்த அவமானமும் இல்லை.

"ஒரு கனவு கண்டால், அதை தினம் முயன்றால்.. ஒரு நாளில் நிஜமாகும்" இது பா.விஜயின் வரிகள். முயற்சித்தால் கனவுகளும் ஓர் நாள் நிஜமாகும் என்கிறார்.. ஆகலாம், அது கானும் கனவைப்பொருத்தது.. அது வரையறுக்கப்பட்டது. அது நம் முயற்சி எனற ஆழுமைக்கு முடியுமானதாக இருக்கவேண்டும். நம் சூழலுக்கும் சிந்தனைப்பரப்பிற்கும் உட்பட்டதாக இருக்கவேண்டும்.. எல்லா கனவுகளும் அந்த நிபந்தனைகளோடு வருவதில்லை. உலகசினிமா வாசனையெ அறியாதவனுக்கு, ஏஞ்சலினா ஜொலி கனவில் வரும் அபத்தங்களும் உண்டு.. நான் கூட செவ்வாய்க்கிரகம் போவதாய் கனவு கண்டேன், கண்ட கனவை நிஜமாக்க முயற்சித்தால் முடியுமா..? செவ்வாய்க்கிரகம் பற்றி படிக்கலாம்,தெரிந்துகொள்ளலாம்,ஆராயலாம் தப்பில்லை.. கனவை நிஜமாக்க முற்பட்டு செவ்வாய்க்கிரகம் போக தயாராவது அபத்தமில்லையா..?

சிலவேளை இலக்கியங்கள் கூட வெறும் கற்பனைக்கு மட்டுமே உகந்ததாக இருக்கிறது.. எழுவதற்கும் வாசிப்பதற்கும்தான் அதில் சுவாரஷ்யம் இருக்கும். நம் நடைமுறை வாழ்க்கைக்கும் அதற்கும் சம்பந்தமேயிருக்காது.. இன்றைய யதார்த்த உலகிற்கு யதார்த்தமான இலக்கியங்கள்தான் தேவை, அவை படித்தவர்களுக்கு மட்டுமல்லாது பாமரனுக்கும் புரியும் வகையில் இன்றைய நடைமுறை மொழி நடையோடு இருக்கவேண்டும்.. அதுவே ஒரு சமூகத்தை இலக்கியத்தின் பக்கம் நல்ல சிந்தனை, நல்ல ரசனையின் பக்கம் இழுத்துச்செல்லும்.. புரியாத பண்டையகால மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்கள் இலக்கியவாதிகளுக்கு மட்டுமே புரியக்கூடியது.. மற்றையவர்களுக்கு அது அந்நிய மொழியாகவே காட்சியளிக்கிறது.. அதனால் இந்த சமூகத்துக்கு எந்த பயனும் இல்லை.. சில பாடல்கள்,கவிதைகளும் இப்படித்தான்.

கனவில் தொடங்கி எங்கோ செல்கிறேன். மீண்டும் கனவுகளுக்குள் வருகிறேன்.. கனவைப்பற்றி பெரிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் நடத்தியிருக்கிறார்கள். நிறைய புத்தகங்கள் எல்லாம் எழுதியிருக்கிறார்கள்.. கனவுகள் என்பது அவ்வளவு முக்கியமானதா? எனக்கு அப்பிடி தோன்றவில்லை.. காலை முதல் இரவு வரை அயராது உழைக்கும் ஓர் கூலித்தொழிலாளிக்கு அடுத்தநாள் உழைப்பு, களைப்புக்கிடையில் கிடைக்கும் ஓர் ஓய்வு,இடைவேளையே இரவுத்தூக்கம்.. இந்த இடைவெளியில் இந்த கனவு கன்றாவியெல்லாம் எதற்கு..ஆழ்ந்த உறக்கத்தில் வந்து போகும் சில அழகிய கனவுகள் பற்றி ஆட்சேபனையில்லை.. ஆனால் நல்லது நடக்கப்போகுது கெட்டது நடக்கப்போகுது என்ற மூடநம்பிகையை உருவாக்கும் கனவுகள்தான் ஆபத்தானவை..

கனவுகள் கருப்பு வெள்ளையாகவே காட்சிதருவதாகவே சொல்கிறார்கள்... நான் கண்டவரைக்கும் எனக்கு ஞாபகமில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள் இது உண்மையா? இன்றைய கலர்புல் தொழிநுட்பயுகத்தில் கருப்பு வெள்ளை திரைப்படங்களை கூட கான பொறுமையில்லாத நம் நவீன இளைஞ்சர்களை கனவு கானுங்கள் என்று ஐயா அப்துல் கலாம் சொன்னது! அவர்களின் கண்களாலா? அல்லது எண்ணத்திலாலா? கண்களால் காணும் அசாத்தியமான கனவுகளை விடுத்து எண்ணத்தினால் கானும் சாத்தியமான கணவுகளையே கான விரும்புகிறேன் நான்..

சிலருக்கு கனவில் தேவதைகள் எல்லாம் வருகிறார்களாம்! கனவு கருப்பு வெள்ளையாகத்தான வரும் என வைத்துக்கொண்டால். இன்றைய த்ரிஷா,காஜல் எல்லாம் அன்றைய பத்மினி,பானுமதி மாதிரி கருப்புவெள்ளையாகத்தான் வருவார்களா? சும்மா ஒரு சந்தேகம்தான் தேவதை ரசிகர்கள் சொல்லுங்களேன்..

கனவு கானுங்கள் கண்களை மறந்து எண்ணங்களை திறந்து...

5 comments:

Rizi said...

கனவுக்குள்ள இம்புட்டு விசயம் இருக்கா..

//என் இறைவன் கருனையாளன், தேவைகளை நிறைவேற்றுபவன், கேட்பவற்றை கொடுப்பவன்..//

ஹ்ம்ம்ம் சூப்பர்

முத்தரசு said...

ஆகா..

பொடி வச்ச பதிவு

சமுத்ரா said...

கனவு என்பது ஒருவிதமான வடிகால் (நிறைவேறாத ஆசைகளுக்கு)

அம்பலத்தார் said...

என்ன இன்று கனவுககளின் ஆராய்சி

அம்பலத்தார் said...

//கனவு கானுங்கள் கண்களை மறந்து எண்ணங்களை திறந்து...// இது சரி

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...