கல்யாணம் வரைக்கும் அவள் காதலி..சிறுகதை

நானும், அவனும் ஒரு மூனு நாலு வருஷமா நண்பர்கள்...உயிரக்குடுக்குற அளவுக்கெல்லாம் இல்லிங்க, ஒரே ஊரு அப்புறம் ஒரே இடத்துல ரெண்டு பேரும் ஒரு வருடமளவு வேலை செஞ்சிருக்கோம்.. அந்த நட்புதான்..

அவனும், நானும் ஒன்னா கம்பனியொன்றில் வேல செய்யும் போது ஒரு பொண்ன லவ் பண்ணினான் லவ்வுன்னா லவ்வு அப்பிடியொரு லவ்வு.. ராவெல்லாம் கண்முழித்து போன்ல பேசிட்டேயிருப்பான்.. எல்லாரும் தூங்கினாலும் இவன் மட்டும் பெட்சீட்டால் போத்திட்டு பேசுவான்..

கட்டினா இவள மட்டும்தான் கட்டுவேண்பான்.. யாரு குறுக்க வந்தாலும் எங்க காதல விட்டுக்கொடுக்க மாட்டேன்பான்.. நிறைய தமிழ்சினிமா பார்த்து வளர்ந்திருப்பான் போல பயபுள்ள!!! அவனுகிட்ட ஒரு ஸ்பெஷல் தெறம இருக்கு அதாவது எந்த பொண்ணயும் தன் பேச்சாலயே மடக்கிடுவான்.. பேசும் போது எங்கிருந்துதான் வருதோ தெரியல்ல பேசிக்கொண்டேயிருப்பான், ஆனா எது சம்பந்தமா பேசுறான்னு அவனுக்கும் தெரியாது.. கேட்கிறவங்களுக்கும் புரியாது.. ஆனா, பேசிக்கொண்டேயிருப்பாங்க அவங்களுக்கு தேவை இடைவிடாம ஏதாவது பேசனும்.. அப்பிடி பேசுவதும் ஒரு கலைதான்.. நமக்கெல்லாம் அது கைவராத கலை..

நிறைய பொண்ணுங்களும் தன்னோட காதலன் தன்னோட அதிகமாக பேசனும்னுதான் விரும்புறாங்க... அது எதப்பத்தி பேசனும்னு வரையறையெல்லாம் கிடையாது.. எதையாவது பேசனும் அவ்வளவுதான்! நாகரீகமாக எதைப்பேசினாலும் ரசிக்க அவர்கள் தயார்.. சில விடயங்கள் அவர்களுக்கு பிடிக்காததைப்போல் வெளியில் நடித்தாலும்.. அதையும் அழகாக அளவாகச் சொன்னால் அதுவும்..அவர்களுக்கும் பிடிக்கும்!!

எதையும் அவர்களாகவே கேட்க மாட்டார்கள், நாமாகவே புரிந்துகொண்டால்தான் அவர்களுக்கு மகிழ்ச்சி.. பெண்கள் மனதை புரிந்துகொள்ள முடியவில்லை என புலம்பும் ஆண்கள் கோடி.. ஆனால் அவர்கள் மனதின் ஆசைகளை,விருப்பங்களை புரிந்துகொள்ளும் ஆண்களைத்தான் அவர்களுக்கு அதிகம் பிடிக்கிறது.. 'நான் சொல்லாமலே புரிந்துகொண்டானே' என்ற திருப்தி, அவர்களுக்கு கிடைக்கிறது..

நிறைய ஆண்களால் இந்த திருப்தியை அவர்களுக்கு கொடுக்க முடிவதில்லை... அது ஒன்றும் அழ்கடலில் முத்தெடுப்பதைப்போன்ற கடினமான காரியமும் அல்ல!!

இதுலயிருந்து விளங்குற நீதி எண்ணான்னா பொண்ணுங்களுக்கு அவங்க பின்னால சுத்துற.சைட் அடிக்கிற, பார்த்து வழியிற பசங்களவிட தைரியமா,அழகா,ஸ்மாட்டா, தெளிவா பேசுற பசங்களத்தான் அதிகம் பிடிக்குதாம்.. வாழ்க்கையின் சில கேள்விகளுக்கு அனுபவங்கள்தான் பதில் சொல்கிறது! ஆனால் அனுபவங்கள் வந்து சேரும் போது அந்த இடத்திலிருந்து நீண்ட தூரம் நாம் கடந்து வந்திருப்போம்... பொருளியல் அறிஞர்கள் சும்மாவா சொன்னாங்க ஒன்றை இழந்துதான் இன்னொன்றை பெற முடியும் என்று.. அது முழுக்க முழுக்க உண்மையும் கூட..

ஒரு நாள் இரவு ஒரு தமாஷா போச்சு.. இரவு ஒரு மணியிருக்கும் நான் ஒன்னுக்கிருக்கலாம்னு எழுந்திரிச்சா பக்கத்து ரூம்லயிருந்து ஒரு மெல்லிய சவுண்டு வருது பார்த்தா பெட்சீட்டால ஒடம்பு முழுக்க தலையையும் சேர்த்து போர்த்திட்டு இவன் தூங்குறான், உண்ணிப்பா கவனிச்சதுல! அதுக்குள்ளயிருந்துதான் கதைக்கிற சத்தம் வருது.. பயபுள்ள கனவுலதான் பேசுறான்னு பார்த்தா.. தெளிவாத்தான் பேசுறான்.

அந்தபொண்ணு "வேறயாரும் முழுச்சிட்டிருக்காங்களா?"  அப்பிடி... கேட்டிருக்கும் போல, அதுக்கு இவன் சொல்றான் "இப்ப எல்லாரும் தூங்கிட்டாங்க இப்ப நான் மட்டும்தான் முழிச்சிட்டிருக்கேன், எவண்ட தொல்லயும் இல்ல ப்ரீயா பேசலாம்" அப்பிடின்னு..  'ஏய்.. இங்க ஒருத்தன் நானும்தான் முழிச்சிட்டிருக்கேன்' அப்பிடின்னு சொல்லுவோமான்னு பார்த்துட்டு வேணாம்ன்னு விட்டுட்டேன்..
இந்தக்கூத்த விடிஞ்சதும் என் அறையிலுள்ள மற்ற நண்பனிடம் சொன்னேன். அவன் வேலைக்குப்போய் கம்பனி முழுக்க இந்த மேட்டர பத்த வெச்சிட்டான்... இதனால அவனுக்கு போற இடமெல்லாம் "நாங்களும் நைட்டு ஒரு மணிக்கு முழிச்சிட்டிரும்லல" என நக்கல பண்ண தொடங்கிவிட்டார்கள்..

நைட்டு ஒரு மணிக்கு பொண்ணு கூட கடல போட்டத எவன் கேட்டிருப்பான்னு ஓரே குழப்பம் அவனுக்கு.. இதுக்கெல்லாம் காரணம் நாந்தான்னு அவனுக்கு இது வரையிலும் தெரியாது.. அவன் ரூம்ல பக்கத்துல தூங்கினவன் மேலதான் சந்தேகம்..

இப்பிடி ஜாலியா போய்க்கொண்டிருக்கும் போது சில சிக்கல்களால் எங்க கம்பனிய விட்டு விலகி எங்க ஊருக்கு பக்கத்து ஊரிலுள்ள  ஒரு பெரிய மல்லிகை கடையில் வேலைக்கு சேர்ந்துட்டான்.. அந்தக்கடையில் வேலைக்கு சேர்ற பசங்க நீண்டநாள் அங்கயிருந்து வேல பார்த்ததா சரித்திரமில்ல..
அதுக்காக அந்த கடை முதலாளி ஒரு திட்டம் வெச்சிருந்தார்.. அவர்ற கடைக்கு வேலைக்கு வர்ற கல்யாணமாகாத பசங்களுக்கு.. அந்த ஊர்லயே ஒரு பொண்ணப்பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறது.. அதுக்கப்புறம் அந்த ஊர்லயேதான் இருப்பான்.. தன் கடைய விட்டு வேற எங்கும் போக மாட்டான் என்ற எண்ணம் அவர் மனதில்.. அப்பிடி ஒரு சிலருக்கு கல்யாணம் பண்ணியும் வெச்சாரு. ஆனா பாருங்க! கல்யாணமாகி ஒரு சில மாசத்துல் பொண்டாட்டிய கூட்டிகிட்டு சொந்த ஊருக்கு வந்துட்டானுங்க.. அவரு ஐடியாவெல்லாம் தவிடு பொடியாயிட்டு

நம்ம நண்பனும் அங்க வேலைக்கு சேர்ந்துட்டான்.. வேலைக்கு சேர்ந்து மூனு மாசத்துலதான், அந்த துயரச்செய்தி என் காதுகளுக்கு எட்டியது.. என்னடான்னா அவனுக்கு கல்யாணமாம்!

லவ் பண்ணின பொண்ணுகூடன்னு நீங்க நெனச்சா அது தப்பு! அப்புறம் யாரு? இதெல்லாம் அந்த கடை முதலாளியோட ஏற்பாடு.. ஆமாம், இவன நல்லா அவருக்கு புடிச்சிட்டு அதுதான் தன் கடையில நீண்டகாலம் வெச்சிருக்கனும்னு ஆசப்பட்டாரு கல்யாணத்தயும் ஏற்பாடு பண்ணிட்டாரு...
இவனுக்கு எங்க போச்சி புத்தி? இவங்கிட்ட என்னென்னமோ பேசி பொண்ணு பார்க்க சம்மதம் வாங்கிட்டாக.. இவனும் வேண்டா வெறுப்பா பொண்ணு பார்க்க கிளம்பியிருக்கான்..

பொண்ணும் சுமார்தான்... என்ன மந்திரம் பண்ணாகளோ? என்ன மாயம் செய்தாகளோ? தெரியல்ல...! பயபுள்ள பொண்ண பார்த்ததும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்.. அப்புறம் என்ன கண்ணாலம்தான்...
அப்புறம் அந்தக்காதல் என்னாச்சு.. அது கல்யாணம் வரைக்கும்தான்.. கல்யாணம் வரைக்கும் அவள் காதலி.. கல்யாணத்துக்கு பின் இவள் மனைவி..

கல்யாணம் முடித்து கொஞ்ச காலம்தான்.. அவனும் அந்த கடைய விட்டு நின்னுட்டான் முதலாளிக்கு திரும்பவும் ஆப்பு.. இப்ப சொந்தமா தொழில் பண்றானாம்.. ஒரு குழந்தையும் இருக்காம்.. ஏதோ வாழ்க்கை வண்டிய ஓட்டிக்கிட்டிருக்கான்..

முதலாளியின் சுயநலத்தில் ஒரு பொதுநலமும் இருக்கத்தான் செய்கிறது!!
குறிப்பு.. இது சிறுகதையே இல்லன்னு யாரும் அடிக்க வராதீக.. இது சும்மா முயற்சிதான், எப்பிடியிருக்குன்னு சொல்லுங்க.. பிழைகள சுட்டிக்காட்டுங்க..

5 comments:

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் எப்படி சுகம்?

நல்லாத்தான் பண்றாங்கய்யா லவ்வு.......

Riyas said...

வணக்கம் ராஜ்

நான் நலம்.. நீங்க எப்படி நலமா..?

வருகைக்கு நன்றி

'பசி'பரமசிவம் said...

எல்லாரும் தூங்குறாங்கன்னு நம்பி அவன் கடலை போடும் இடத்தை மிகவும் ரசித்தேன்.
பாராட்டுகள்.
ஒரு சிறுகதைக்கான ‘வடிவம்’ போதுமானதாயில்லை. ஆரம்ப நிலைதானே, பரவாயில்லை.
நிறையக் கதை படியுங்கள். வடிவம் சிறக்கும்.

Thava said...

நண்பரே, எப்படி இருக்கீங்க..? கதையெல்லாம் சூப்பராக வருது.எனக்கு ரொம்ப பிடித்திருக்கு.வாழ்த்துக்கள்..மிக்க நன்றி.

சொந்தக்கதை சோகக்கதை : என் மன நினைவில்.ஓரு மரணம்..

Riyas said...

@முனைவர் பரமசிவம்

வாங்க முனைவர் அவர்களே.. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

இது ஒரு சிறு முயற்சிதான்.. உங்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறேன்.

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...