கொலைவெறி கிறுக்கல்கள்!


எவ்வளவு பெரிய
சுயநலக்காரன் நான்
பார்க்கிறேன் ரசிக்கிறேன்
கதைக்கிறேன் சிரிக்கிறேன்
எனக்குள் மட்டும்!

உனக்கே தெரிவதில்லை
உன் ஒவ்வொரு அசைவுகளையும்
உணர்வுகளையும்
திருட்டுத்தனமாக
படம் பிடித்து விடுகிறேன்
விழிகளாலே!

கண்களால் கோர்க்கப்பட்டதை
என் மௌன தேசத்தில்
உலாவரும்
ஊமை உணர்வுகளுக்கு
திரைக்காட்சிகளாக்கி
விடுகிறேன்..!

திருட்டு என்பதும் ஒரு கலை
அதில் கைதேர்ந்தவன் நான்
தடயங்களில்லாமலும்
உனக்கே தெரியாமலும்
என்னவெல்லாமோ திருடியிருக்கிறேன்
உன்னில்!

கனவுகளோடு
வாழ்வதில்லை நான்
நிஜங்களை மட்டுமே ரசிக்கிறேன்..
உன்னையும் ரசிக்கிறேன்
நீயும் நிஜம் என்பதால்!

ரசிப்பவற்றையெல்லம்
சொந்தமாக்கிக்கொள்ள முடிவதில்லை
சொந்தமாக்கி கொள்வதைத்தான்
ரசிக்க முடியும் என்றால்
ரசனைப்பட்டினியால்
என்றோ இறந்திருக்கும்
என் உணர்வுகள்!

உன் உணர்வுகள்
தாக்கப்படாதவரை
தண்டனையுமில்லை
ரசனை தடைச்சட்டங்களுமில்லை
எனக்கெதிராய் பேச!

அங்கே
வருகிறாள் அவள்
நான் கிளம்ப வேண்டும்
நீங்களும் கிளம்புங்கள்..!

4 comments:

Seeni said...

arumai!

sakotharaa...

திண்டுக்கல் தனபாலன் said...

/// கனவுகளோடு
வாழ்வதில்லை நான்
நிஜங்களை மட்டுமே ரசிக்கிறேன்..
உன்னையும் ரசிக்கிறேன்
நீயும் நிஜம் என்பதால்! ///

ரசித்தேன்...

ஆத்மா said...

கனவுகளோடு
வாழ்வதில்லை நான்
நிஜங்களை மட்டுமே ரசிக்கிறேன்..
உன்னையும் ரசிக்கிறேன்
நீயும் நிஜம் என்பதால்!
/////////////////////////////////

நல்ல வரிகள் ரசித்தேன்
தனபால் சாரும் அதனைனே சொல்லியுள்ளார்

indrayavanam.blogspot.com said...

உனக்கே தெரிவதில்லை
உன் ஒவ்வொரு அசைவுகளையும்
உணர்வுகளையும்
திருட்டுத்தனமாக
படம் பிடித்து விடுகிறேன்
விழிகளாலே!

எனக்கு பிடித்த வரிகள்..
நல்ல கலிதை

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...