நமக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள் (1986) மலயாளம்!


காதல் கதைகள் இல்லாமல் இந்திய சினிமா இல்லை என்னுமளவுக்கு இந்தியாவின் பல மொழிகளிலும் நூற்றுக்கணக்கான காதல் சினிமாக்கள் ஒவ்வொரு வருடம் வந்துகொண்டிருக்கின்றன. அவை எல்லாமே நம் மனதுகளில் தங்கிவிடுவதில்லை சிலவற்றைத்தவிர. அவ்வகையில் மிகச்சிறப்பாக நேர்த்தியாக சொல்லப்பட்ட காதல் கதையாக இன்றைக்கும் மலயாள சினிமாவில் கொண்டாடப்படும் படமே பத்மராஜனின் நமக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள். இது "நம்முக்கு கிராமங்களில் சென்னு ராப்பாக்காம்" ((Let us go and dwell in the villages)  என்ற K. K. சுதாகரனின் நாவலை தழுவிய கதையாகும்.

சோலமனாக மோகன்லால் வசதியாகயிருந்தாலும் ஒரு இயல்பான தனக்குப்பிடித்த சாதாரன வாழ்க்கை வாழ விரும்புபவர். வேறு ஒரு ஊரில் பெரியளவில் திராட்சை தோட்டம் வைத்திருக்கிறார் அதுவே அவரின் தொழில். (ஆனால் படத்தில் முந்திரி தோட்டம் என்று சொல்லப்படுவது ஏன் என்று புரியவில்லை) அவ்வப்போதுதான் வீட்டிற்கு வருவார். இரவு வந்து அதிகாலையே சென்றுவிடுவார். பாசத்தை பொழியும் அம்மாவும் இருக்கிறார். 

ஒரு முறை வீட்டிற்கு வரும்போது பக்கத்து வீட்டிற்கு புதிதாக வந்த குடும்பத்திலுள்ள சோபியா (ஷாரி) கண்ணில் படுகிறார். வழமையாக அதிகாலையே புறப்படுபவர் இம்முறை சில நாட்கள் தங்கிச்செல்ல தீர்மானிக்கிறார். மெதுவாக அவரிடம் பேச்சுக்கொடுக்கிறார். அப்படியே அவருக்குள் காதல் மலர்கிறது. காதலை தெரிவிக்கும் இடமும் தெரிவிக்கும் விதமும்தான் இப்படத்தின் ஹைலைட்! பைபிளில் உள்ள வாசகம் ஒன்றின் மூலம் தன் காதலை சோபியாயிடம் தெரிவிக்கிறார். (பைபிளில் உள்ளதாகவே படத்தில் சொல்லப்படுகிறது- விக்கியாபீடியாப்படி The title of the film and novel is based upon a passage from Biblical book of The Song of Solomon or Song of Songs, Chapter 7:12: "ஆனால் அவ்வாறானதொரு வசனமே அந்த புத்தகத்தில் இல்லையென்ற விமர்சனங்களும் உண்டு. ஒரு முறை தன்னுடைய முந்திரி தோப்பிற்கு அழைத்துச்சென்று சுத்திக்காட்டுகிறார்.
இதுதான் அந்த வசனம். 

Varu priyae , namukk graamangaLil chennu raappaarKaam
athikaalaththezhunnaet munthirithoettangaLil poey
munthirivaLLi thaLirththupooviTarukayum
maathaLanaaranga pookkukayum cheythoyennum noekkaam
avidevachchu njan ninakkente prEmam tharum

வா ப்ரியே நமக்கு கிராமங்களுக்கு சென்று காலைப்பொழுதை ரசிக்கலாம் அதிகாலையில் எழுந்து முந்திரி தோட்டங்களில் பூக்கள் பூத்து விரிவதையும் கனிகள் உண்டாவதையும் கானலாம் அங்கே வைத்து எனது காதலை உனக்கு தருவேன். என்ற அர்த்தம் தருவதாகவே அது அமையும் (மிகச்சரியான அர்த்தம் அல்ல)

ஆனால் சோபியாவின் குடும்ப நிலையோ வேறுவிதமானது அவருக்கு தந்தையில்லை அவரின் தாயின் கனவராக திலகன்.(step father) சோபியா வேலைக்கு போவதோ வெளியில் போவதோ அவருக்கு பிடிப்பதில்லை அவரின் அடக்குமுறைகளை அனுபவித்துக்கொண்டும் வீட்டு வேலைகளை தனியாளாக கவனித்துக்கொண்டும் வாழும் கொடுமையான வாழ்க்கை சோபியாவினுடையது. தன்னுடன் வேலை பார்க்கும் ஒருவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் முடித்து வைக்கவும் திட்டமிடுகிறார் திலகன். இவற்றை தட்டிக்கேட்க ஷாரியின் தாயாரால் முடிவதில்லை.

இதற்கு நேர்மாறானது சோலமன் பாத்திரம் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற நினைப்பில் வாழும் ஓர் சுதந்திர இழைஞன். மோகன்லாலின் நடிப்பை பற்றி சொல்லவும் வேண்டுமா.. அசால்ட்டாக பொருந்திப்போகிறார் இயல்பான அவர் உடல்மொழி மூலம். திலகனின் நடிப்பைப்ப்ற்றியும் இங்கே சொல்லியாக வேண்டும் என்னவொரு வில்லத்தனமான நடிப்பு. ஒரு முறை குடித்துவிட்டு அநாகரீகமாக நடக்கும் திலகனுக்கு  சோலமன் அடித்தும் விடுகிறார். அப்பொழுதிலிருந்து இருவருக்கும் பகை உண்டாகிறது.

ஒரு முறை சோபியா வீட்டில் தனிமையில் இருக்கும் போது யாரும் எதிர்பாராத ஓர் சம்பவம் நடைபெறுகிறது அதாவது தான் பெறவில்லையென்றாலும் சிறுவயது முதல் மகளாக நினைத்து வளர்த்த பெண்னையே வன்புணர்வு செய்து விடுகிறார் அப்பா திலகன். மிகவும் அதிர்வலையை ஏற்படுத்தும் காட்சியிது. பின்பு சோலமன்-சோபியா காதல் என்னவானது என்பதே மீதிக்கதை! மிகச்சாதாரன ஒரு காதல் கதையை பத்மராஜனின் மிகத்திறமையான திரைக்கதை மூலம் ஈர்க்க வைக்கிறார். இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகள் வசனங்கள் பற்றி நிறைய சிலாகிக்கலாம். ஜோன்சன் மாஸ்டரின் இசையும் இப்படத்திற்கு இன்னுமொரு பலம்.. அருமையான பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஜேசுதாசின் குரலில் இரு பாடல்கள் அருமை. இங்கே கேட்கலாம்..


தங்க மீன்களும் ஹை கிளாஸ் நாயும்!

வணிக சினிமாவின் சமரசங்களுக்கு உட்படாமல் தனது விருப்பம் போல் திரைப்படங்கள் உருவாக்கும் ராம் என்ற படைப்பாளியை பாராட்ட துணிந்தாலும், அவரின் படைப்புகள் அந்த பாராட்டுக்களுக்கு உரித்தானவைதானா என்ற கேள்வி தங்கமீன்கள் பார்த்து முடிந்ததும் மனதில் தோன்றியது. இவரின் சினிமாக்களை யதார்த்த சமகால சினிமா என்ற வரையறைக்குள் சேர்க்க முடியுமா? லூசுத்தனமான கொள்கை வாதியாக இருப்பதுதான் யதார்த்தமா? கற்றது தமிழிலும் இதே பிரச்சினை! தங்கமீங்கள் பார்த்தபின்பும் உங்களுக்கு என்னதான் பாஸ் பிரச்சினை என்ற கேட்க தோன்றுகிறது. உலக மயமாக்கலை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அவற்றிலிருந்து ஒதுங்கியும் இருக்கவும் முடியாமல் தவிப்பதே இவரின் பிரச்சினை!

பெற்றவர்களுக்கு அவர்கள் பிள்ளைகள் பாசத்துக்குரியவர்கள்தான் அதில் தப்பில்லை. எவ்வளவு வேனும்னாலும் அன்பு காட்டலாம் அவர்களுக்காக உழைக்கலாம், ஆனால் அவற்றுக்கெல்லாம் ஒரு வரையறை கிடையாதா? பாடசாலை பீஸ் கட்டவே காசில்லாதவனுக்கு எதற்கு 25000 ரூபா பெறுமதியான ஹை கிளாஸ் நாய். குழந்தைகள் ஆசைப்பட்டு கேட்கும் அனைத்தையும் வாங்கி கொடுக்கத்தான் முடியுமா இல்லை கட்டாயமாக வாங்கி கொடுக்கத்தான் வேனுமா? புரிகிற விதத்தில் எடுத்துச்சொல்வது பெற்றோர்களின் வேலையல்லவா அவ்வாறு சொன்னால் குழந்தைகளுக்கு புரியாமலா போய்விடும்.. விமான நிலையத்தில் வைத்து தங்கையிடம் நாய் வாங்க காசு கேட்டு வாதிடுவது முட்டாள்தனமில்லையா? தங்கை சொல்வதிலும் நியாயம் இல்லாமல் இல்லையே.விளம்பரம் போடும் போது அதன் பெறுமதியை போட்றானா, இது பணக்காரர்களுக்கு மட்டுமான விளம்பரம் என போட்றானா என்ற வாதமெல்லாம் எடுபடவேயில்லை ராம்.

குழந்தைகளுக்குத்தான் அவை புரிவதில்லை பெற்றவர்களுக்குமா அவர்களுக்கு எது வாங்கிகொடுக்கனும் எதை தம்மால் நுகர முடியும் என புரிவதில்லை! தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல பிள்ளைகளுக்கு அக்கஷ்டம் தெரியக்கூடாது என நினைப்பதெல்லாம் இன்றைய காலத்துக்கு சரிப்பட்டு வராது. குடும்ப கஷ்டமும் வறுமையும் அவர்களுக்கும் புரிய வேண்டும் அவர்களையும் அதற்கு பக்குவப்படுத்த வேண்டும்.. அப்போதுதான் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். சிறுவயது முதலே கஷ்டம், துனபம், வறுமை என்பதெல்லாம் என்னவென்று தெரியாமல் வளர்த்துவிட்டு பிற்காலத்தில் அவர்கள் அதற்கு முகம் கொடுக்க நேரிடும் போது வாழ்க்கையே வெறுத்துப்போய்விடாதா? 

பிள்ளைகளை அவர்கள் இஷ்டத்துக்கு வளர்க்க வேண்டும் பெற்றோரின் ஆசைகளை அவர்கள் மேல் திணிக்க கூடாதென்பதெல்லாம் பேசுவதற்கு கேட்பதற்கும் நல்லாயிருந்தாலும் நடைமுறை வாழ்க்கைக்கு அவை ஒத்து வருவதில்லை. தானாக முடிவெடுக்கும், தான் எதுவாக ஆகவேண்டும் என்ற நிலைக்கு பிள்ளைகள் வந்தபிறகு அவர்களின் முடிவுகளுக்கு மதிப்பளிப்பதில் பிரச்சினையில்லை. ஆனால் குழந்தைகள் என்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலிலேயே வளர்க்கப்படவேண்டியவர்கள். Bashu என்ற ஈரான் படத்தில் வறுமையான குடும்பமொன்றில் தாயுடன் ஒரு 10 வயது சிறுவனும் 5 வயது சிறுமியும் வயலில் வேலை செய்வது போலவும் சந்தைக்கு பொருட்கள் சுமந்து செல்வது போலவும் காட்டிருப்பார்கள் அதுதானே யதார்த்தம். 

கடைசியில் இங்க சுத்தி அங்க சுத்தி தனியார் பாடசாலையில் எதற்கெடுத்தாலும் பீசு புடுங்குகிறார்கள், அரசாங்க பாடசாலையில் சேர்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வரும்போது இதுக்குத்தானா இவ்வளவு அலட்டல் இதை நேரத்தோடயே செய்திருக்கலாம்ல என்றே கேட்க தூண்டுகிறது..ராம் நடிப்பில் ஏதோ ஒரு செய்ற்கைத்தனம். ராமின் மனைவியாக நடித்தவர் நன்றாக நடித்திருக்கிறார்,, செல்லம்மாவின் தோழியாக வரும் அந்தக்குட்டிபெண்ணின் நடிப்பும் வசன உச்சரிப்பும் க்யூட். செல்லம்மாவின் நடிப்பைப்பற்றி சொல்ல தெரியவில்லை. அது மிகை நடிப்பா, இல்லை அந்த பாத்திர தண்மை அதுதானா? ஆனாலும் சில இடங்களில் அப்பாவும் மகளும் எரிச்சல்படுத்துகிறார்கள். படிப்பு விஷயத்தில் மந்தம் என தெரியும் செல்லம்மா ஏனைய விடயங்களில் தெளிவாகத்தானே இருக்கா..  படிப்பில் மந்தபுத்தி உள்ள சிறுவனைப்பற்றிய பேசிய Tare Zameen Per வும் தன் குடும்பத்திற்காய் கஷ்டப்படும் குடும்ப தலைவன் பற்றி பேசிய  ஈரான் படமான The Song of sparrows ஏற்படுத்திய தாக்கத்தில் சிறிதளவேனும் தங்கமீன் கள் ஏற்படுத்தவில்லை.




Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...