மிகப்பிடித்த தமிழ் பாடல்கள் 2013

 2013 யில் வெளிவந்த பாடல்களில் என் தனிப்பட்ட ரசனையில் கவர்ந்த பாடல்களே இது. எந்த தரவரிசை அடிப்படையிலும் இடம்பெறவில்லை மேலும் குத்து,கானா பாடல்களும் இதில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

#ஆனந்த யாழை மீட்டுகிறாள்- தங்கமீன்கள்

படம் அவ்வளவுதூரம் பிடிக்காமல் போனாலும் யுவனின் இசையில் இந்தப்பாடலையும், பாடல் காட்சிகளையும் ரசிக்கலாம். மகளுக்கும் அப்பாவுக்குமான உறவைச்சொல்லும் பாடல் நா.முத்துக்குமாரின் அழகான வரிகளில். ஸ்ரீராம் பார்த்தசாரதி குரலை நீண்டநாட்களுக்குப்பின் பயன்படுத்தியிருக்கிறார் யுவன். (பாடல்கள் எந்த தரவரிசை அடிப்படையிலும் இடம்பெறவில்லை மேலும் குத்து,கானா பாடல்களும் இந்த பத்தினும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

#அழகோ அழகு - சமர்

 யுவனின் இசையில் நரேஷ் பாடிய ஓர் இனிமையான பாடல் பல இளசுகளின் பொதுவாக பெண்பிள்ளைகளின் மனம்கவர்ந்த பாடல். த்ரிஷா, சுனைனாவுக்காக விஷாலை மன்னித்து திரையிலும் பார்க்கலாம். படம் வெளிவர முன்பே முழு வீடியோ பாடலையும் பட பிரமோஷனுக்காக வெளியிட்டிருந்தார்கள். சமர் திரைப்பட பாடல்கள் 2012 யின் இறுதியில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.


#இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாத்தான் என்ன.. மரியான். 

 ரஹ்மானின் இசையில் வெளிவந்த மரியான் படத்தில் பாடல்கள் ஓரளவுக்கு கேட்கும் ரகம் என்றாலும். அவற்றில் இப்பாடல் கவர்ந்தது. சில பாடல்கள் கேட்கும் போது பிடிக்காது ஆனால் படத்தில் பார்க்கும் போது பிடித்துவிடுவதுண்டு. மரியான் பாடல்களும் அப்படியே, பார்வதிக்காகவேண்டியே பார்க்கலாம் அத்தனை அழகான முகபாவனையும் நடிப்பும் அந்த பெண்ணிடம். ரஹ்மான் குரலில் நெஞ்சே எழு மற்றும் சோனாபரியா பாடல்களும் படம்பார்த்தபின் பிடிக்க தொடங்கிவிட்டது.

#பார்க்காத பார்க்காத - வருத்தப்படாத வாலிபர் சங்கம் 

 டி.இமானின் இசையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனும் மொக்கை காமெடி படத்தில் சில பாடல்கள் ஹிட்டாகியிருந்தன. அவற்றில் ஊதா கலரு ரிப்பன் இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலம். ஆனாலும், எனக்கு அதையும் தாண்டி இந்த மெலடி பாடல் மிகக்கவர்ந்தது. விஜய் ஜேசுதாசும் சூபபர் சிங்கர் பூஜாவும் பாடியிருக்கிறார்கள். பூஜாவின் குரல் வித்தியாசமாய் புதிதாய் அழகாய் ஒலிக்கிறது. புதுமுகம் ஸ்ரீதிவ்யாவுக்காக வேண்டியாவது திரையிலும் பார்க்கலாம்.

#யார் இந்த சாலையோரம் - தலைவா 

 ஜீ.வி.பிரகாஷின் இசையில் அவரே மனைவி சைந்தவியோடு சேர்ந்து பாடிய மிக இனிமையான மெலடிப்பாடல். சைந்தவியின் மெல்லிய குரல் எனக்கு மிக பிடிக்கும் அதுவும் ஜீவியின் இசையில் அவர் பாடிய அனைத்து பாடல்களும் அருமை. அதனோடு ஜிவியின் குரலும் இனிமையாகவே இருக்கிறது. முன்பு போல் அல்லாமல் ஜீவியின் பாடல்கள் அவ்வளவு சிறப்பாய் இல்லை


கடல் நான் தான் அலை ஓய்வதேயில்லை... 

வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்ற அனல் மேலே பனித்துளியின் இன்னுமொரு வேர்சன். இது Suzanne D'Mello & சுதா ரகுநாதன் குரலில்தான்,அவர் குரலில்தான் என்னவொரு ஈர்ப்பு. ஹரிசை தவிர வேறு இசையமைப்பாளர்கள் ஏன் இவர் குரலை அதிகம் பயன்படுத்துவதில்லை! ஹரிசின் இசையில் இடம்பெறும் ஒருவித ஏக்கத்தோடு பாடும் பெண்குரல் பாடல்கள் ஹிட்டாகிக்கொண்டே வருவது வழமை. இவ்வாரான பாடல்களுக்கு பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் சுதா ரகுநாதன் குரல்கள் மிகப்பொருத்தம். பாடலை எழுதியர் மறைந்த வாலிப கவிஞர் வாலி என்னவொரு அருமையான வரிகள்.

#இரண்டாம் உலகம் பாடல்கள்

 வின்னைத்தாண்டி அன்பே வந்தாய்..

முன்பு கூறியது போல் இதுவும் ஹரிசின் வழமையான மெட்டுக்களில் ஒன்றுதான் ஆனாலும் ரசிக்கலாம் விஜய் பிரகாசின் குரலில். வரிகள் வைரமுத்து.

மன்னவனே என் மன்னவனே... 

சக்திஸ்ரீ கோபாலன், கோபால் ராவ் பாடிய பாடல் சக்திஸ்ரீயின் குரலில் என்னவொரு இனிமை வாவ். கேட்டுக்கொண்டேயிருக்கலாம். மேலும் இப்படத்தில் இடம்பிடித்த பனங்கல்லா விஷமுல்லா-தனுஷ் பாடல் மற்றும் கனிமொழியே-கார்த்திக் பாடிய பாடக் என் காதல் தீ -எஸ்.பி.பி பாடிய பாடல் எல்லாம் கேட்கும் ரகம்தான்.

#கூட மேல கூட வெச்சி கூடலூரு போறவளே..ரம்மி 

 இமானின் இசையில், வரவிருக்கும் ரம்மி என்ற படத்தில் இடம்பெற்ற ஓர் அழகான மெலடி.. பிரசன்னாவும் வந்தனா ஸ்ரீனிவாசனும் பாடியிருக்கிறார்கள். அண்மையகாலத்தில் அறிமுகமான பாடகிகளில் வந்தனாவின் குரல் மிகப்பிடித்தது. இப்பாடலை கேட்கும் போது இவரின் இன்னொரு பாடலான "ஒரு பாதி கதவு நீயடி" பாடல் ஞாபகத்திற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. அழகான பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் யுகபாரதி.

#என்னடி எனனடி ஓவியமே.. ஜன்னல் ஓரம்.

வித்யாசாகர் நீண்ட நாட்களுக்குப்பின் தமிழில் இசையமைத்த ஜன்னல் ஓரம் படப்பாட்ல்கள் ஓரளவு கேட்கும் ரகம். அதிலும் இந்தப்பாடல் நன்றாகயிருக்கிறது. திப்புவின் குரலை மிக நீண்டநாட்களுக்குப்பின் கேட்க முடிகிறது. மலைப்பிரதேச இயற்கை காட்சிகளை அழகாக படமாக்கியுள்ளார்கள் இப்பாடலுக்க்காக. மனிஷாவுக்காக இப்பாடலை பார்க்கலாம் விமலை பொறுத்துக்கொண்டால்

#அம்மாடி அம்மாடி- தேசிங்குராஜா

கொஞ்சும் குரலழகி ஷ்ரேயா பாடிய பாடல். மொக்கைப்படங்களில் சில முத்தான பாடல்கள் இடம்பெறுவது வழமை. அது போல இந்த தேசிங்குராஜாவிலும் ஒரு நல்ல பாடல் அதுவும் ஷ்ரேயா குரலில். சாதாரண பாடலும் இவரால் பாடப்படும் போது பிடிக்கவே செய்கிறது. விமலின் ரொமான்ஸ் கன்றாவியெல்லாம் ஷ்ரேயா,பிந்து மாதவிக்காக மன்னித்து பாடலை பார்க்கலாம் கேட்கலாம்.

Extra.. யாருக்கும் சொல்லாமல்-ஆல் இன் ஆல் அழகுராஜா

சோஷியல் அப்டேட்ஸ்.02122013

 இன்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) 42 வது தேசிய தினமாகும்.



UAE யின் துபாய் நகரம் 2020 யில் EXPO நடாத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது வாழ்த்துக்கள்.

தொழில் தர்மம் கொண்ட திருடன்.
சீனாவில் ஐபோன் (iPhone) கைத் தொலைபேசி ஒன்றை ஒருவரிடமிருந்து களவாடிய பிக் பாக்கெட் திருடன் ஒருவன், அந்தத் தொலைபேசியிலிருந்த தொடர்பு விபரங்கள் அனைத்தையும் அதன் உரிமையாளருக்கு அனுப்பிவைத்துள்ளான்.
அத்தோடு சேர்த்து தொலைபேசியின் சிம் கார்ட்-ஐயும் உரிமையாளருக்கு அந்தத் திருடன் தபாலில் அனுப்பிவைத்துள்ளான்.
தொலைபேசியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஆட்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட தொடர்பு விபரங்கள் அனைத்தையும் 11 பக்கங்களுக்கு கையால் எழுதி அவன் அனுப்பிவைத்துள்ளான்.
இப்படியான ஒருவன் என் வாழ்விலும் ஒரு முறை சம்பந்தப்பட்டுள்ளான். ஒரு முறை பெட்டாவிலுருந்து பம்பலப்பிட்டி செல்லும் வழியில் எனது பர்ஸ் கானாமல் போய்விட்டது.. அதில் ஆயிரம் ரூபாய் பணம் அடையாள அட்டை ,வங்கி ஏடிஎம் அட்டை, ட்ரைவிங லைசன் இன்னும் சில துண்டுகளும் இருந்தது. இனி அவவளவுதான்! என நினைத்திருந்த சமயம், இரண்டு நாளில் வீட்டு முகவரிக்கு ஒரு தபால் வந்தது. அதில் காசு தவிர மற்ற அனைத்தும் இருந்தது. இப்படியான மனசாட்சியுள்ள திருடன் சீனாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இருக்கிறார்கள். :-)

அபுதாபியின் அண்மைய மழை நாளில் என் மொபைலுக்குள் மாட்டிக்கொண்ட காட்சிகள்.




Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...