மனிதர்களை கொச்சைப்படுத்தாதீர்கள்!

சில வேளைகளில் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்ற வெறுப்பும் கோபமும் ஏற்படுகிறது! மனிதர்களில் ஒவ்வொருவருக்கும் அடிப்படையிலேயே சில குணவியல்புகள் இருக்கும். சிலர் முடிவில்லாமல் வள வள என பேசிக்கொண்டேயிருப்பார்கள். சிலர் அளவோடு தேவையானதை மட்டுமே பேசுவார்கள்.நானெல்லாம் இந்த வகையறாதான்! என் ரசனையோடு பொருந்திப்போகிறவர்களிடம் மணிக்கனக்கில் வேண்டுமானாலும் என்னால் பேச முடியும். அவ்வாறானவர்களின் நட்பையும் சந்திப்பையும் மிக ஆவலாய் எதிர்பார்ப்பேன். ஆனாலும் சிலரின் ரசனையும் நம் ரசனையும் ஒத்தே வராது. அவர்களுடன் தேவையானதை தவிர்த்து வேறு என்ன பேசிவிட முடியும்.

அவ்வாறானவர்களுடன் தொடர்ச்சியாக உரையாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் நிறைய சங்கடங்களும் செயற்கைத்தனமாக நடந்து கொள்ளவேண்டிய நிலையுமே ஏற்படும். தேவையானதை மட்டுமே பேசிவிட்டு மிச்சநேரம் மௌனமாக இருப்போம் என நினைத்தால் அதற்கும் விடமாட்டார்கள் அவர்களுடன் எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டுமாம்! நாம் பேசாமல் இருந்தால் உம்முன்னு இருக்கிறான், ஊமையனாட்டம் இருக்கிறான் என்ற அவப்பெயர் வேறு. ஏனோ அதிகம் பேசாதவர்கள் உலக மகாத்தவறு செய்கிறவர்கள் போலும், இந்த சமூகத்தில் வாழ்வதற்கே தகுதியற்றவர்கள் போலும் பார்ப்பதும் அவர்களைப்பற்றி ஏனையவர்களிடத்தில் குத்தி பேசுவதும். அவர்களின் குணங்களையும் உணர்ச்சிகளையும் கொச்சைப்படுத்துவதையுமே செய்து வருவார்கள். பிறர் செய்யாவிட்டாலும் நம் குடும்பத்தினரே அவ்வாறு செய்யலாம்.

வரையரையில்லாமல் அதிகம் பேசுபவர்கள் நினைப்பெல்லாம் அவர்கள்தான் உலகத்தின் அறிவாளிகள் என! ஆனால் அவர்கள் மணிக்கணக்கில் பேசுவதெல்லாம் தேவையற்ற குப்பைகள்தான். அதில் எந்த பிரயோஜமான விடயங்களோ பயனுள்ள கருத்துக்களோ இருப்பது ரொம்ப அரிது. அதிகமாக பிறரைப்பற்றி புறமே பேசுவார்கள்! அவர்களின் பேச்சில் எந்தவிதமான தொடக்கமோ முடிவோ இருக்காது. ஏதோ வாய் இருக்கிறது பேசுகிறோம் என்பது போலவே இருக்கும். அவ்வாறிருக்க, அவர்களுடன் சேர்ந்து ஜல்லியடிக்காமல் மௌனமாக ஒதுங்கியிருந்து ஓரளவுக்காவது பயனுள்ள விடயங்களை சிந்திப்பவர்களை மட்டும் ஏளனம் செய்வார்கள். அவர்களை பொறுத்தவரை வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகளில்தான் அறிவு தங்கியிருக்கிறது. ஆனால் அதிகம் பேசாதவர்களுக்கு மனசு முழுக்க ஏதாவதொன்றை சிந்திப்பவர்களாகவும் அவர்கள் மௌனங்களும் அறிவின் தேடலாகவே இருக்கலாம்!

இதில் இன்னொரு கொடுமையும் இருக்கிறது அவர்களின் உருப்படாத அனுபவங்களையும்,ரசனைகளையும் நமக்குள் பலவந்தமாக திணிக்க முற்படுவார்கள். அவர்களின் பேச்சைக்கேட்க விரும்பாமல் நமது கவனத்தை வேறு திசையில் திருப்பினாலும் அவர்களே பேசி,அவர்களே ரசித்து, அவர்களே சிரிப்பார்கள் அதற்கு நாமும் புன்னகைப்பதைப்போல் நடிக்க வேண்டும். அப்போதுதான் இந்த சமூகம் நம்மளையும் மனிஷனாக பார்க்குமாம்.இன்னும் சிலர் அறைகுறையாக ஒரு விடயத்தை தெரிந்து கொண்டு முழுதும் தெரிந்தது போல் பீலா விடுவார்கள். அவர்களை பார்க்கும் போதெல்லாம் ஒருவித எரிச்சல் வருவதை தவிர்க்க முடியவில்லை.

ஒருவரின் அடிப்படை கொள்கைகளை அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது முயற்சியின் மூலமும் சில நிகழ்வுகளின் பின்னரும் சிலரின் சில குணங்களை மாற்றலாம் மாறலாம் என்றாலும் முற்று முழுதாக ஒருவரின் கொள்கையை அழித்துவிட்டு புதிய கொள்கையொன்றை பொருத்திவிட முடியாது. அவரின் அடி மனதில் அந்த கொள்கையின் எச்சங்கள் இருக்கவே செய்யும். அதிகம் பேசாதவர் இப்போதெல்லாம் அதிகம் பேசுகிறார் என்பதிலும், அதிகம் பேசுபவர் இப்போதெல்லாம் அதிகம் பேசவே மாட்டார் என்பதிலும் ஏதோவொரு புறக்காரணி தாக்கம் செலுத்தியிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். அவரின் இப்போதைய நடத்தையை செய்ற்கையாக செயற்படுத்துகிறார் மட்டுமன்றி அவரின் கொள்கை அழிந்துவிடவில்லை. அவரிடமே ஒழிந்துகொண்டிருக்கிறது.

"ஒரு மலை நகர்ந்து இன்னொரு இடத்திற்கு சென்றுவிட்டது என்றால் நம்புங்கள் ஆனால் ஒருவரின் அடிப்படை கொள்கை மாறிவிட்டது என்று சொன்னால் நம்பாதீர்கள்" என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாக்கு. இது எவ்வளவு பெரிய உண்மை! இங்கே ஒரு மலை நகர்வது எவ்வளவு முடியாத காரியமோ அதை விட முடியாத காரியம் ஒருவரின் அடிப்படை கொள்கை மாறுவதென்பது. அதுவே, இதன் அர்த்தம்! அப்படியிருக்க நம்ம சமூகம் மட்டும் ஏன் இப்படி இன்னொருவரின் சுதந்திரத்தில் கொள்கையில் தலையிட்டு அவரை கொச்சைப்படுத்துவதில் குறியாய் இருக்கிறது என்பது வருந்தக்கூடியதே. இனியும் அதிகம் பேசாதவர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். மௌனமும் ஒருவகை தியானமே அவர்களின் தியானத்தை கலைத்து உங்களுடன் சேர்ந்து புறம் பேச வைக்காதீர்கள்.

பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே!



ஆயிரம் மலர்களே மலருங்கள் 
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் 
காதல் தேவன் காவியம் 
நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்..

நிறம்மாறாத பூக்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் ஒன்று. சிறிய வயதில் இந்த படம் பார்த்தபோதும் வானொலியில் இந்தப்பாடலை பலமுறை கேட்டிருந்தபோதும் இதன் மேல் அவ்வளவு ஈர்ப்பு வந்ததில்லை.. அப்போது ஜேசுதாசையும் எஸ்பிபியையுமே அதிகம் ரசித்ததால் வேறு பாடகர்களின் பாடல்களை ரசிக்கவிடாமல் செய்திருக்கலாம்! அண்மையில் இளையராஜாவின் நிகழ்ச்சியொன்றில் சைலஜா அவர்கள் இந்தப்பாடலை பாடியதை கேட்டதிலிருந்து இந்தப்பாடலின் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன்.. அன்று முதல் இன்று வரை பலமுறை திரும்ப திரும்ப கேட்டிருக்கிறேன் இந்தப்பாடலை. இளையராஜா மெல்லிய இசையால் மனதை வருடி காற்றிலே மிதக்க வைத்திருப்பார்.. மலேசியா வாசுதேவன், S.P.சைலஜா,ஜென்சி ஆகியோர் இனிமையாகவே பாடியிருப்பார்கள்.

இந்தப்பாடலைப்பற்றி சொல்லிவிட்டு இதன் வரிகளை எழுதியவர் பற்றி சொல்லாவிட்டால் என் ரசனை முழுமையடையாது.. எழுதியர் கவியரசு கண்ணதாசன். எப்படி இவரால் மட்டும் இப்படி முடிகிறது! என பல முறை நான் வியந்ததுண்டு.. இது ஒரு காதல் பாடல் என்ற போதிலும் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு உணர்வை நம் மனதில் ஏற்படுத்தும்.

கோடையில் மழை வரும் வசந்த காலம் மாறலாம்
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ!!

ஒரு காதல் பாடலில் இவ்வாறான வரிகளையும் எண்ணங்களையும் புகுத்தி அதையும் முனுமுனுக்க செய்திருக்கிறார்.. அதுதான் கண்ணதாசன்!

"பூமியில் மேகங்கள் ஓடியாடும் யோகமே
மலையின் மீது ரதி உலாவும் நேரமே"
அடடா!!!


Ramji Roa Speaking (1989) ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்!

1980 காலப்பகுதி கேரளாவில் மிக பயங்கரமான வேலையில்லாத்திண்டாட்டம் இடம்பெற்ற காலப்பகுதியாகும். படித்த/படிக்காத இளைஞர்கள் பலர் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்காகவேண்டியே பல மாற்று வழிகளை தேந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள் மலயாளிகள். இதில் ஒரு வழிதான் வேறு மாநிலங்களுக்கும் வேறு நாடுகளுக்கும் வேலைதேடி படையெடுத்தது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு! இப்போதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் அதிகளவானோர் மலயாளிகள்தான். அண்டைமாநிலமான தமிழ்நாட்டுக்கு கூட இலட்சக்கணக்கான மலயாளிகள் இடம்பெயர்ந்து பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்!

இதை ஏன் சொல்கிறேன் என்றால் அப்படியான வேலையில்லாமல் கஷ்டப்படும் இருவரின் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சம்பவத்தை மிக நகைச்சுவையாகயும் தத்ரூப்மாகவும் சொன்ன படமே இது.முகேஷ் மற்றும் சாய்குமார் இன்னசெண்ட் வீட்டில் வாடகை கொடுக்காமல் வாடகைக்கு தங்கியிருப்பவர்கள்.இன்னசென்ட் நஷ்டமடைந்த நாடக கம்பெனியின் சொந்தக்காரர், முகேஷ் எந்தவித வேலையுமில்லாமல் நோயாளியான தன் தாயிடம் தான் நல்ல வேலையிலிருப்பதாகவும் புது வீடு கட்டுவதாகவும் பொய் சொல்லி காலத்தை கடத்துபவர். சாய்குமார் வேலையிலிருக்கும் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக இறந்து போன தன் தந்தையின் வேலையை பெற்றுக்கொள்வதற்காக வந்த நேரம், அதே நிறுவணத்தில் வேலையிலிருக்கும் போது இறந்து போன இன்னொருவரின் மகளான ரேகாவிற்கு அவ்வேலை கிடைக்கவே அந்த வேலையை கைப்பற்ற போராடுபவர்.

இந்த வேளையே ஒரே பெயரில் இருக்கும் இன்னொருவரின் வீட்டுக்கு வரவேண்டிய தொலைபேசி அழைப்பு இங்கே தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கிறது. அப்போதே அந்த அதிர்ச்சியான அழைப்பு! "நான் ராம்ஜீ ராவ் பேசுகிறேன்..உங்கள் மகளை கடத்தி வைத்திருக்கிறேன் குறித்த தொகை பணம் குறித்த நாளில் தராவிட்டால் மகளை கொன்றுவிடுவேன்" என்ற மிரட்டலுடன் துண்டிக்கப்படுகிறது. மூவரும் அதிர்ந்து போகிறார்கள். பின் அதே ஆள்மாறாட்ட அழைப்பை பயன்படுத்தி தங்களின் பணத்தேவையை பூர்த்தி செய்ய திட்டம் போடுகிறார்கள். இவர்களுக்கு வந்த அழைப்பை போலவே உண்மையான தந்தையை அழைத்து ராம்ஜி ராவ் கேட்ட தொகையைவிட இரண்டு மடங்கு கேட்கிறார்கள்! அப்பணத்தை வாங்கி ராம்ஜி ராவ் கேட்ட தொகையை கொடுத்து குழந்தையை காப்பாற்றி, தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு மிகுதிப்பணத்தை மூவருக்குள்ளும் பகிர்ந்து கொள்வதே திட்டம்!

பின் இந்த ஆள்மாறாட்ட திட்டத்தில் ஏற்படும் குழப்பங்கள்,பிரச்சினைகள்,காமெடி கலாட்டக்கள் கடந்து குழந்தையை எப்படி காப்பாற்றினார்கள் அவர்கள் திட்டம் நிறைவேறியதா அவர்களின் பணத்தேவை பூர்த்தியானதா என்பதை நகைச்சுவையும் துக்கமும் கொஞ்சம் கண்ணீரும் கலந்து சொல்லியிருப்பார்கள். இதில் இன்னசெண்ட் பாத்திரம்தான் மறக்கமுடியாத பாத்திரம்! அவரின் மேனரிசங்களும் வசன உச்சரிப்புகளும் நகைச்சுவையும் என்னை மிகவும் கவர்ந்தது. மலயாள திரையுலகில் தனக்கென்றொரு இடத்தை பிடித்துக்கொண்ட கலைஞன்! முகேஷுக்கு கொடுத்த கடனை திருப்பி வாங்க வரும் ஹம்ச கோயா பாத்திரமும் அவர் கூட்டி வரும் ஆட்களும் இறுதிநேர பரபரப்பில் இன்னுமொரு கலகலப்பு. மலயாள சினிமாவில் வெளியான மிகச்சிறந்த பொழுபோக்கு படங்களில் ஒன்றாக மலயாள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் படம். படத்தின் எழுத்து இயக்கம் சித்திக்-லால். அருமையான திரைக்கதை எந்தயிடத்திலும் கொஞ்சம் கூட தேவையில்லாத காட்சியென்றில்லை.

இதே கதையை கேட்கும் போது தமிழில் வந்த ஒரு படமும் உங்களுக்கு ஞாபகத்துக்கு வரலாம். ஆம் இயக்குனர் பாசில் இதையே தமிழுக்கு ரீமேக் செய்திருந்தார்.அரங்கேற்ற வேளை என்ற பெயருடன். அதே கதை சில வித்தியாசங்களுடன். பிரபு,ரேவதி மற்றும் வி.கே.ராமசாமி ஆகியோர் நடித்திருந்தனர். மலயாளத்தில் வந்த ரேகா-சாய்குமார் நடித்த இரு பாத்திரத்தையும் ரேவதிக்கு கொடுத்து ரேவதி-பிரபு-வி.கே மூவரும் ஓரெ வீட்டில் வசிப்பதை போல் காட்டியிருப்பார்கள். மலயாளத்தில் எந்தவித மசாலாத்தனமோ காதலோ இல்லை மற்றும் கடத்தப்படுவது குழந்தையாக காட்டியிருப்பார்கள். தமிழில் மசாலாத்தனம் வேண்டும் என்பதற்காக பிரபு-ரேவதி காதல் மற்றும் பருவ வயது பெண்னை கடத்துவது போல் காட்டி அப்பெண்னை வில்லனுக்கு முன்னால் குத்தாட்டம் போட வைத்திருப்பார்கள்.! இதுதான் தமிழ் மலயாள சினிமாக்களுக்கு இடையிலான மசாலா வித்தியாசம். இப்படம் ஹிந்தியிலும் ரீமேக்கானது பிரியதர்ஷன் இயக்கத்தில். ராம்ஜிராஹ் ஸ்பீக்கிங் இரண்டாவது பாகமும் வெளியானது மன்னார் மதி ஸ்பீக்கிங் என்ற பெயரில்.

இணையத்திலும் பார்க்கலாம்..

மனம் கவர்ந்த மலயாள சினிமா..3

Chaappa Kurish (2011) சாப்பா குரிஷ்

இனையில்லா இணைய வளர்ச்சியின் ஒரு ரூபமாக தனிப்பட்டவர்களின் அந்தரங்கங்கள் புகைப்படங்களாக,வீடியோக்களாக இணையமெங்கும் கொட்டிக்கிடக்கிறது. இதில் திருட்டுத்தனமாக எடுக்கப்படுபவையும், அவர்களாலே எடுக்கப்பட்டு ஏனையவர்களின் கைகளுக்கு அது கிடைக்க அவர்களால் இணையத்தில் தரவேற்றப்படும் நிகழ்வுகளும் உண்டு! இவ்வாறான தரவேற்றும் கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் அதை பார்த்து பகிர்பவர்களுக்கும் கிடைப்பது ஒரு அற்ப சுகமன்றி வேறில்லை! அதுமாதிரியான அந்தரங்க நிகழ்வுகளோடு சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகளையும், அதை பொதுவெளியில் பகிர்வதால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் விளைவுகளையும் வலிகளையும் யாரும் அக்கணம் சிந்திப்பதேயில்லை!

இதுமாதிரியாக தனிப்பட்ட இருவரின் உறவை மொபைலில் வீடியோவாக பதிந்து வைக்க, பின் அந்த மொபைல் கானாமல் போவதும்! அது ஒருவன் கைக்கு கிடைப்பதும், அதை மீள பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளும், அந்த வீடியோ எங்கே வெளியே வந்திடுமோ என்ற பதற்றமும் சில நாட்களில் இணையத்தில் அது வெளியாவதும் அதன் பின்னரான நடவடிக்கைகளுமாக ஒரு அருமையான த்ரில்லர். ஏழையின் கையில் ஒரு விலைமதிப்புள்ள பொருள் இருக்கும் போது அதனால் அவனுக்கு தன்னம்பிக்கை கிடைக்கிறது என்ற விடயத்தை இந்தக்கதையில் புகுத்திய விதம் அருமை. பஹாத் பாசில் பணக்கார இளம் தொழிலதிபராக, நாகரீக இளைஞராக சிறப்பாக இயல்பாக நடித்திருக்கிறார். ரம்யா நம்பீசன் கவர்ச்சி! வினித் ஸ்ரீனிவாசன் இவரே மிகக்கவர்கிறார் மிகவும் அப்பாவியான முஸ்லிம் இளைஞனாக! தனக்கு கிடைத்த பெறுமதி வாய்ந்த பொபைலை வைத்திருக்கவும் முடியாமல் கொடுக்கவும் மனமில்லாமல் அதனை வைத்தே மனதில் பதிந்திருந்த சிலருடனான வன்மங்களை தீர்த்துக்கொள்வது போன்ற கதையமைப்பு சினிமாவுக்கு புதுசு!!
பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை செய்து கொண்டு வீட்டுக்கும் பணம் அனுப்பி வைத்துவிட்டு,ஏழ்மையின் காரணமாக பரோட்டா சாப்பிட்டே காலம் கடத்துவதை எப்போதும் கடைக்காரர் நக்கல் செய்து "நான் காசு தாரேன் இன்றைக்காவது பிரியாணி வாங்கி சாப்பிடு" என்பதற்கு பல முறை பொறுமையாக ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டு! இறுதிக்காட்சியில், கடைக்காரர் சொல்லும் போது "எனக்கு இன்றைக்கு பிரியாணி சாப்பிட தோனுது அந்த 50 ரூபாய எடு" எனச்சொல்லி காசுவாங்கிட்டு பிரியாணி சாப்பிட செல்லும் காட்சி செம தூள்!!ஒருவனின் ஏழ்மைநிலையை வைத்து கிண்டல் பண்ணக்கூடாது என்பதை முகத்தில் அறைந்தால் போல் சொல்லும் காட்சி அது. எழுத்து இயக்கம் புதியவரான சமீர் தாஹிர். இரு இளைஞர்களை மையப்படுத்தி அழகான காட்சி கோர்வையாக நகர்த்தி இறுதிவரை செம விறுவிறுப்பாக கொடுத்ததற்கு வாழ்த்துக்கள்! ஆனாலும் இப்படம் வணிகரீதியாக வெற்றிபெறவில்லையென்பதாக தகவல்!!

Perumazhakkalam (2004) பெருமழாக்காலம்!

இப்படியான படம் ஒன்றை எடுப்பது கத்தி மேல் நடப்பது போன்ற காரியமாகும். கொஞ்சம் பிசகினாலும் சமூகங்களுக்கிடையில் சர்ச்சையை ஏற்படுத்தி விடக்கூடியது. ஆனாலும் இப்படத்தை மிக தைரியமாக எடுத்திருக்கிறார் மலயாள இயக்குனர் கமல்(எ) கமலுத்தீன் முஹம்மத். இவர் இயக்கிய கிளாசிக் ரக பல படங்களில் இதுவும் ஒன்று.

சவூதிக்கு வேலைக்குச்சென்றிருந்த வேளையில் தவறுதலாக ஏற்பட்ட ஒரு சம்பவத்தால் ஒரு இஸ்லாமியரால் ஒரு இந்து பிராமனர் கொல்லப்படுகிறார். பின் சவூதி நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனை என தீர்ப்பு வழங்க, நாட்டிலிருக்கும் கொலை செய்யப்பட்டவரின் மனைவி மன்னிப்பு வழங்கினால் தண்டனை ரத்தாகலாம் என்ற நிலையில்! பிராமன பெண்னிடம் மன்னிப்பு கடிதம் வாங்கி தன் கனவனின் உயிரைக்காப்பாற்ற துடிக்கும் இஸ்லாமிய பெண்ணின் கண்ணீரும், கெஞ்சலும், அவமானப்படலும் ஒரு புறம். எங்க பிள்ளைய கொன்றவனுக்கு மன்னிப்பே கிடையாது என சொல்லி மன்னிப்பு கடிதம் வழங்கவிடாமல் தடுப்பதும், கேட்டு வந்தவர்களை அவமானப்படுத்துவதும், கனவனை இழந்து தவிக்கும் பெண்னின் கண்ணீரும் உணர்வுப்போராட்டங்களும் இன்னொரு புறம்! இந்தப்படம் மொத்தமுமே உணர்வுப்போராட்டம்தான்.பிராமன பெண்ணாக காவ்யா மாதவன் இஸ்லாமிய பெண்ணாக மீரா ஜாஸ்மீன் நல்ல பாத்திரத்தேர்வுகள். இருவரையும் படம் நெடுகிலும் அழ வைத்தே பார்த்திருக்கிறார் இயக்குனர். தலைப்புற்கேற்ப படம் முழுவதும் பிண்ணனியில் மழை பெய்யும் விதமாக காட்சி அமைத்திருப்பது ரசனையின் உச்சம்!

in youtube

Pulival Kalyanam (2003) புலிவால் கல்யாணம்.

இது ஒரு சாதாரன காதல் படம்தான். காவ்யா மாதவனும் ஜெயசூர்யாவும் நடித்திருப்பார்கள். படம் பூராவும் வரும் அசத்தலான நகைச்சுவைக்காகவேண்டியே பார்க்கலாம். சலீம்குமார், கொச்சின் ஹனீபா, ஹரிசிரிஅசோகன் காமெடியில் கலக்கியிருப்பார்கள்! அதிலும் கல்யாண ரிஷப்சன்   ஆளமாறாட்ட காமெடி விழுந்து விழுந்து சிரிக்க கூடியது. இப்போதும் சோர்வான வேளையில் அக்காமெடி காட்சியை பார்த்து புன்னகைப்பதுண்டு நான்.  "ஆரு பறஞ்சு ஆரு பறஞ்சு" என்ற அழகான பாடலும் உண்டு. இயக்கம் இயக்குனர் ஷாபி. இதேவகை காமெடி கலாட்டக்கள் நிறைந்த இவரின் இன்னொரு படம் கல்யான ராமன்.

Pulival Kalyanam Comedy..Clips

மலயாள சினிமா பாகம் 1
மலயாள சினிமா பாகம் 2

மனம் கவர்ந்த மலயாள சினிமா..2

Adaminte Makan Abu (2011) ஆதாமிண்டே மகன் அபு.

மலயாள சினிமாவின் அழகே யதார்த்தமான மனிதர்களின் முகங்களும் மன்வாசனை மாறாத காட்சியமைப்புகளும்தான்! அந்த வகையில் மலயாள திரையுலகிற்கு கிடைத்த உலகத்தரத்திலான ஒரு படம்தான் ஆதாமிண்டே மகன் அபு.

கேரளவாழ் இஸ்லாமியர்களின் வாழ்க்கையை பல மலயாள சினிமாக்கள் அழகாக காட்சிபடுத்தியிருந்தாலும் இப்படம் அவற்றிக்கெல்லாம் மகுடமாய் திகழ்கிறது. கிராமத்தில் வாழும் அபு,ஆயுசும்மா ஏழை தம்பதிகளின் ஆசை, இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதி கடமையாகிய ஹஜ் யாத்திரை சென்று நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்கள் பிறந்த புனித மக்கா நகரில் கால் வைக்க வேண்டுமென்பது. வசதியற்றவர்கள் ஹஜ் யாத்திரை செல்வது அவசியமில்லையென்ற போதும் சிறுக சிறுக சேமித்து வைப்பதும் இறுதியில் வீட்டுத்தோட்டத்த்ல் உள்ள மரத்தை, வளர்த்த பசுவை விற்று செல்லத்தயாராவதுமாக படம் நகர்கிறது இறுதியில் போனார்களா இல்லையா என்பதை மிக நெகிழ்வாக சொல்லியிருப்பார்கள்! இயக்கம் சலீம் அஹமத் அருமையான இயக்கம் மற்றும் திரைக்கதை இது இவரின் முதல் படம் நம்பவேமுடியவில்லை. இந்த முயற்சிக்காக தேசிய விருதையும் பெற்றுக்கொண்டார். அபுவாக நடித்தவர் மலயாள திரையில் இதுவரை காலமும் சிறு குணச்சித்திர,நகைச்சுவை வேடங்களில் நடித்த சலீம் குமார் அபு என்ற மனிதராகவே வாழ்ந்தார்.அற்புதமான நடிப்பு அதற்காக அவ்வாண்டின் சிறந்த நடிகனுக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது!


Sandesham (1991) சந்தேஷம்.

என்னை மிகவும் கவர்ந்த, மலயாள திரையுலகில் உள்ள மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவரான ஸ்ரீனிவாசனின் திரைக்கதையில் உருவான ஓர் அருமையான படைப்பு.இயக்கம் சத்தியன் அந்திக்காடு இவர்களிருவர் கூட்டனியிலும் வந்த அத்தனை படங்களும் இன்றுவரை மலயாள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவை அத்தனையும் க்ளாசிக் ரகம்!

ஓய்வூ பெற்ற ரயில்வே ஊழியர் திலகனின் மகன்கள் ஜெயராம் மற்றும் ஸ்ரீனிவாசன். இருவரும் படித்துவிட்டு வேலைக்குச்செல்லாமல், பெற்றோரை கவனிக்காமல், இருவேறு அரசியல் கட்சிகளில் இனைந்து அரசியலுக்காக ராப்பகலாக கஷ்டப்படுவர்கள். இதிலே ஸ்ரீனிவாசன் கம்யுனிசக்கட்சி தொண்டனாக நக்கல்,நகைச்சுவையோடு கலக்கியிருப்பார்.இவருக்கு முற்றிலும் எதிர்க்கட்சி தொண்டனாக ஜெயராம் இருவரும் வீட்டுக்குள்ளேயே வாக்குவாதப்பட்டுக்கொள்ளும்,சண்டைபிடிக்கும் காட்சிகள் செம ரகளை! ஸ்ரீனிவாசனின் அநேகமான படங்களில் ஒரு பாத்திரத்தை கம்யுனிசம் சார்ந்து உருவாக்கி அதனால் கேரள மக்கள் வாழ்க்கையில் ஏற்படும் சாதக பாதகங்களை அலசியிருப்பார். இறுதியில் அவர்கள் ராப்பகலாக உழைத்த அரசியல் அவர்களுக்கு உதவியதா குடும்ப வாழ்க்கைக்கு பொருந்தியதா என்பதையும், சமூக வாழ்கைக்கு அரசியல் தேவைதான் அதுவே அளவாக இருக்க வேண்டும் என்பதை அழகாகச்சொன்ன படம். இதிலே இருவரின் அப்பாவாக நடித்த திலகனின் நடிப்பே பிரதானம் மலயாள திரையுலகின் மகா கலைஞன் அவர்! காதலில்லாமல்,டூயட்டில்லாமல்,வில்லன்-சண்டையில்லாமல்,ஆபாசமில்லாமல் விறுவிறுப்பான ஒரு படத்தை எப்படி என்பதை இதுமாதிரியான படங்களைப்பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும் இப்போதுள்ள இயக்குனர்கள்.


Achuvinte Amma (2005) அச்சுவிண்டே அம்மா

இது ஒரு அம்மா-மகள் பாசம்,நேசம்,பிரிவு,கண்ணீர் என நகரும் ஓர் அழகிய கவிதை போன்ற படம். சத்தியன் அந்திக்காடு இயக்கத்தில் ஊர்வசி அம்மாகவும் மீரா ஜாஸ்மின் மகளாகவும் நடித்திருப்பார்கள். இருவரின் நடிப்பும் அபாரம் கூடவே நரேனும் இருக்கிறார்கள். கதையூடே நகரும் மென் நகைச்சுவையும் நம்மை புன்னகைக்கவும் சில இடங்களில் வாய்விட்டு சிரிக்கவும் வைக்கிறது அதிலும் ஊர்வசி ஆங்கிலம் பேசும் நகைச்சுவை செம! இறுதியில் பார்ப்பவர்கள் மனதை கலங்க வைத்து கண்களில் கண்ணீர் கசிய நெகிழ்வோடு முடித்திருக்கிறார்கள். திரைக்கதையை போரடிக்காமல் திருப்பங்களோடு கொண்டு சென்றது அருமை! ஒரு கவிதை போன்ற ஆட்பாட்டமில்லாத ஒரு மனதைத்தொடும் படம் வேண்டும் என சொல்பவர்களுக்கு பிடிக்கலாம்.


தொடர்புடைய பதிவுகள்.

வனயுத்தம்-உண்மைத்தமிழன்-விஷ்வரூபம்-இஸ்லாமியர்கள்!

உலகில் இதுவரை உருவான எந்தவொரு போராட்ட,கிளர்ச்சி,தீவிரவாத குழுவாயினும் அவர்களின் உருவாக்கத்துக்கு பின்னால் ஒரு கதை,பின்புலம்,வலுவான காரணம், கொஞ்சமாவது நியாயம் நிச்சயம் இருக்கவே செய்யும். அவர்கள் தீவிரவாதிகள், போராளிகள் என்ற எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும் சரியே! இவர்களைப்பற்றி கதைக்கும் போதோ, இவர்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தல் காட்சிப்படுத்தல் போன்ற வேலைகளை செய்யும் போது அவர்களின் பக்கமிருக்கும் கொஞ்ச நியாயத்தையும் முன்வைப்பதே நாகரீக அலகு! அவர்கள் எவ்வளவுதான் அயோக்கியர்களாக இருந்தாலும்!



இதுபோலவே விஷ்வரூபம் திரைப்படத்தில் அல்கெய்தா-தலிபான்-ஆப்கான்யுத்தம்-பொதுமக்கள்-அமெரிக்கா ஆக்கிரமிப்பு-சவூதி அரசியல் என்ற பெரிய வட்டத்தை மிகச்சிரிதாக சுருக்கிய கமல்! முழுக்க முழுக்க அமெரிக்கா சார்பாகவும், ஆப்கானியர்களை போர்வெறி பிடித்தவர்களாகவும், ஏனோ தலிபான்கள் பொழுது போக்கிற்காக தீவிரவாதம் செய்வதைப்போல் காட்சிபடுத்தியிருந்ததைக்கண்டு பல இஸ்லாமியர்கள் தங்களின் வெறுப்பை வெளிக்காட்டினார்கள்..! இதை சரிவர புரிந்துகொள்ளாத மாற்றுமத சகோதரர்களில் சிலர், நடப்பதைத்தானே காட்டுகிறார்! ஏன் இவர்கள் எதிர்க்கிறார்கள்! அப்படியென்றால் இவர்கள் அல்கெய்தா தாலிபான்களை ஆதரிக்கிறார்களா என கேள்விகள் தொடுத்தார்கள்.. அல்கெய்தாவின் உலகம் தழுவிய தீவிரவாதம்,தாலிபான்களின் அடக்குமுறை, பெண்கள் மீதான அவர்கள் கட்டுப்பாடுகள் போன்றவை விமர்சிக்கப்படவேண்டியவைதான். அதற்காக கண்னை மூடிக்கொண்டு அவர்கள் மட்டும்தான் கொடூரமானவர்கள் என தீர்ப்பெழுதிட முடியாது. அவர்கள் பக்க நியாயங்களும் விமர்சிக்கப்படவேண்டும்! கொலைக்குற்றவாளிக்கு கூட அவன்பக்க நியாயத்தை சொல்வதற்கு உரிமை இருக்கிறது என நினைக்கிறேன்.

இப்படியான நேரத்திலேயே வீரப்பனின் கதையை தழுவியதாய் வனயுத்தம் என்ற திரைப்படம் வெளியாகிருக்கிறது. இது முழுக்க முழுக்க அரசுக்கு சார்பாகவும் வீரப்பன் கொலைகாரன், கொடுங்கோலன் போலவும். அவர் பக்கமுள்ள நியாயங்களோ அவர் செய்த கொலைகளுக்கான காரணங்களோ விளக்கப்படவில்லையென்றும், மலைவாழ் பெண்கள் மீதான வன்புணர்வு மற்றும் அம்மக்கள் மீது நடாத்தப்பட்ட அராஜக தாக்குதல்களுக்கு காரணமான தமிழ்நாட்டு/கர்நாடகா போலிசாரை உத்தமர்களாக காட்டியிருப்பதாகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் முக்கியமானது உண்மைத்தமிழன் அவர்களின் விமர்சனம்  அதிலிருந்து சில கருத்துக்களை இங்கே பகிர்கிறேன். இதிலிருந்து சிலரின் இரட்டை முகமும் இஸ்லாமியர்களின் விஷ்வரூப எதிர்ப்பின் சில நியாயங்களும் புரியலாம்! புரிந்துகொல்ளும் மனநிலையில் இருப்பவர்களுக்கு. சிவப்பு நிறத்தில் உள்ளவை உண்மைத்தமிழன் எழுத்துக்கள்!


வாழ்க்கைக் கதையைச் சொல்ல வந்தவர்கள், எதனால் வீரப்பன் வேட்டையை விரும்பினான்.. எதனால் அரசு அதிகாரிகளை அவமதித்தான்.. வெறுத்தான் என்பதையெல்லாம் துளிகூட சொல்லாமல், அவர் வசதிக்காக வீரப்பனை கொடுங்கோலன் என்றும், அவனை அழிக்க வந்த போலீஸாரை ஏதோ யோக்கிய புருஷர்களாகவும் காட்டியிருக்கும் இப்படத்தை என்னால் எந்தக் கோணத்திலும் அணுக முடியவில்லை..!

அதேதானே நாங்களும் சொன்னோம் தாலிபான்களையும் அல்கெய்தாவினரையும் அவர்கள் பக்க நியாயங்களை காட்டாமல் அயோக்கியர்களாக காட்டி அமெரிக்காவை யோக்கிய புருஷர்களாக காட்டியிருக்கும் அப்படத்தையும் எங்களால் எந்த கோணத்திலும் அணுக முடியாது!




நான் வீரப்பனுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் நடந்த கதையை சொல்லும்போது 90 சதவிகிதமாவது உண்மையிருக்க வேண்டாமா..? வீரப்பன் வேட்டை என்ற பெயரில் மலைவாழ் மக்களை பிடித்து மாதேஸ்வரன் மலைப்பகுதியில் ஒர்க்ஷாப் என்னும் கொட்டகையில் அடைத்து வைத்து.. ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் யூத மக்களுக்கு நேர்ந்த கொடுமையைப் போலவும், சிங்களப் படைகள் தமிழர்களுக்கு எதிராக செய்ததையும் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக இரு மாநில கூட்டு போலீஸ் படைகள் செய்திருப்பதாக ரெங்கநாத்மிஸ்ரா கமிஷன், சதாசிவம் கமிஷன் இரண்டுமே சொல்லியிருந்தும், இதனை படத்தில் குறிப்பிடவே இல்லை..! காட்டவும் இல்லை..!


நாங்களும் தாலிபான்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை ஆனால் நடந்த ஒன்றை நடக்கின்ற ஒன்றை சொல்லும் போது கொஞ்சமாவது நேர்மை வேண்டாமா? பின்லேடன் என்ற தனிமனிதனையும் அவன் சகாக்களையும் பிடிப்பதற்காக ஒரு தேசத்தையே சவக்காடாகவும் யுத்த பூமியாகவும் மாற்றிய அமெரிக்க ரானுவத்தின் அட்டூழியங்களை கொஞ்சமாவது காட்ட வேண்டாமா


இத்தனை கொடுமைகளையும் செய்துவிட்டு அவர்கள் மீது தடா வழக்கிலும் கைது செய்து சிறையிலும் அடைத்தார்கள் நமது மாண்புமிகு அரசியல், அதிகார வர்க்கம்.. சுமார் 150-க்கும் மேற்பட்டோர் தடா கைதிகளாக்கப்பட்டு பின்பு இவர்களில் அதிகம்பேர் எட்டாண்டுகள் கழித்தே விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்..!

அவர்களாவது எட்டாண்டுகள் கழித்து விடுவிக்கப்பட்டனர்..  ஆனால் இன்னும் யுத்தக்கைதிகளாக குவாந்த நாமோ சிறையில் இருட்டறைகளில் அடைபட்டுக்கிடக்கும் ஆப்கான் மக்களின் நிலை என்ன இதற்கு அமெரிக்க அரசிடம் உள்ள பதில்தான் என்ன? 




ஒரு சினிமாவை சினிமாவாக பார்க்க இதுவொன்றும் சாதா சினிமா இல்லை.. ஸ்பெஷல்.. இந்தியாவில் யாருமே செய்ய முடியாத ஒரு ஆவணப் படத்தை தான் உருவாக்கியிருப்பதாக இயக்குநர் ரமேஷ் மீடியாக்களில் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால்தான் சினிமாவையும் தாண்டி விமர்சனம் செய்ய வேண்டியுள்ளது..! 

சபாஷ்!  சினிமாவ சினிமாவத்தான் பார்க்கனும்னு பலர் பேர் சொன்னாக.. இதையும் சினிமாவா பார்த்துட்டு போகவேண்டியதுதானே! ஏன் முடியாது? காரணம் இது சாதா சினிமா அல்ல! இதே கருமத்தத்தான் நாங்களும் சொன்னோம் அப்போவெல்லாம் எங்கள் உணர்வுகளை கொச்சைப்படுத்தியதேனோ.. அதுவும் சாதாரன சினிமா அல்ல ஒரு தேசத்து மக்களின் போராட்டம் சம்பந்தமானது. அங்கு நடந்ததைதானே சொல்கிறோம் எனும் கதை வேறு அதனால்தான் சினிமாவையும் தாண்டி விமர்சனம் செய்ய வேண்டியுள்ளது!




அப்பாவி மலைவாழ் மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிய இரு மாநில கூட்டு அதிரடிப் படையினருடன் கூடவே இப்போது இந்த இயக்குநர் ரமேஷும் ஒரு குற்றவாளியாகிவிட்டார்

இதை இப்படியும் சொல்லலாம்!!
ஆப்கான் மக்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கிய அமெரிக்க நேட்டோ கூட்டு அதிரடிப்படையினருடன் கூடவே இப்போது இயக்குனர் கமலஹாசனும் ஒரு குற்றவாளியாகிவிட்டார்!



மனம் கவைந்த மலயாள சினிமா..1

மத்திய கிழக்கு வேலைக்கு வந்தபிறகே மலயாள மொழி பற்றிய புரிதலும் அம்மொழிசார்ந்த படங்களை பார்க்கும் ஆர்வமும் மேலோங்கியது. எத்தனை அருமையான சினிமாக்களை படைத்திருக்கிறார்கள். நல்ல சினிமாக்களை தேடிப்பார்க்கும் என் பசிக்கு நல்ல விருந்தாகின அவைகள்! யதார்த்தமான சூழலில் உருவான கதைகள்,ஹீரோயிசம் காட்டாத நிஜமான நாயகன் மற்றும் மனிதர்கள், கிராமியச்சூழல் இதுவே என்னை பெரிதும் ஈர்த்தது மலயாள திரைப்பக்கம்! அன்றிலிருந்து நான் இதுவரை பார்த்ததில் என்னை மிக கவர்ந்த பல மலயாளப்படங்களை சிறு குறிப்புடன் தொடர்ந்து பகிர நினைக்கிறேன் அதன் முதல் பாகமே இது.  என் மனதில் என்றைக்கும் மறவாமல் இருக்கும் திரைப்படங்களை இங்கு பதிந்து வைக்கும் முயற்சியே இது. விரும்பாதவர்கள் இத்துடன் தவிர்ந்துகொள்ளலாம்.!

Samantharangal (1998) சமாந்தரங்கள்.


இந்திய சினிமாவில் இஸ்லாமியர்களை நல்லவர்களாகவே காட்ட மாட்டார்களா என அங்கலாய்ப்போர் பார்த்து ஆசுவாசப்படவேண்டிய படம் முழுக்க இஸ்லாமிய கதாபாத்திரங்களைக்கொண்ட படம். கேரளாவில் வாழ்ம் ஒரு ஏழை இஸ்லாமிய குடும்பத்தின் கதை எனவும் சொல்லலாம்.! இஸ்மாயில் என்ற மிகநேர்மையான ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரைச்சுற்றியும் அவரது பிள்ளைகள், ஏழ்மையான குடும்பம், உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்சினைகள், இழப்புகள், பொருளாதார பிரச்சினைகள என ஒரு குடும்பத்தை சுற்றி நடக்கும் கதையாகவே காட்டியுள்ள மிக அற்புதமான யதார்த்த மலயாள சினிமா. எந்தயிடத்திலும் மசாலா சினிமாவின் சின்னத்தனங்கள் கிடையாது. உலகம் போற்றுகின்ற ஈரான் சினிமாக்களோடு வேண்டுமானாலும் இதை ஒப்பிடலாம்.
போகிற போக்கில் ஒரு சிலரின் சுயலாபத்திற்காக கம்யூனிசத்தை பயன்படுத்தி ஆர்ப்பாட்டம்,கடையடைப்பு,இளைஞர்கள் மனதைக்கெடுத்தல் போன்ற விடயங்களில் ஈடுபடுவோரின் முகத்திரையும் கிழிக்கப்பட்டுள்ளது. இயக்கம்.தயாரிப்பு பாலச்சந்திரமேனன். நடிப்பும் அவரே இஸ்மாயில் என்ற மனிதராகவே வாழ்ந்திருப்பார். அதற்கான பரிசாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. மேலும் சிறந்த சமூக குடும்ப படத்துக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.

யூடுப்ல கான சமாந்தரங்கள்.

Chinthavishtayaya Shyamala (1998) சிந்தவிஷ்டயாய ஷ்யாமளா

போதையானாலும் ஆன்மீகமானாலும் அளவுகடந்து போவது குடும்ப/சமூக  வாழ்க்கைக்கு தீங்கானது என்ற கதையைக்கொண்ட மிக அருமையான திரைப்படமாகும். இரன்று பிள்ளைகள் இருக்கத்தக்க வேலைக்குச்செல்லாமல் பொறுப்பில்லாமல் குடித்துவிட்டு திரியும் ஒருவரை, குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக ஆன்மீக பயணம் ஒன்றுக்கு அனுப்ப அதன் பிறகு முழுநேரமும் ஆன்மீகவாதியாய் மாறி இறுதியில் வீட்டைவிட்டே வெளியேறி மடத்தில் தங்கி விடும் நிலைக்கே வந்துவிடுகிறார்.. இதன்பின் தன்னிலை அறிந்து எப்படி திருந்துகிறார் என்பதை மிக அருமையாக நகைச்சுவை கலந்து சொன்ன படமிது. திரைக்கதை இயக்கம் நடிப்பு ஸ்ரீனிவாசன்.  இவரின் திரைக்கதையமைப்பிதில் பல அருமையான திரைப்படங்களை மலயாள திரையுலகிற்கு கொடுத்தவர். அப்பாவாக திலகனும் மனைவியாக சங்கீதாவும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். இப்படம் பல விருதுகளையும் பெற்றுக்கொண்டது.1998 ம் ஆண்டிற்கான தேசிய விருது உட்பட!

யூடுப்பில் கானலாம்..

Melparambil aanveedu (1993) மேல்பரம்பில் ஆண்வீடு



இது ஒரு குடும்ப காமெடி கலாட்டா நகைச்சுவை படம் ஜெயராம் வேலைக்காக வேண்டி தமிழ்நாட்டுக்கு வந்து அங்கே தமிழ்பெண்ணான சோபனாவை காதலித்து கல்யாணம் முடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறார். பிறகு சோபனாவை மனைவியாக வீட்டுக்கு கூட்டிச்சென்றால் பிரச்சினையாகிவிடும் என்ற காரணத்தால் கொஞ்சநாளில் சமாளித்து விடலாம் என்று கூறி தற்காலிகமாக வேலைக்காரியாக அழைத்துசெல்கிறார். ஜெயராமின் இரு சகோதரர்களுக்கும் ஏற்கனவே கல்யாணமாகாததால் சோபனாவை அவர்களிருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் கலாட்டக்கள் அதகளம் சகோதரர்களில் ஒருவராக ஜகதி. பின்பு ஒரு நெகிழ்வான சம்பவத்துடன் முடியும் ஒரு பீல் குட் திரைப்படம் இது. ஜெயராமின் அம்மா புட்டுச்சுட வைத்திருந்த மாவை எடுத்து வீட்டு முற்றத்தில் சோபனா கோலம் போடும் காட்சி மிக அருமையான நகைச்சுவை. இயக்கம் ராஜசேனன். மலயாள மொழி தெரிந்தால் நல்ல பொழுது போக்கு நிச்சயம்.

 யூடுப்பில் கானலாம்

நிலாவே நிலாவே நீ மயங்கல்லே..!


ஷ்ரேயா கோஷல் குரலால் மயக்கும் இசை தேவதை - இந்தியாவின் அனைத்து மொழி பாடல்களையும் தன் தாய்மொழி போல் அனுபவித்து உணர்ந்து பாடும் விதமே அழகு.. அதற்கு இந்த மலயாள மொழி பாடலும் சின்ன உதாரணம்!





நிலாவே நிலாவே
நீ மயங்கல்லே
கினாவின் கினாவா
நீ தலோடில்லே
ப்ரணய ரா மழயில்
ஈ பவிழ மல்லிகதன்
நிற மிழிகள் தழுகும்

வெண்ணிலாவே நிலாவே
நீ மயங்கல்லே
கினாவின் கினாவா
நீ தலோடில்லே

மாமரங்கள் பீலி நீர்தி
காற்றிலாடும்போல்
மாரிமேகம் யாதர சொல்லதெங்கு போகுன்னு
தாரகங்கள் தானிறங்கி
தாளமேந்தும்போல்
பாதிராவின் தூவலறியாதூர்னு வீழுன்னு

மெழுகுநாளமெறிஞ்சபோல்
ஹிருதய ராக மொழிஞ்சுபோய்
தளிரிதலிடும் விரலினல்
தனு தழுகியனயு..

வெண்ணிலாவே..

பாலுபோல் பதஞ்சுபொங்கிய
ப்ராணபல்லவியில்
பாதி பெய்யும்
நேரமெந்தே தோர்னு போகுன்னு
தானேயானென்னோர்து தெல்லும் அல்லேறும்போ
அல்லியாம்பல் குஞ்சு பூவின் நெஞ்சு நோவுன்னு

விரஹ வேனல் திரகலால்
பதறுமீரன் ஸ்மிரிதிகளில்
புது நினவுமாயே உணருவான்
இனி அருகில் அனயு..

நிலாவே நிலாவே

தன்மாத்ரா மலயாளப்படமும் அல்சைமர் நோயும்!

சாதாரன மறதி என்பது எல்லோருக்கும் சகஜமானது அது படித்தவன்,பாமரன் என்ற எந்த வேறு பாடுகளுமின்றி யாவருக்கும் ஏற்படக்கூடியது.ஆனால் மறதியே வாழ்க்கையை அழிக்கும் நோயானால்!

ஆமாம், நல்லா படித்த, நல்ல வேலையில், உடல் ஆரோக்கியத்தோடு அன்றாடம் சுறுசுறுப்பாக பொறுப்பாக இருக்கும் ஒருவர் திடிரென அவரையறியாமலே மறதியாக ஒரு அலுவலக பைலை வைத்த இடம் தெரியாமல் வீடு முழுக்க தேடுகிறார். வீட்டாரையும் திட்டுகிறார், வீட்டாரோ மறதியாக எங்காவது வைத்திருப்பீர்கள். பொறுமையாக தேடுங்கள் என்கிறார்கள். இவரோ தன்னுடைய ஞாபக சக்தியில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர், நான் அவ்வளவு இலகுவாக ஒரு விடயத்தை மறக்க மாட்டேன் என்கிறார்.பின்பு அலுவலக பைல் பிரிஜ்ஜிக்குள் இருந்து எடுக்கப்படுகிறது.

பின்னொரு நாள் அலுவலகம் சென்று திரும்பி வரும்போது வாங்கவேண்டிய காய்கறிகளை காலையிலேயே வாங்கிவிட்டு, ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளையும் அங்கேயே விட்டுவிட்டு ஆட்டோவில் அலுவலகம் செல்கிறார். அங்கே சென்று மாலை வீட்டிற்கு வந்த செய்ய வேண்டிய காரியங்களான சட்டையை கழற்றி வைத்துவிட்டு வாஷ்ரும் சென்று குளிக்கிறார்.! அலுவலகத்தில் உள்ளவர்களுக்கோ மிகப்பெரிய ஆச்சர்யம் என்னாயிற்று இந்த மனுஷனுக்கு? என,பின் மறதிகள் தொடர்கிறது அலுவலகம் செல்லும் வழியையையும் மறந்துவிடுகிறார்.இறுதியாக பிள்ளைகள்,மனைவி உறவினர்கள் எல்லோரையும் மறந்துவிடுகிறார். அப்படியே பேச்சும் நின்றுவிடுகிறது ஒரு குழந்தை போலவே மாறிவிடுகிறார்..!

என்ன கொடுமை இது எங்கிறீர்களா? ஆமாம் கொடுமைதான் இந்த நோயின் பெயர்தான் அல்சைமர்.!நான் மேலே சொன்னது 2005 யில் வெளியான மலயாள திரைப்படமான தன்மாத்ராவின் கதை.

இந்தப்படத்தை பார்த்துதான் இந்த நோயைப்பற்றியும் நோயின் தீவிரம் பற்றியும் அறிந்துகொண்டேன். படம் பார்க்கும் போது இப்படியும் நிகழுமா என பல அதிர்ச்சிகள். சமகால தமிழ்சினிமாவுலகம் மசாலா குப்பைகளில் உழன்று கொண்டிருக்கும் அதேநேரம் மலயாளிகள் இதுபோன்ற அற்புதமான சினிமாக்களையும் படைக்கிறார்கள். இந்த நோயைப்பற்றிய ஒரு ஆவணப்படுத்தல் போலவே இந்த திரைப்படம் அமைந்திருந்தது. ஆனாலும் எந்தயிடத்திலும் தொய்வடையாத திரைக்கதை. இப்படத்தில் மிக ஆழமாக சொல்லப்பட்ட இன்னுமொரு விடயம் தந்தை-மகன் உறவு. படத்தின் முதல் பாதி முழுக்க அதைப்பற்றியதுதான்.

இயக்கம் பிளெஸ்ஸி இவரின் பிரணயம் படம்தான் முதலில் பார்த்தது. அதன் பாதிப்பிலேயே அவரின் ஏனைய படங்களையும் தேடிப்பார்க்க வேண்டுமென்ற ஆவலில் பார்த்ததே இது. அல்சைமர் நோயாளியாக மோகன்லால். என்ன ஒரு கலைஞன் இவர். "லாலேட்டன்" என மலயாளிகள் பெருமை பேசுவதில் ஒரு தவறும் இல்லை. நேற்று முளைத்த சுள்ளான்களையே மாஸ் ஹீரோ என நாம் புகழும் போது. இப்படியான கலைஞர்களை கொண்டாடலாம் தப்பில்லை. புகழின் உச்சியில் இருக்கும் சூப்பர் ஸ்டார்கள் எடுக்க தயங்கும் பாத்திரம். மோகன்லால் அல்சைமர் நோயாளியாகவே வாழ்ந்திருக்கிறார். அருமையான நடிப்பு! இவரின் மனைவியாக நடித்த மீரா வாசுதேவன்,தந்தையாக நடித்த நெடுமுடி வேணு, மகனாக,மகளாக நடித்த எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். முடிந்தால் பாருங்கள்!

தன்மாத்ரா படம் -கீதப்பிரியனின் விளக்கமான விமர்சனம்

அல்சைமர் நோய் பற்றி இணையத்தில் படித்தது.

மறதி என்ற ஒன்று மட்டும் இல்லையெனில், மனித வாழ்க்கையே நரகமாகிவிடும். அவமானம், சோகம், இழப்பு, வருத்தம் போன்ற துயரங்களை, அவ்வப்போது மறந்து விடுவதால் தான், நம்மால் இயல்பாக வாழ முடிகிறது.அதே சமயம்,எல்லாவற்றையும் மறந்து விட்டாலும், வாழ்க்கை நரகமாகிவிடும். மனைவி, மக்களின் பெயரை மறக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால், அதைவிட கொடுமை என்ன இருக்க முடியும். அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய், அப்படிப்பட்ட கொடுமையான நோய் தான். சாப்பிட்ட 10 நிமிடம் கழித்து, என்ன சாப்பிட்டோம் என சொல்ல முடியாத பரிதாப நிலை ஏற்படும். மிக மோசமான ஞாபக மறதி நோயே, அல்சைமர் என அழைக்கப்படுகிறது. ஜெர்மன் விஞ்ஞானி அலோஸ் அல்சைமர் இந்த நோயை கண்டுபிடித்ததால், அவரது பெயரால் அல்சைமர் என அழைக்கப்படுகிறது.

அல்சைமர் நோய் பாதிப்பு எந்த வயதில் ஏற்படும்?

பொதுவாக, அல்சைமர் நோய் 60 வயதுக்கு மேற்பட்டவர்களையே பாதிக்கும். ஆனால், மிக அரிதாக 30 வயதிலும் வரலாம். பாரம்பரியத்தில் தாத்தா, தந்தை, சகோதரருக்கு அல்சைமர் இருந்தால், குடும்பத்திலுள்ள இளம் வயதினருக்கும் நோய் வர வாய்ப்புண்டு. ஆண்களை விட, பெண்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம்.இந்தியாவில் சராசரி ஆயுள் அதிகரித்து வருவதால், 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு உள்ள பாதிப்புகள் குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லை.


அல்சைமர் பாதிப்பு ஏற்பட காரணம் என்ன?

மூளையின் பக்கவாட்டு பகுதி, பாதிக்கப்படுவதால் டிமென்ஷியா எனும் ஞாபக மறதி நோய் வருகிறது. டிமென்ஷியா நோயில் அல்சைமர் ஒரு வகை. அல்சைமர் மறதி நோய் வருவதற்கு, மரபணு குறைபாடு முக்கிய காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபணு குறைபாடு காரணமாக, மூளையின் பக்கவாட்டு பகுதியிலுள்ள, ரசாயன பொருள் சுரக்காததால், அல்சைமர் ஏற்படுகிறது. குறைந்த படிப்பு படித்தவர்கள், அதிக குண்டாக இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு, அல்சைமர் பாதிப்பு வரும் வாய்ப்புள்ளது. உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் மற்றும் ஹார்மோன் மாத்திரை எடுத்து கொள்பவர்களுக்கு, இந்த நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.

ஞாபக மறதி அல்சைமர் நோயை, முழுமையாக குணப்படுத்தக் கூடியது, குணப்படுத்த முடியாதது என, இரண்டு வகையாக பிரிக்கலாம். வைட்டமின் பி சத்து குறைவு காரணமாக வரும் ஞாபக மறதி நோய், முழுமையாக குணப்படுத்தக் கூடியது. ஆனால், அல்சைமர் மறதி நோயை, முழுவதுமாக குணப்படுத்த முடியாது.

அல்சைமர் அறிகுறிகள் என்ன?

எல்லோருக்கும் மறதி இருப்பது சகஜம் தான். ஆனால், மறதி இருக்கும் எல்லோருக்கும் அல்சைமர் நோய் பாதிப்பு என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. பேச்சில் மாறுபாடு தெரியும், சிலர் திக்கி திக்கி பேசுவர். பெயர்களை மறப்பது, உறவினர், நண்பர்களை யார் என சொல்ல முடியாமல் போய், இறுதியில் தான் யார் என்றே சொல்ல முடியாத நிலை ஏற்படும். பல் துலக்குவது எப்படி என தெரியாமல் போய்விடும். உடை அணிய தெரியாது. வீட்டின் குளியலறை எங்கிருக்கிறது என்பது மறந்து விடும்.

மாய நிலை: சிலருக்கு நோய் முற்றிய நிலையில், இல்லாத ஒன்று, கண் எதிரே இருப்பது போன்று பேசுவர். காதில் ஏதோ சத்தம் ஒலித்து கொண்டிருப்பதை போன்று உணருவர். ஏதோ பிதற்றுவர். மனநோயாளி போல் நடந்து கொள்வர்.

பாதுகாப்பு தேவை: அல்சைமர்  பாதிக்கப்பட்ட பலர், வீட்டிலிருந்து காணாமல் போய்விடுவர். எனவே, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பது அவசியமாகிறது. அவர்களை எங்கும் தனியாக அனுப்பக் கூடாது. அவர்கள் கையில் முகவரி, தொலைபேசி எண் போன்வற்றை எப்போதும் கொடுத்துவிடுவது நல்லது.

அல்சைமர் சிகிச்சை என்ன?:

பத்து ஆண்டுகளுக்கு முன் வரை, அல்சைமர் நோய்க்கு சிகிச்சை கிடையாது. ஆனால், இப்போது நல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே நோயை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். இதற்கு அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை.

அல்சைமர் தடுக்க வழி என்ன?: 

மூளைக்கு வேலை கொடுத்து, எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம், சோர்வுக்கு இடம் கொடுக்கக் கூடாது. கொழுப்பு நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். அல்சைமர் ஒரு நோய் என்றே தெரியாமல், முற்றிய நிலையில் தான் சிகிச்சைக்கு வருவார்கள். ஞாபக மறதி அதிகமாக இருந்தால், ஆரம்ப நிலை யிலேயே டாக்டரிடம் சென்று பரிசோதித்து கொள்வது நல்லது.

டாக்டர் சி. முத்தரசு | நரம்பியல் பேராசிரியர் | ராஜிவ் காந்தி அரசினர் மருத்துவமனை, | சென்னை < நன்றி-தினமலர் | www.dinamalar.com/>

நன்றி http://tn2016.blogspot.com/

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...