Purusha Lakshanam Movie Song Lyrics

 Sempattu Poove Song Lyrics in Tamil


 செம்பட்டுப் பூவே பாடல் வரிகள் 
படம் : புருஷ லட்சணம் 
பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
பாடல் வரிகள் : காளிதாசன் 
இசையமைப்பாளர் : தேவா

Sempattu Poove Song Lyrics in Tamil


ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே

ஸ்ரீரங்கக் காவிரியே….

பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே

பூமியின் தேவதையே….


ஆண் : மண்ணிலே ஒரு வெண்ணிலா

கலை வண்ணங்கள் இந்த பெண்ணிலா

குளிர் மேகம் உந்தன் கண்ணிலா

குயில் பாடும் கீதம் சொல்லிலா


ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே

ஸ்ரீரங்கக் காவிரியே….

பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே

பூமியின் தேவதையே….


ஆண் : காஞ்சி பட்டுடுத்தி

நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ

கால பிரம்மனவன் வழங்கிய பெண்ணினச் சீதனமோ

மண்ணிலே அந்த தேவன் சபை வந்து கூடும்

பல வாழ்த்துச் சொல்லி உன்னை பாடும்

புன்னகைதான் பொன்னகையோ கன்னிகை வா வா வா


ஆண் : செம்பட்டுப் பூவே வெண் மொட்டுத் தேரே

ஸ்ரீரங்கக் காவிரியே….

பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே

பூமியின் தேவதையே….


பெண் : பூவின் நெஞ்சுக்குள்ளே

புதுவித போதை துள்ளியதே…ஏ…..

காதல் பள்ளியிலே படித்திட

ஆசை சொல்லியதே….ஏ…..


பெண் : என்னவோ இது என்றும் இல்லாத மயக்கம்

இமை ரெண்டும் ஒட்டாமல் உறக்கம்

என் விழியில் உன் முகம்தான்

வென்றது வா வா வா


பெண் : செம்பட்டுப் பூவும் வெண் மொட்டுத் தேரும்

ஸ்ரீரங்கனாதருக்கே…ஹோய்

பொன் மொட்டு மானும் பூந்தட்டுத் தேனும்

என்னுயிர் ராமனுக்கே…ஹோய்


பெண் : மண்ணிலே வந்த வெண்ணிலா

இந்த கண்ணனைக் கொஞ்சும் பெண் நிலா

குளிர் மேகம் உந்தன் கண்ணிலா

குயில் கீதம் காதல் சொல்லிலா


ஆண் : ஆ…..ஆ……ஆ…செம்பட்டுப்பூவே

வெண் மொட்டுத் தேரே ஸ்ரீரங்கக் காவிரியே

பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே

பூமியின் தேவதையே….


Kakkai siraginile nandhalala lyrics


 காக்கை சிறகினிலே நந்தலாலா பாடல் வரிகள் 
படம் : புருஷ லட்சணம் 
பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
பாடல் வரிகள் : காளிதாசன் 
இசையமைப்பாளர் : தேவா

Kakkai siraginile nandhalala lyrics


பெண் : காக்கை சிறகினிலே

நந்தலாலா நீ வந்ததாலா

கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன

நந்தலாலா முத்தம் தந்ததாலா


ஆண் : ஆ…..பூவாலே மெத்தை விரிச்சு ஹோய்

தேனூறும் முத்தம் தெளிச்சு…..ஆ……ஆங்….

நாளாச்சி நாளாச்சி வாங்குது மேல் மூச்சு

காலோடு கால் தேய்ச்சு ஆசையும் சூடாச்சு

ஒண்ணோடு ஒண்ணாக என்னோடு நீயாச்சு


பெண் : காக்கை சிறகினிலே

நந்தலாலா நீ வந்ததாலா

கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன

நந்தலாலா முத்தம் தந்ததாலா


ஆண் : தூங்கி கிடந்த உள்ளம்

தோகை விரித்துக் கொண்டு

ஏங்கி தவிப்பது இன்று யாராலே

பெண் : தாங்கி பிடிக்கும் எண்ணம்

தாளம் அடிக்கும் வண்ணம்

ஓங்கி வளர்ந்திருந்த பூவாலே


ஆண் : அழகான மங்கை

ஒரு அதிகாலை கங்கை

அடி உனக்கே என் இன்பம் மொத்தமே

பெண் : காதோரம் காதோரம் மேலும் கூறு ஆதாரம்


ஆண் : காக்கை சிறகினிலே

நந்தலாலா நான் வந்ததாலா

கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன

நந்தலாலா முத்தம் தந்ததாலா


பெண் : ஆக்கப் பொறுத்த மனம்

ஆறப் பொறுக்கலையே

மூக்கு சிவப்பதென்ன வீணாக

ஆண் : காந்தம் இழுக்குதடி காதல் வழுக்குதடி

நீந்தி பிடிக்க வந்தேன் நானாக


பெண் : உயிரோடு தஞ்சம்

என் உடல் போடும் மஞ்சும்

நீ தினந்தோறும் முத்து குளிக்க

ஆண் : தாராளம் தாராளம்

தாகம் மனதினில் ஏராளம்


ஆண் : காக்கை சிறகினிலே

நந்தலாலா நான் வந்ததாலா

கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன

நந்தலாலா முத்தம் தந்ததாலா


பெண் : பூவாலே மெத்தை விரிச்சு ஹோய்

தேனூறும் முத்தம் தெளிச்சு…..

நாளாச்சி நாளாச்சி வாங்குது மேல் மூச்சு

காலோடு கால் தேய்ச்சு ஆசையும் சூடாச்சு

ஒண்ணோடு ஒண்ணாக என்னோடு நீயாச்சு


ஆண் : காக்கை சிறகினிலே நந்தலாலா

பெண் : நீ வந்ததாலா….

கன்னம் ரெண்டும் சிவந்ததென்ன நந்தலாலா

ஆண் : ம்ம்ம்ஹூம்…ஹூம்..ஹூம்


No comments:

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...