Pazhamudhircholai Enakkagathan Lyrics in Varusham 16

 படம்: வருஷம் 16
இசை: இளையராஜா
குரல்: KJ ஜேசுதாஸ்

பாடல்: வாலி

Pazhamudhircholai Enakkagathan Lyrics

 

 Pazhamudhircholai Enakkagathan Lyrics in Tamil

 பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்காக தான்
நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்டேன் தினம் காலை மாலையும்
நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்டேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்

பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்காக தான்

தூரத்தில் போகின்ற மேகங்களே
தூறல்கள் போடுங்கள் பூமியிலே
வேர் கொண்ட பூஞ்சோலை நீர் கொண்டு ஆட
ஏரியில் மீன் கோதும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களேன்
ஊர் விட்டு ஊர்சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே

பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்காக தான்

பந்தங்கள் யாவும் தொடர்கதை போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிடை போலிங்கு நெருங்கிய இதயங்கள்
பாலுடன் நெய்யுடன் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குழவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கம் எங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனமொரு மகிழ்ச்சியில் திளைத்திட

பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்காக தான்
நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்டேன் தினம் காலை மாலையும்
நான் தான் அதன் ராகம் தாளமும்
கேட்டேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம்

பழமுதிர் சோலை எனக்காக தான்
படைத்தவன் படைத்தான் அதற்காக தான்

No comments:

Nee Paartha Paarvaikkoru Nandri Hey Ram Song Translation

 Nee Partha Parvaikkoru Nandri Song Lyrics Translation Movie: Hey Ram Lyrics: Kamal Hassan, Jibanananda Das Singers: Asha Bhosle, Hariharan,...