எப்பவோ பெய்த மழைத்துளிகள்...


எப்பவோ                                                        
பெய்த மழைத்துளிகளில்
இப்போதும்
நனைகிறேன்
உன்
ஞாபகங்களுடன்...!


நீ...
வந்து போன பின்
தொற்றிக்கொண்டது
உன் ஞாபகங்கள்..
வெள்ளம்
வந்து போன பின்
தொற்றிக்கொண்ட
தொற்று நோய் போல....!



நீ...
இல்லாத
இரவுகளில்
அனைத்துக்கொள்கிறேன்
உன் ஞாபகங்களை.
இருளோடு
சேர்த்து...!
அடை மழையாய்
உன் ஞாபகங்கள்
பாதிக்குமா...?
ஏழை
விவசாயியின்
அறுவடை...

வறுமையான
என்
மனதிலே
உன் ஞாபகங்கள்
மட்டும்
செழுமையாக
பாலைவனத்தில்
பெய்த மழையாய்...!

Riyas

1 comment:

Asiya Omar said...

கவிதை மிகவும் அருமை,படங்களும் தான்.

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...