திருடிய ட்விட்ஸ்கள், உயரம் குறும்படம்..!!



ஆங்காங்கே திருடிய சில பதிவர்களின் வார்த்தைஜாலங்கள் சிறிய சிறிய ட்விட்ஸ்களாக..

உடன்பாடில்லையெனின் எளிதாய் ஒதுங்கிக்கொள்ளும், துண்டித்துக் கொள்ளும் வாய்ப்பிருப்பதையறிந்தும் அடித்துக்கொ’ல்’கிறோம் இணைய(வெட்டி)வாதங்களில்- ஈரோடு கதிர் 

'சிலர் அறிவுரைகளை கேட்கும் போது திருந்திவிட தோன்றுகிறது, அப்படியாவது அவர்கள் அறிவுரைகளை நிறுத்தி தொலைப்பார்களா என்று''- யாரோ

அப்பா(ம்மா) ஆவதில் இளமை(!) தொலைவதில்லை. இளைய சகோதர உறவுகளுக்கு குழந்தை பிறந்து பெரியப்பா(ம்மா) ஆகும் போது இளமை புட்டுக்கிட்டுப் போய்டுது- ஈரோடு கதிர்

மாண்புமிகு புரட்சிதலைவி அவர்கள் விரைவில் மதுவிலக்கை அமல்படுத்த இருப்பதாக வதந்தி உலவிவருவதால் அதற்கு முன் ஒரு முறையாவது இந்த பீர் என்று சொல்லபடுகிற உற்சாக பானத்தை குடித்துப்பார்த்துவிட நினைத்திருக்கிறேன்- அதிஷா 

காந்தி பிறந்ததற்கு வெள்ளைக்காரன் கவலைப்பட்டானானு தெரியலஆனால் இந்தியக்குடிமகன்கள் இப்போது பெருங்கவலையில் #oct 2 -ஈரோடு கதிர்

அதென்னமோ தெரியல! பரட்டைத் தலையும், தாடியும்தான் இப்போதெல்லாம் ஹீரோக்களின் அடையாளம் என்பதை எம்ஜிஆர், சிவாஜி படம்பார்த்து வளர்ந்த அம்மாக்கள் புரிந்துகொள்ளவே மாட்டேன் என்கிறார்கள்.- ஜீ 

சிம்கார்டுபோல் அவ்வப்போது மனதை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பிருந்தால் எப்படியிருக்கும்-ஈரோடு கதிர்

மேக்கப்பு என்கிறதே மானவாரியா மூஞ்சில அப்புறதுதானே? என அப்புராணியாக் கேக்கிற பொண்ணுங்க நம்ம நாட்டில ஏராளம்! அதுங்களைச் சொல்லிக் குற்றமில்லை.- ஜீ

உடல் நிலை சரியில்லாத போது கிடைக்கும் அட்வைஸ்களின் இம்சையை விட உடல் நிலையால் கிடைக்கும் இம்சை எவ்வளவோ மேல்.- கேபிள் சங்கர்

எல்லாக் காதல் கவிதைகளிலும் யாரோ ஒருத்தியின் வாசம் படிந்துதான் கிடக்கிறது சிலசமயம் அவள் அறிந்து பலசமயம் அறியாமல்- ஈரோடு கதிர்

எந்த திரைப்படம் உங்கள் இயல்பு வாழ்க்கையில் இரண்டு நாட்களுக்கு உங்கள் பணிகளின் ஊடே திரைப்படத்தின் காட்சிகள் உங்கள் மனக்கண்ணில் வந்து போனால் அந்த திரைப்படம் நல்ல திரைப்படம் என்பேன்- ஜாக்கிசேகர்

கடவுளே உனக்கு கருணையே இல்லையா.. மொக்கை மசாலா படங்களிடமிருந்து எங்களை காப்பாற்று யதார்த்த படமொக்கைகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்!- அதிஷா

“இந்த நாள் உன் கேலண்டர்லகுறிச்சு வச்சிக்கோ…” என்று தலைவர் பேசும் வசனம் (இந்த வசனத்தைப் பேசி தான் விஜய் தனது அப்பாவிடம் தனக்கும் நடிக்க வரும் என்று ப்ரூவ் செய்தாராம். ஐய்யோ ராமா!)- Babyஆனந்தன்

பார்த்து ரசித்த குறும்படமொன்று,,



5 comments:

Athisaya said...

எல்லாக் காதல் கவிதைகளிலும் யாரோ ஒருத்தியின் வாசம் படிந்துதான் கிடக்கிறது சிலசமயம் அவள் அறிந்து பலசமயம் அறியாமல்- ஈரோடு கதிர்ஃஃஃஃஃஃவணக்கம் சகோ...பதிவு அருமை.அதிலும்இப்பகிர்வு சூப்பர்.வாழ்த்துக்கள்.

Athisaya said...

எல்லாக் காதல் கவிதைகளிலும் யாரோ ஒருத்தியின் வாசம் படிந்துதான் கிடக்கிறது சிலசமயம் அவள் அறிந்து பலசமயம் அறியாமல்- ஈரோடு கதிர்ஃஃஃஃஃஃவணக்கம் சகோ...பதிவு அருமை.அதிலும்இப்பகிர்வு சூப்பர்.வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தொகுப்பு... ரசித்தேன்...
பகிர்வுக்கு நன்றி… தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

கடம்பவன குயில் said...

ரசிக்க வைத்த தொகுப்புகள்.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான தொகுப்பு! நன்றி!

இன்று என் தளத்தில்!
சென்ரியுவாய் திருக்குறள்
எம்புள்ளைய படிக்கவைங்க!
உடைகிறது தே.மு.தி.க
http://thalirssb.blogspot.in

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...