மழையும் குடையும்..!




வானிலிருந்து
மழையாகி
பூமிப்பெண்னை
முத்தமிடும்
பூரிப்போடு
வருகிறேன்..
இடையில்
தடையாய்
குடை நீ...!
தடை போட நீ
என்
மாமன் முறையோ..
அருவியாகி
ஆறாகி
கடலாகியேனும்
நுகர்ந்திடுவேன்
பூமிப்பெண்னை...
அப்போது நீ..
அ(ம)டக்கிக்கொண்டிருப்பாய்.

13 comments:

Raghu said...

க‌டைசி வ‌ரியை த‌விர்த்து, க‌விதை ந‌ல்லாயிருக்கு....ப‌ட‌மும் ;)

இராகவன் நைஜிரியா said...

வாவ்... அருமை..

மழை என்றாலே சுகம்தான்... இது அற்புதம்..

ஜெய்லானி said...

ஒ....ஹோ !!!

jillthanni said...

ம்ம்ம் நல்லாயிருக்குங்க
மழைக்கும் பீலிங்ஸ் :)))

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மழைமாதிரி
கொட்டிட்டீங்க,
கவிதையை!

Riyas said...

மிக்க நன்றி ரகு
மிக்க நன்றி இராகவன்
மிக்க நன்றி ஜெய்லானி
மிக்க நன்றி ஜில்தண்ணி
மிக்க நன்றி நிசாமுதீன்
உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்..

மேலும் ஓட்டு போட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் கோடி...

Unknown said...

அட ...அருமையான கவிதை..
பாராட்டுக்கள் ரியாஸ் ..

Asiya Omar said...

நல்லா எழுதறீங்க ரியாஸ்.

நாடோடி said...

க‌விதை ந‌ல்லா இருக்கு ரியாஸ்.. தொட‌ருங்க‌ள்.

yasar said...

அருமையான கவிதை,நல்லா எழுதறீங்க ரியாஸ்.

ஸாதிகா said...

ஆஹா,அருமை.கவிதையை அழகுற செதுக்கித்தந்து இருக்கின்றீர்கள் ரியாஸ்.

Riyas said...

மிக்க நன்றிங்க,,,
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.
கே.ஆர்.பி.செந்தில்
நாடோடி
யாசர்
ஸாதிகா அக்கா

அன்புடன் மலிக்கா said...

ரியாஸ் கவிதை நல்லாயிருக்கு. கடைசி வரியில் சற்று நிரடல்.

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...