என் பிரபஞ்ச அழகி...!




அழகாகவே சிணுங்குகின்றன
உன் கொலுசுகளும்
வளையல்களும்
உன்னைப்போலவே...


இன்றிரவு
இரட்டையிருள்
நீயுமில்லை
நிலவுமில்லை...


உன் பார்வை மழை
பொழியட்டும்
போகும் வழியெங்கும்
செழிக்கும்
என் விவசாய தேசம்...


ஆண்டுக்கொரு அழகி
அணிவகுத்தாலும்
என்றைக்கும் நீதான் அழகி
என் பிரபஞ்சத்தில்....



14 comments:

Yaathoramani.blogspot.com said...

இன்று இரவு இரட்டை இருள்
வித்தியாசமான வார்த்தைப்பிரயோகம்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

//வளையல்களும்
உன்னைப்போலவே...//

Unknown said...

கவிதை எளிமையாய் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.

மதுரை சரவணன் said...

//அழகாகவே சினுங்குகின்றன
உன் கொலுசுகளும்
வளையல்களும்
உன்னைப்போலவே...//

arumai...vaalththukkal

நிரூபன் said...

இன்றிரவு
இரட்டையிருள்
நீயுமில்லை
நிலவுமில்லை...//

வணக்கம் சகோ, அருமையான கவிதை, இவ் வரிகளே கவிதையில் அழகினை அதிகரிக்கும் வரிகள். உவமான, உவமேயங்களோடு அழகி எங்களையும் ரசிக்க வைக்கிறாள். பிரபஞ்ச அழகி அழகிய வார்த்தைகளோடு, படிப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் சொல்லோவியங்களால் மிளிர்கிறாள்.

Unknown said...

நல்லா இருக்கு பாஸ் கவிதை...
தொடருங்க...

சி.பி.செந்தில்குமார் said...

>>>>

அழகாகவே சினுங்குகின்றன

சிணுங்குகின்றன

சி.பி.செந்தில்குமார் said...

>>>>>உன் பார்வை மழை
பொழியட்டும்
போகும் வழியெங்கும்
செழிக்கும்
என் விவசாய தேசம்...

கலக்கல்

சி.பி.செந்தில்குமார் said...

>>>இன்றிரவு
இரட்டையிருள்
நீயுமில்லை
நிலவுமில்லை...



அமாவசையின்போது காதலனின் ஆசை

சி.பி.செந்தில்குமார் said...

>>>
ஆண்டுக்கொரு அழகி
அனிவகுத்தாலும்


அணிவகுத்தாலும்

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை...

Riyas said...

@ சி.பி.செந்தில்குமார்.

நன்றி. எழுத்து பிழைகளை திருத்திவிட்டேன்.

தூயவனின் அடிமை said...

//ஆண்டுக்கொரு அழகி
அணிவகுத்தாலும்
என்றைக்கும் நீதான் அழகி
என் பிரபஞ்சத்தில்....//


நல்ல வரிகள்.

Anonymous said...

உங்கள் பிரபஞ்ச அழகி... அழகோ அழகு

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...