வயிறு..!

வயிற்றில் 99 டிகிரி சூடு இருக்கும்
இயற்கையாக ஹைட்ரோ குளோரிக் அசிட் சுரக்கும்.
எது உள்ளே சென்றாலும் அசிடும் சூடும் சேர்ந்து ஒரு நொதி நிலையை உண்டாகும்.பின் அவற்றில் இருந்து கனிமங்கள் சத்துக்கள் எல்லாம் பிரிக்க பட்டு அவை தனியாகவும் கழிவு தனியாகவும் பிரிந்து அது அது எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்று விடும்.கழிவு சரியாக பிரிக்க பட முடியாமல் போகிறதென்றால், கழிவு சரியாக வெளியேற முடியாமல் போகிறதென்றால் உங்களுக்கு சுகமில்லை என்று அர்த்தம். எதோ ரிப்பேர் ஆகிவிட்டது.

நீர் ஆகாரம் 40 நிமிடத்தில் ஜீரணித்து விடும்
திட ஆகாரம் 4 மணி நேரத்தில் ஜீரணித்து விடும்.
கொழுப்பு சத்து மட்டும் பிரிக்க படாத பாடு படும் வயிறு. நீரும் எண்ணையும் சேராது. மிதக்கும். எண்ணையை சிறிது சிறிதாக சரி செய்வதற்கு நிறைய சிரம படும்.

ஏற்கனவே வயிற்றில் இயற்கையாய் அசிட் இருக்கிறது. இதில் காரம் அதிகம் சேர்க்க சேர்க்க வயிற்றில் புண் வரும். எதுவும் சாப்பிடவில்லை என்றாலும் புண் வரும். பல் விலக்கியும் வாயில் இருந்து வாடை வந்தால் அல்சர் என்று அர்த்தம்.அந்த புண் வாடை குடல் வழியாக வாயில் வெளியே தெரிகிறது.
மனசை பத்திரமாக பாதுகாப்பது போல
வயிற்றையும் பத்திரமாக பாதுகாத்து கொள்ளுங்கள்.
வாயை கட்டு படுத்தினால் உடம்பை கட்டு படுத்தலாம். நோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம..

வீட்டில் ஒரு முரட்டு பிளாஸ்டிக் கவரை எடுத்து கொள்ளுங்கள்.காலை எழுந்தது முதல் இரவு வரை நீங்கள் சாப்பிடும் அனைத்திலும் ஒரு பங்கு அதில் கொட்டி வையுங்கள். மறுநாள் எழுந்து கவரை திறந்து பாருங்கள். நினைத்தாலே வாடை குமட்டுகிறதா, அப்போ வயிறு என்ன பாவம் செய்தது. அவ்வப்போது பிளாஸ்டிக் கவரை கழுவுவதாக நினைத்து மிதமான சூட்டில் வெந்நீர் குடியுங்கள். 3 லிட்டர் நீர் தேவை ஒரு நாளைக்கு. 1லிட்டர் வெந்நீராக இருக்கட்டும் உங்கள் வாழ்வில் அதுவும் இரவு சிறந்தது...

7 comments:

K.s.s.Rajh said...

நல்ல தகவல்கள்

SURYAJEEVA said...

இன்னும் பல தகவல்கள் சேர்த்திருக்கலாம்.. அடுத்த பதிவில் தொடர்ச்சி போடுங்கள்... படிக்கலாம்

'பரிவை' சே.குமார் said...

நல்ல தகவல்கள்.

Mohamed Faaique said...

அருமையான தகவல்கள்....

MANO நாஞ்சில் மனோ said...

தகவலுக்கு நன்றி....

M.R said...

அருமையான மருத்துவ குறிப்பு பகிர்வுக்கு நன்றி நண்பரே

Anonymous said...

நல்ல தகவல்கள்...Extra plate Briyaani Cancel....

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...