பேஸ்புக் (facebook) தேவைதானா...?

இன்றைய நவீன உலகில் மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, வீடு இவற்றுக்கு மேலதிகமாக இணையமும் ஒன்றாகிவிட்டது. அவ்வளவு தூரம் மக்களை இந்த இணையம் கவர்ந்திருக்கிறது அடிமைப்படுத்தியிருக்கிறது. இணையத்தினூடே பல உபயோகங்கள், நன்மைகள் இருந்தாலும் பல தீமைகளும் கெட்ட விளைவுகளும் இருப்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. இன்றைய காலகட்டத்தில் பலரின் பணம் சம்பாதிக்கும் ஊடகமாகவும் இணையம் பயன்படுகிறது.

தொழிநுட்ப வளர்ச்சிகள் கண்டுபிடிப்புகள் என்பது மனிதனுக்கு நன்மை பயக்கும் நோக்கத்திலேயே உருவாக்கப்படுகிறது. ஆனாலும், அதன் மூலம் தீமையான விடயங்களும் நிகழாமல் இல்லை.. இன்றைய நாட்களில் இணையம் மூலம் அதி வேகமாக கோடிக்கணக்கானோரை ஆக்கிரமித்திருக்கும் இணையத்தளம் என்றால் அது பேஸ்புக் தான். அடியேனும் அதைப்பயன்படுத்துபவர்களின் ஒருவந்தான் ஆனாலும் அதுவே கதி என இருந்ததில்லை.

பேஸ்புக் உருவாக்கப்பட்டதன் நோக்கமே நண்பர்களை உருவாக்கிக்கொள்ளவும் அவர்களுக்குள் நட்பை பேனிக்கொள்ளவும், நல்ல கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் வேறு சில நல்ல உபயோகங்களுக்காகவுமே. ஆனால், இன்று பாடசாலை செல்லும் மாணவர்கள் அதிகமான நேரத்தை அதிலேயே செலவிடுகிறார்கள் அவர்களுக்கு அதிலென்ன அவ்வளவு தேவையிருக்கிறது, அதன் மூலம் அவர்களுக்கென்ன லாபம். இல்லவேயில்லை இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என சொல்லப்படுவோர் பேஸ்புக்கிக்குள் தனது பொண்ணான நேரத்தை தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதிலும் ஆண்களைவிட பெண்களே அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக பாடசாலை மற்றும் காலேஜ் செல்லும் பெண்கள். ஆண் பிள்ளைகள் வெளியில் சுற்றிதிரிவதால் அவர்களின் ஈடுபாடு இதில் கொஞ்சமே.. பெண் பிள்ளைகள் அவ்வாறில்லை வீட்டிலேயே அதிக நேரத்தை கழிப்பதால் அவர்களே இதன்பால் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். வீன் அரட்டை, புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்தல் போன்றவற்றிலேயே அதிகம் ஈடுப்டுகிறார்கள். வீட்டிலே இணைய வசதி இல்லாவிட்டாலும் நெட்கபே சென்று பேஸ்புக் பயண்படுத்துபவர்களும் நம் சமூகத்தில் அதிகமதிகம். முன்பெல்லாம் பொழுது போக்கிற்கு விளையாடுவது, புத்தகம் வாசிப்பது போன்றவை. ஆனால் இன்று computer game, chatting போன்றவை காலமாற்றத்தின் விளைவுகள்

இப்போது அதிகமாக பரவிவரும் ஒரு விடயம் ஆபாசம்,செக்ஸ், செக்ஸ் அரட்டை. இது அதிகமாக பெண்களை குறி வைத்தே பதியப்படுகிறது. எவ்வளவுதான் கட்டுப்பாடுகள் போட்டு பெண் பிள்ளைகளை வளர்த்தாலும் அவர்கள் ஆண்களின் வசீகர, அரட்டை பேச்சுகளில் இலகுவில் மயங்கிவிடுவார்கள் மயங்க வைக்க முடியும். இப்போது பேஸ்புக்கில் பல ஆண்கள் பெண் பெயரில் உலவுகிறார்கள் இந்த லிங்க கிளிக் செய்து பாருங்கள் இதில் பெண்களின் படத்துடன் பெயருடன் இருப்பவர்கள் உண்மையில் ஆண்கள்.
https://www.facebook.com/home.php#!/profile.php?id=100001466955158
https://www.facebook.com/?ref=home#!/profile.php?id=100002491752131

இவர்கள் குறி வைப்பது இளம் வயது பெண்களை ஆரம்பத்தில் நல்ல முறையில் chat செய்து பின் செல்ல செல்ல கொஞ்சமாக கொஞ்சமாக ஆபாசத்தையும் வார்த்தைகளில் வக்கிரத்தையும் கலந்து பெண்களை ஏமாற்றுகிறார்கள். பெண் பிள்ளைகளும் இவர்களும் பெண் பிள்ளைகள்தானே என்று வெட்கமின்றி சகல அந்தரங்க தகவல்களையும் சொல்லிவிடுகிறார்கள். இவர்களின் chat. பதியப்பட்டு youtube போன்ற தளங்களுக்கு வீடியோவாக ஏற்றப்படுவதும் இவர்களின் புகைப்படங்களும் வெளிப்படுத்தப்படுவதும் பலருக்கு தெரியாத உண்மை.

பெண்களுக்கு பேஸ்புக் தவிர்க்கமுடியாது என்று கருதினால் குறைந்தபட்சம் தனது புகைப்படம், முகவரி, குடும்பத்தினரின் புகைப்படம், மேலும் தனிப்பட்ட விசயங்களை அதில் பகிராமல் இருப்பதே மிகச்சிறந்தது. ஆங்கிலேயர்கள் எதனையாவது கண்டுபிடிப்பது இலாபம் ஈட்டும் நோக்கில். ஆனால் அதனை பயன்படுத்துவதால் சீரழிவது நம் சமூகம்தான். செல்போன் களுக்கும் இதே நிலைமைதான். பேசுவதற்கென்று கண்டுபிடித்தவை இன்று பலான பலான விஷயங்களுக்கெல்லாம் பயன்படுகிறது. நம் பொண்ணான நேரத்தை வெறுமனே பேஸ்புக் அரட்டைகளில் செலவழிக்காமல் நம் வாழ்க்கைக்கு தேவையான பயனளிக்கக்கூடிய தேடல்களின் பக்கம் இன்றைய இளைஞர் யுவதிகளின் கவனம் திரும்ப வேண்டும். இதற்கு பெற்றோர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்...




8 comments:

Hariharan said...

மெரினா நிகழ்வு சூன்26ன் ஆரம்பமும் முகநூலில் தான் ஆரம்பித்தது. நண்பர் எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்ற பொழுது தோன்றியதே மெழுகுதிரி நினைவேந்தல்..

Riyas said...

@ ஹரிஹரன்.

//மெரினா நிகழ்வு சூன்26ன் ஆரம்பமும் முகநூலில் தான் ஆரம்பித்தது//

ஆமாம் இப்படியான நல்லவிடயங்களும் பேஸ்புக் மூல்ம் நடைபெறுகிறதுதான்.

வருகைக்கு நன்றி

! பனித்துளிசங்கர் ! said...

/////பெண்களுக்கு பேஸ்புக் தவிர்க்கமுடியாது என்று கருதினால் குறைந்தபட்சம் தனது புகைப்படம், முகவரி, குடும்பத்தினரின் புகைப்படம், மேலும் தனிப்பட்ட விசயங்களை அதில் பகிராமல் இருப்பதே மிகச்சிறந்தது. //////

நல்ல கருத்துதான் நண்பரே . உண்மை என்னவென்றால் இந்தத் தளம் உலகத்தில் மிகவும் பயனுள்ள ஒன்றாக ஒரு கட்டத்தில் இருந்து வந்தது ஆனால் தற்சமயம் அனைவரும் அறிந்ததே . பகிர்ந்தமைக்கு நன்றி

சென்னை பித்தன் said...

//நம் பொண்ணான நேரத்தை வெறுமனே பேஸ்புக் அரட்டைகளில் செலவழிக்காமல் நம் வாழ்க்கைக்கு தேவையான பயனளிக்கக்கூடிய தேடல்களின் பக்கம் இன்றைய இளைஞர் யுவதிகளின் கவனம் திரும்ப வேண்டும். இதற்கு பெற்றோர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்... //
’ நச்’ சுன்னு சொல்லிட்டீங்க!நன்று!

shanmugavel said...

பெருவளர்ச்சி பெற்றுவிட்டது.தவிர்க்கமுடிவது கஷ்டம்தான்.நல்ல பதிவு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பயனுள்ள அறிவுரைகளைச்சொல்லும் நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

நிரூபன் said...

பேஸ் புக் மூலமாக இடம் பெறும் துஷ் பிரயோகங்களைச் சுட்டிக் காட்டி விழிப்புணர்வுப் பதிவொன்றினைத் தந்திருக்கிறீங்க.

நன்றி சகோ

Priya said...

மிகவும் பயனுள்ள பதிவு.

Rayilin oligal Song lyrics in English and Tamil

Railin Oligal Lyrics in Blue Star  Male : Rayil-in oligal Unaiyae theduthae Adhirum paaraiyaai Idhayam aaduthae Unthan kai veesidum Poi jaad...